என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • இந்தியை திணித்து தமிழை அழிக்க பாஜக அரசு முயற்சிப்பதாக ஆளும் திமுக அரசு குற்றம் சாட்டி வருகிறது.
    • மராத்தி தான் மும்பையின் மொழி என்று MLA ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் வாழ்வதற்கு மராத்தி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையின் மூலம் இந்தியை திணித்து தமிழை அழிக்க பாஜக அரசு முயற்சிப்பதாக ஆளும் திமுக அரசு குற்றம் சாட்டி வரும் நிலையில், ஆர்.எஸ்.எஸ். தலைவரின் இக்கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பையாஜி ஜோஷி, "மும்பையில் ஒரு மொழி பேசுபவர்கள் மட்டும் கிடையாது. இங்கு ஒவ்வொரு பகுதிகளிலும் வெவ்வேறு மொழிகளை பேசுபவர்கள் இருக்கிறார்கள். காட்கோபர் பகுதி மக்கள் குஜராத்தி பேசுகிறார்கள். ஆதலால் நீங்கள் மும்பையில் வசித்தால் மராத்தி மொழி கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை" என்று தெரிவித்தார்.

    இதே நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா அமைச்சர் மங்கள் பிரபாத் லோபா கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

    மராத்தி குறித்து பையாஜி ஜோஷி தெரிவித்த கருத்துக்கு சிவசேனா (உத்தவ் தாக்கரே), காங்கிரஸ் காட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன

    இந்த விவகாரம் குறித்து பேசிய எம்.பி. சஞ்சய் ராவத், "பாஜகவின் கொள்கை வகுப்பாளரும் ஆர்.எஸ்.எஸ் தலைவருமான பையாஜி ஜோஷி, மராத்தி மும்பையின் மொழி இல்லை என்று கூறியிருக்கிறார். அவர் கொல்கத்தாவிற்கு சென்று பெங்காலி அவர்களின் மொழி இல்லை என்று கூறுவாரா? அவர் சென்னைக்கு சென்று தமிழ் அவர்களின் மொழி இல்லை என்று கூறுவாரா?" என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

    • இப்போதெல்லாம் திரைப்படங்கள் மூலம் அவுரங்கசீப் பிம்பம் சிதைக்கப்படுகிறது.
    • அவுரங்கசீப் பல கோயில்களைக் கட்டினார் என்றும், அவரது படையில் பல இந்துக்கள் தளபதிகளாக இருந்தனர் என்றும் அபு ஆஸ்மி பேசியிருந்தார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தின் சமாஜ்வாதி கட்சித் தலைவராக பொறுப்பு வகித்துவரும் எம்எல்ஏ அபு ஆஸ்மி. இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 17ஆம் நூற்றாண்டின் முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் ஒரு நல்ல நிர்வாகி என்று பேசியிருந்தார்.

    ஔரங்கசீப்பை நான் ஒரு கொடூரமான, சகிப்புத்தன்மையற்ற ஆட்சியாளராகக் கருதவில்லை. இப்போதெல்லாம் திரைப்படங்கள் மூலம் அவுரங்கசீப்  பிம்பம் சிதைக்கப்படுகிறது.

    அவுரங்கசீப் பல கோயில்களைக் கட்டினார் என்றும், அவரது படையில் பல இந்துக்கள் தளபதிகளாக இருந்தனர் என்றும் அபு ஆஸ்மி பேசியிருந்தார்.

    இது அம்மாநில அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவுரங்கசீப்பை புகழ்ந்து பேசிய அபு ஆஸ்மி மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கொந்தளித்தார்.

    இதைத்தொடர்ந்து காவல்நிலையங்களில் அபு அஸ்மி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் இன்று தொடங்கிய மகாராஷ்டிர சட்டமன்றக் கூட்டத்தொடரில் எம்எல்ஏக்கள் அபு அஸ்மி பிரச்சனையை எழுப்பினர்.

    அவுரங்கசீப்பை புகழ்ந்து பேசியதற்காக அபு ஆஸ்மியை அவையில் இடைநீக்கம் செய்யும் தீர்மானத்தை பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் கொண்டு வந்தார்.

    இந்த தீர்மானம் அவையில் நிறைவேற்றப்பட்டு முழு கூட்டத்தொடர் முழுவதும் அபு ஆஸ்மி இடைநீக்கம் செய்யப்பட்டார். அபு அஸ்மி கருத்துக்கு இந்தியா கூட்டணியில் உள்ள உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    • உணவு, சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் தனஞ்சே முண்டேயின் ஆதரவாளர் வால்மிக் கராட் கைது செய்யப்பட்டார்.
    • குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் உள்ள சந்தோஷ் தேஷ்முக் மீது சிறுநீர் கழிப்பதும் பதிவாகியுள்ளது.

    கொலை 

    மகாராஷ்டிரா மாநிலம், பீட் மாவட்டத்தில் உள்ள மசோஜோக் கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் (சார்பாஞ்ச்) ஆக இருந்தவர் சந்தோஷ் தேஷ்முக். இவர் கடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி ஆறு பேரால் காரில் கடத்தப்பட்டு, அன்று இரவே கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்.

    இந்த கொலை மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த படுகொலையில் தொடர்புடைய உணவு, சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் தனஞ்சே முண்டேயின் ஆதரவாளர் வால்மிக் கராட் கைது செய்யப்பட்டார்.

    தனஞ்சே முண்டே

     

    பின்னணி

    மசோஜோக் கிரமத்தைச் சுற்றி அமைந்த காற்றாலை கம்பெனிகளை மிரட்டி வால்மிக் கராட், கோடிக்கணக்கில் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதை அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் என்ற முறையில் சந்தோஷ் தேஷ்முக் எதிர்த்து வந்தார்.

    இதன் பின்னணியிலேயே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. வால்மிக் கராட் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் தனஞ்சே முண்டே பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வந்தன.

    ஆளும் பாஜக கூட்டணியில் இடம்பெற்ற அஜித் பவாரின் தேசியவாத காங்கிரசில் முக்கிய தலைவராக இருப்பவர் தனஞ்சே முண்டே. எனவே அஜித் பவார் அவருக்கு ஆதரவு அளித்து வந்தார். முதல்வர் தேவேந்திர பட்நாவிஸும் பொறுமை காத்தார்.

    குற்றப்பத்திரிகை

    ஆனால் சந்தோஷ் தேஷ்முக் கொலை தொடர்பான 15 வீடியோக்கள் மற்றும் 8 புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின. போலீஸ் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட வீடியோ ஒன்றில், அரை நிர்வாணமாக இருக்கும் சந்தோஷ் தேஷ்முக்கை குற்றம்சாட்டப்பட்டவர்கள் கியாஸ் குழாய், மரக்கட்டைகள், கூர்மையான ஆயுதங்கள் கொண்டு தாக்குவது பதிவாகியுள்ளது.

    மற்றொரு வீடியோவில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் உள்ள சந்தோஷ் தேஷ்முக் மீது சிறுநீர் கழிப்பதும் பதிவாகியுள்ளது. குற்றப்பத்திரிகை வெளியான நிலையில் இந்த கொலை மக்களிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தனஞ்சே முண்டே பதவி விலக வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்தது.

     

     

    பதவி விலகல்

    எனவே இவ்விவகாரம் குறித்து முடிவு செய்ய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உயர் மட்ட கூட்டத்தைக் கூட்டினார். இதில் அஜித்பவார், சுனில் தட்கரே, தனஞ்சே முண்டே ஆகியோர் கலந்து கொண்டனர். நிலைமை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    தொடர்ந்து அமைச்சர் பதவியிலிருந்து விலகும்படி தனஞ்சே முண்டேயிடம் பட்நாவிஸ் கேட்டுக்கொண்டார். இதையடுத்து முண்டே தனது அமைச்சர் பதவியை இன்று (மார்ச் 04) ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

    பதவி விலகல் குறித்து தனஞ்சே முண்டே வெளியிட்டுள்ள அறிக்கை "நான் மிகவும் நான் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன், மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

    • அதானி குழுமம் பங்குச் சந்தையில் முறைகேடு செய்ததாக ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டி இருந்தது.
    • செபி முன்னாள் தலைவர் மாதபி புரி புச் மீது வழக்கு பதிவு செய்ய மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

    அதானி குழுமம் பங்குச் சந்தையில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி தலைவர் மாதபி பூரி புச்-க்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டி இருந்தது.இந்த விவகாரத்தில் மாதபி பூரி புச் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாக வலியுறுத்தினார்

    அதன்படி, செபி முன்னாள் தலைவர் மாதபி புரி புச் மற்றும் 5 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மும்பை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. செபி முன்னாள் தலைவர் மாதபி புரி புச் மற்றும் 5 பேர் மீது மீது பங்குச் சந்தை மோசடி மற்றும் ஒழுங்குமுறை மீறல்கள் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி சஷிகாந்த் ஏக்நாத் ராவ் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி 30 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று பத்திரிகையாளர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் செபி மேல்முறையீடு செய்தது.

    இந்நிலையில், பங்குச் சந்தை முறைகேடு மற்றும் ஒழுங்குமுறை மீறல் புகாரில் செபி முன்னாள் தலைவர் மாதவி பூரி புச் உள்பட 6 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு நடவடிக்கை எடுக்க 4 வாரம் தடை விதித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    • மகாராஷ்டிரா நெடுஞ்சாலையில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
    • குறுக்கே வந்த பைக்.பைக் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் பேருந்தை திரும்பியுள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் குறுக்கே வந்த பைக் மீது மோதாமல் இருக்க பேருந்தை திருப்பிய ஓட்டுநரின் செயலால், சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தின் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    லட்டூர்-நான்டெட் நெடுஞ்சாலையில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பைக் ஓட்டி வந்த ஒருவர் திடீரென சாலையை கடக்க முயன்றுள்ளார். இதனை பார்த்த ஓட்டுநர் பைக் மீது மோதாமல் இருக்க பேருந்தை திரும்பியுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 15 முதல் 20 பேர்வரை காயமடைந்தனர்.

    • பெண் அணிந்திருந்த மூக்குத்தி, கம்மல், ஒரு பவுன் செயின் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
    • பெண் கூறிய அடையாளங்களை வைத்து குற்றவாளிகள் 2 பேரையும் சில மணி நேரங்களிலேயே பிடித்து கைது செய்தனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் புனே ஷிரூர் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் தனது ஆண் உறவினர் ஒருவருடன் வீட்டின் அருகே உள்ள ஒதுக்குப்புறமான இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அவர்கள் இருவரையும் செல்போனில் படம் பிடித்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் எங்களை ஏன் படம் பிடிக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினர்.

    அப்போது வாலிபர்கள் 2 பேரும் தாங்கள் வைத்திருந்த கத்தியை காட்டி அவர்கள் 2 பேரையும் நெருக்கமாக இருக்க சொல்லி கட்டாயப்படுத்தி மிரட்டினர். அவர்கள் நெருக்கமாக இருந்ததை படம் பிடித்து உறவினர்களுக்கு அனுப்பி விடுவோம் என மிரட்டினார்கள்.

    அந்த வாலிபரை அங்கிருந்து அடித்து விரட்டி விட்டு அந்த இளம்பெண்ணை 2 பேரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அந்த பெண் அணிந்திருந்த மூக்குத்தி, கம்மல், ஒரு பவுன் செயின் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதனால் செய்வதறியாமல் தவித்த இளம்பெண் 112 என்ற எண்ணிற்கு போன் செய்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து ரஞ்சன்கான் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பெண் கூறிய அடையாளங்களை வைத்து குற்றவாளிகள் 2 பேரையும் சில மணி நேரங்களிலேயே பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த வாரம் புனே பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த இளம்பெண்ணை அரசு பஸ்சுக்குள் வைத்தே வாலிபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் மீண்டும் உறவினர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • யாத்திரையில் பங்கேற்ற அமைச்சரின் மகள் மற்றும் தோழிகளிடம் சிலர் அத்துமீறி உள்ளனர்.
    • எனது மகளுக்கே பாதுகாப்பு இல்லாவிட்டால் மற்றவர்களின் நிலை என்னவாகும் ? என்று கேள்வி எழுப்பினார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் தனது மகளை இளைஞர்கள் சிலர் ஈவ்டீசிங் செய்ததாக மத்திய அமைச்சர் ரக்ஷா கட்சே காவல் நிலையத்தில் நேற்று புகார் தெரிவித்தார்.

    மகா சிவராத்திரியின்போது நடந்த சாந்த் முக்தாய் யாத்திரையில் பங்கேற்ற அமைச்சரின் மகள் மற்றும் தோழிகளிடம் சிலர் அத்துமீறி, அவர்களை தரத்தி வீடியோ எடுத்துள்ளனர்.

    இதுதொடர்பாக மத்திய அமைச்சர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர்,"எனது மகளுக்கே பாதுகாப்பு இல்லாவிட்டால் மற்றவர்களின் நிலை என்னவாகும் ? என்று கேள்வி எழுப்பினார்.

    மேலும், மகாராஷ்டிராவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. பல ணெ்பகள் முன்வர தயங்குகிறார்கள், ஆனால் நாம் அமைதியாக இருக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை தேடி வந்தனர்

    இந்நிலையில், மத்திய அமைச்சர் ரக்ஷா கட்சேவின் மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த 3 சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    • இன்று அதிகபட்சமாக 73,649.72 புள்ளிகள் வரை உயர்ந்து வர்த்தகம் ஆனது.
    • குறைந்தபட்சமாக 72,784.54 புள்ளிகளில் வர்த்தகமானது.

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 1,414.33 புள்ளிகள் சரிந்து 73,198.10 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    பங்குச் சந்தைகளுக்கு சனி மற்றும் ஞாயிறு விடுமுறை. இன்று காலை 9.15 மணிக்கு வர்த்தகம் தொடங்கியது. வெள்ளிக்கிழமை வர்த்தக நிறைவு பெற்றதைவிட சென்செக்ஸ் புள்ளிகள் சுமார் 129 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 73,427.65 புள்ளிகளுடன் இன்று காலை வர்த்தகம் தொடங்கியது.

    இன்று அதிகபட்சமாக 73,649.72 புள்ளிகள் வரை உயர்ந்து வர்த்தகம் ஆனது. பின்னர் சரிவதும், ஏறுவதுமாக இருந்தது. குறைந்தபட்சமாக 72,784.54 புள்ளிகளில் வர்த்தகமாகி இறுதியில் 112.16 புள்ளிகள் சரிவடைந்து 73,085 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    மும்பை பங்குச் சந்தையின் முக்கிய 30 பங்குகளில் டெக் மஹிந்திரா, டாடா ஸ்டீல், சொமேட்டோ, டாடா மோட்டார்ஸ், பவர் கிரிட் கார்ப், டைடன், அல்ட்ரா டெக் சிமெண்ட், என்.டி.பி.சி., மஹிந்திரா அண்டு மஹிந்திரா, கோடக் மஹிந்திரா, எல் அண்டு டி, எஸ்பிஐ, இன்போசிஸ், பாரதி ஏர்டெல், டிசிஎஸ் நிறுவன பங்குகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன.

    ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், ஹெச்.டி.டிஃப்.சி. பேங்க், இந்துஸ்தான் யுனிலிவர், ஹெச்.சி.எல். டெக்னாலாஜிஸ், மாருதி சுசுகி, ஆக்சிஸ் பேங்க், பாஜாஜி பின்செர்வ், அதானி போர்ட்ஸ், நெஸ்லே இந்தியா, ஆசியன் பெயின்ட்ஸ், இந்துஸ்இந்த் பேங்க் நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு சென்செக்ஸ் போன்று இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி இன்று 5.40 புள்ளிகள் சரிவை சந்தித்தது.

    கடந்த வெள்ளிக்கிழமை நிஃப்டி 420.35 புள்ளிகள் சரிந்து 22,124.70 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 22,194.55 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. அதிகபட்சமாக 22,261.55 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 22,004.70 புள்ளிகளிலும் வர்த்தமானது. இறுதியாக 5.40 புள்ளிகள் சரிந்து 22,119.30 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    • எனது மகளுக்கே பாதுகாப்பு இல்லாவிட்டால் மற்றவர்களின் நிலை என்னவாகும் ?
    • பல ணெ்பகள் முன்வர தயங்குகிறார்கள், ஆனால் நாம் அமைதியாக இருக்கக்கூடாது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் தனது மகளை இளைஞர்கள் சிலர் ஈவ்டீசிங் செய்ததாக மத்திய அமைச்சர் ரக்ஷா கட்சே காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

    தனது மகள் அவரது நண்பர்கள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது இளைஞர்கள் சிலரால் ஈவ்டீசிங் செய்யப்பட்டதாக மத்திய அமைச்சர் புகார் அளித்துள்ளார்.

    இதுகுறித்து கூறிய மத்திய அமைச்சர்,"எனது மகளுக்கே பாதுகாப்பு இல்லாவிட்டால் மற்றவர்களின் நிலை என்னவாகும் ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலும், மகாராஷ்டிராவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. பல ணெ்பகள் முன்வர தயங்குகிறார்கள், ஆனால் நாம் அமைதியாக இருக்கக்கூடாது என்று அவர் குறிப்பிட்டார்.

    • மீன்பிடி படகில் அதிகாலை 3 முதல் 4 மணியளவில் திடீரென தீப்பிடித்தது.
    • இதனால் படகில் இருந்தவர்கள் அலறி கூச்சலிட்டனர்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தின் ராய்காட் மாவட்டத்தில் அலிபாக் நகரில் ஆக்சி கடற்கரை பகுதியில் இருந்து 7 கடல் மைல் தொலைவில் மீன்பிடி படகு ஒன்று சென்று கொண்டிருந்தது.

    நேற்று அதிகாலை 3 முதல் 4 மணியளவில் அந்தப் படகு திடீரென தீப்பிடித்துக் கொண்டது. இதனால் படகில் இருந்தவர்கள் அலறி கூச்சலிட்டனர்.

    தகவலறிந்து இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய கடற்படை வீரர்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் படகில் இருந்த 18 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனை ராய்காட் மாவட்ட எஸ்.பி. உறுதிப்படுத்தினார்.

    சம்பவத்தின்போது, அந்த வழியே சென்ற இந்திய கடலோர காவல் படையைச் சேர்ந்த சாவித்ரிபாய் புலே என்ற கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. இந்த மீன்பிடி கப்பல் தீப்பிடித்து எரிந்தபோது அதனை ரோந்து கப்பலில் இருந்தவர்கள் பார்த்துள்ளனர். உடனே நிலைமையை உணர்ந்து மீனவர்கள் அனைவரையும் மீட்கும் பணியை மேற்கொண்டனர். இதில் 18 மீனவர்களும் மீட்கப்பட்டு மற்றொரு மீன்பிடி படகில் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    • நடிகை கியாரா அத்வானி விரைவில் குழந்தை பிறக்கவிருப்பதாக இன்ஸ்டாவில் அறிவித்துள்ளார்.
    • கியாரா-சித்தார்த் தம்பதிகளுக்கு பல நடிகர், நடிகைகள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

    மும்பை:

    பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி. இவர் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான 'புக்லி' என்ற திரைப்படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, எம்.எஸ்.தோனி, பரத் எனும் நான், கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான 'செர்ஷா' படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா உடன் நடித்திருந்தார்.

    அப்போது, நடிகை கியாரா அத்வானிக்கும் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு காதல் ஏற்பட இருவரும் 2023-ம் ஆண்டு ஜெய்சால்மரில் திருமணம் செய்துகொண்டனர். சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், திருமணமாகி 2 ஆண்டு கடந்த நிலையில் கியாரா அத்வானி-சித்தார்த் மல்ஹோத்ரா தம்பதியினர் தங்களது முதல் குழந்தையை வரவேற்கக் காத்திருக்கிறார்கள்.

    இதுதொடர்பாக, நடிகை கியாரா அத்வானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாகக் கூறியுள்ளார். குழந்தைகளின் காலணிகளை பதிவிட்ட கியாரா, "எங்களது வாழ்க்கையின் சிறந்த பரிசு. விரைவில் வரவிருக்கிறது" என கூறியுள்ளார்.

    கியாரா-சித்தார்த் தம்பதிகளுக்கு பல்வேறு நடிகர், நடிகைகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் கடந்த ஒரு மாதத்தில் 4302.47 புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளது.
    • சென்செக்ஸின் 30 நிறுவனங்களில் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி பங்கு மட்டும் உயர்வை சந்தித்தது.

    இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இறங்கு முகமாகவே இருந்து வருகிறது. நேற்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 74,612.43 புள்ளிகளில் நிறைவடைந்திருந்தது.

    நேற்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சீனாவுக்கு எதிராக 10 சதவீத வரி விதிக்க இருப்பதாக தெரிவித்திருந்தார். இதனால் இன்று காலை வர்த்தகம் சுமார் 200 புள்ளிகள் குறைந்து சென்செக்ஸ் 74,201.77 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. அதன்பின் தொடர்ந்து இறங்குவதாகவே இருந்தது. இன்று அதிகபட்சமாக 74,282.43 புள்ளிகளில் வர்த்தகமானது. குறைந்தபட்சமாக 73,141.27 புள்ளிகளில் வர்த்தகமானது.

    இறுதியாக வர்த்தகம் முடிவில் சென்செக்ஸ் 1414.33 புள்ளிகளில் சரிந்து மும்பை பங்குச் சந்தை 73198.10 புள்ளிகளில் நிறைவடைந்தது. சுமார் 1.90 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

    மும்பை பங்குச் சந்தையின் மோசமான சரிவால் முதலீட்டார்கள் சுமார் 9  லட்சம் கோடி ரூபாய் இழந்துள்ளனர். மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மூலதனம் இன்று காலை 7.46 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 3.85 லட்சம் கோடி ரூபாயாக சரிந்தது.

    வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 556.56 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தது இந்த சரிவுக்கு முக்கிய காரணமாகும்.

    டெக் மஹிந்திரா, இந்துஸ்இந்த் வங்கி, மாருதி, ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், இன்போசிஸ், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, டைடன் பங்குகள் மிகப்பெரிய சரிவை சந்தித்தது.

    ஹெச்.டி.எஃப்.சி. வங்கி பங்கு மட்டும் இன்று 1.86 சதவீதம் (31.70 ரூபாய்) உயர்ந்துள்ளது. தற்போது இதன் பங்கு 1732.40 ஆக உள்ளது.

    சென்செக்ஸ் கடந்த ஐந்து நாட்களில் 2236.16 புள்ளிகளும், ஒரு மாதத்தில் 4302.47 புள்ளிகளும், 6 மாதத்தில் 9361.74 புள்ளிகளும் சரிந்துள்ளன.

    இதேபோல் இந்திய பங்குச் சந்தை நிஃப்டியும் இன்று கடும் சரிவை எதிர்கொண்டுள்ளது. இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி நேற்றைய வர்த்தகத்தில் 22545.05 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலை 22433.40 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இன்று அதிகபட்சமாக 22,450.35 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 22,104.85 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது.

    இறுதியாக 420.35 புள்ளிகள் குறைந்து நிஃப்டி 22124.70 புள்ளிகளில் நிறைவடைந்தது.

    ×