என் மலர்
மகாராஷ்டிரா
- 2024 ஜனவரி 1-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை சத்ரபதி சம்பாஜிநகர் டிவிசனில் 952 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.
- அகோலாவில் 168 விவசாயிகளும், வர்தாவில் 112 விவசாயிகளும், பீட் பகுதியில் 205 விவசாயிகளும் தற்கொலை செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 58 மாதங்களில் தினந்தோறும் 8 விவசாயிகள் உயிரிழந்தது ஓரளவிற்கு உண்மைதான் என நிவாரண மற்றும் மறுவாழ்வு அமைச்சர் மகரந்த் ஜாதவ்-பாட்டீல் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் என்.சி.பி. எம்.எல்.சி. சிவாஜிராவ் கார்ஜே கேள்வி நேரத்தின்போது இது தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார். அப்போது சத்ரபதி சம்பாஜிநகர் மற்றும் அமராவதி டிவிசனில் விவசாயிகள் தற்கொலை அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அமைச்சர் வழங்கிய தரவுகளின்படி, கடந்த வருடம் மரத்வாடா டிவிசனில் 952 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். அகோலாவில் 168 விவசாயிகளும், வர்தாவில் 112 விவசாயிகளும், பீட் பகுதியில் 205 விவசாயிகளும், அமராவதி டிவிசனில் 1,069 விவசாயிகளும் தற்கொலை செய்துள்ளனர்.
2024 ஜனவரி 1-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை சத்ரபதி சம்பாஜிநகர் டிவிசனில் 952 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். அவர்களில் 707 பேர் உதவி பெற தகுதியுடையவர்கள், 433 பேர் உதவி பெற்றவர்கள்.
பீட் பகுதியில் 167 பேர் உதவி பெற தகுதியானர்கள். 108 பேர் உதவி பெற்றவர்கள்.
அமராவதி டிவிசனில் 441 பேர் உதவி பெற தகுதியானவர்கள். 332 உதவிகள் பெற்றவர்கள்.
ஜால்னா மாவட்டத்தில் மந்தா தாலுகாவில் கடந்த 2023 ஏப்ரல் மாதம் முதல் 2024 செப்டம்பர் மாதம் வரை 13 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு அரசு நிதியுதவி அளிக்க உறுதிபூண்டுள்ளது என அமை்சசர் தெரிவித்துள்ளார்.
- இன்று குறைந்தபட்சமாக 74,022.24 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 74,474.25 புள்ளிகளிலும் வர்த்தகமானது.
- இறுதியாக மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 217.41 புள்ளிகள் சரிந்து 74,115.17 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை 74,332.58 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 74,474.98 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.
அதன்பின் ஏறுவதும், இறங்குவதுமாக சென்செக்ஸ் இருந்து வந்தது. இன்று குறைந்தபட்சமாக 74,022.24 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 74,474.25 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 217.41 புள்ளிகள் சரிந்து 74,115.17 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
தொழில்துறை, ஆயில் மற்றும் எரிவாயு நிறுவன பங்குகள் சரிவு, வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. 30 பங்குகளை அடிப்படையாக கொண்ட மும்பை பங்குச் சந்தையில் 22 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தது. 8 நிறுவன பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.
மும்பை பங்குச் சந்தை போன்று இந்திய பங்குச் சந்தை நிஃப்டியும் இன்று சரிவை சந்தித்தது. கடந்த வெள்ளிக்கிழமை இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி வர்த்தக முடிவில் 22,552.50 ஆக இருந்தது.

இன்று காலை 22,521.85 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இன்று குறைந்தபட்சமாக நிஃப்டி 22,429.05 புள்ளிகளிலும், அதிகபட்சமாக நிஃப்டி 22,675.75 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 92.20 புள்ளிகள் சரிந்து 22,460.30 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய பண மதிப்பு 38 பைசா குறைந்து 87.33 ரூபாயாக உள்ளது.
- மும்பையில் இருந்து 322 பேருடன் ஏர் இந்தியா விமானம் நியூயார்க் புறப்பட்டுச் சென்றது.
- நடுவானில் சென்றபோது வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக கடிதம் கண்டெடுக்கப்பட்டதால் மும்பை திருப்பி விடப்பட்டது.
மும்பையில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு புறப்பட்டுச் சென்ற ஏர்இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், விமானம் மீண்டும் மும்பை விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. விமானம் தரையிறங்கியதும், அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இன்று காலை 19 விமான ஊழியர்கள் உள்பட 322 பேருடன் போயிங் 777-300 ER விமானம் மும்பை சத்ரபதி சிவாஜ் மகாராஜா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு புறப்பட்டுச் சென்றது.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் கழிப்பறையில், வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக ஒரு துண்டு நோட்டீஸ் கண்டெடுக்கப்பட்டது.
இது தொடர்பாக விமானிக்கு தகவல் தெரிவிக்க, அவர் உடனே விமானத்தில் மும்பை விமான நிலையத்திற்கு திருப்பினார்.
விமானம் மும்பைக்கு திரும்பிய நிலையில், அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார். இதுவரை சந்தேகத்திற்குரிய பொருட்கள் ஏதும் கிடைக்கவில்லை. விசாரணை நடத்து வருகிறோம் என அதிரிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது, பாதுகாப்பு மிரட்டல் கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விமானம் மும்பைக்கு மீண்டும் திருப்பப்பட்டது. விமானத்தில் உள்ள அனைவரிடன் பாதுகாப்பு நலனிற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது. விமானம் பாதுகாப்பு அமைப்புகளில் கட்டாய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளுக்கு ஏர்இந்தியா முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விமானம் நாளை காலை 5 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பயணிகளும் ஓட்டலில் தங்கவும், உணவுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- பாஜக நமது சமூகத்தை விஷமாக்கியுள்ளது.
- இப்போது, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய இரு நாடுகளுடனும் இந்தியா கிரிக்கெட் விளையாடுகிறது
பாஜகவின் 'ஜெய் ஸ்ரீ ராம்' முழக்கத்திற்கு 'ஜெய் சிவாஜி' மற்றும் 'ஜெய் பவானி' என்ற முழக்கம் மூலம் பதிலடி கொடுக்குமாறு தனது கட்சியினரிடம் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள முலுண்டு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய உத்தவ் தாக்கரே, "யாராவது ஜெய் ஸ்ரீ ராம் என்று சொன்னால், அவர்கள் ஜெய் சிவாஜி மற்றும் ஜெய் பவானி என்று கூறாமல் அங்கிருந்து செல்ல அனுமதிக்காதீர்கள். பாஜக நமது சமூகத்தை விஷமாக்கியுள்ளது.
பாகிஸ்தானுடன் இந்தியா விளையாட்டு போட்டிகளில் விளையாடுவதை பாஜக ஆரம்பத்தில் எதிர்த்து. ஆனால் இப்போது, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய இரு நாடுகளுடனும் இந்தியா கிரிக்கெட் விளையாடுகிறது" என்று குற்றம் சாட்டினார்.
மேலும், தற்போதைய பாஜக தலைமையிலான அரசாங்கத்தை அடால்ஃப் ஹிட்லரின் ஆட்சியுடன் ஒப்பிட்டு உத்தவ் தாக்கரே பேசினார்.
- தமிழகத்தை பொறுத்தவரை அனைத்துமே அரசியலாக்கப்படுகிறது.
- புதிய தேசிய கல்விக் கொள்கை தமிழகத்திற்கு மட்டும் வருவது இல்லை.
மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி. ராதா கிருஷ்ணன், கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தேசிய கல்விக்கொள்கை தமிழகத்தில் தமிழ் மொழி வாயிலாக கற்க வேண்டும் என்பதைதான் புதிய தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது.
தமிழகத்தில் தமிழில் கல்வி கற்பது அனேகமான இடங்களில் மறைந்து வருகிறது. அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றால் புதிய தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட வேண்டும்.
அதில் மும்மொழிக் கொள்கை என்று வரும் போது அதில் 3-வது மொழியாக, எந்த மொழியில் வேண்டுமென்றாலும் கற்றுக் கொள்ளலாம்.
புதிய தேசிய கல்விக் கொள்கையில் எந்த மொழியும் திணிக்கப்படவில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
தமிழகத்தை பொறுத்தவரை அனைத்துமே அரசியலாக்கப்படுகிறது. இந்தி திணிக்கப்படவில்லை என்பதே உண்மையான விஷயம். அதற்காக போராட்டம் நடத்தப்பட வேண்டியதில்லை என நான் நினைக்கிறேன்.
புதிய தேசிய கல்விக் கொள்கை தமிழகத்திற்கு மட்டும் வருவது இல்லை. அனைத்து மாநிலத்திற்கும் வரக்கூடிய ஒன்று. பீகார் மாநில மக்கள் தமிழை கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால் நிச்சயமாக தமிழ் கற்றுக் கொடுக்கப்படும்.
ஆனால் அவர்கள் மீது தமிழை திணிக்க முடியாது. நாம் எப்படி இந்தியை திணிக்க கூடாது என்று கூறுகிறோமோ, அதேபோல மற்ற மாநிலத்தவர் மீது தமிழை திணிக்க முடியாது.
யார் மீதும் எந்த மொழியும் திணிக்கப்பட கூடாது என்பது தான் புதிய தேசிய கல்விக் கொள்கை.
தொகுதி வரையறை என்பது தமிழகத்தில் இருக்கிற 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கு குறைவாக அந்த வரைமுறை இருக்காது என்பதை மத்திய அமைச்சர்கள் தெளிவுப்படுத்தி உள்ளனர்.
அதனால் இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டி அரசியல் செய்வது தமிழகத்தில் வாடிக்கையாக இருக்கிறது. பாலியல் துன்புறுத்தல் என்பது தமிழகத்தில் அதிகமாக இருந்து வருகிறது.
இதற்கு அடிப்படையான காரணம் போதை பொருட்களுக்கு இளைஞர்கள், அடிமையாக இருப்பது. அதனால், கஞ்சாவுக்கு எதிராக தமிழக அரசு மிகக் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
நான் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்த நேரத்தில், தமிழகத்தில் இருந்து தான் புதுவைக்கு நிறைய கஞ்சா கடத்தப்பட்டது.
அதை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை எடுத்தோம். தமிழக அரசு கடுமையான நடவடிக்கையின் மூலம் போதை பொருள் கடத்தலை தடுத்து நிறுத்த வேண்டும்.
அப்படி நிறுத்தினால் மட்டும் தான் இதுபோன்ற பாலியல் பிரச்சினைகளை நம்மால் தடுத்து நிறுத்த முடியும்.
ஏனென்றால் பாலியல் தொந்தரவுகள் பெரும்பாலும் போதைக்கு அடிமையான இளைஞர்களிடம் இருந்துதான் வருகிறது.
கஞ்சா முற்றிலுமாக தமிழகத்தில் இருந்து ஒழிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சமநிலையை இழந்து ரெயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கிக் கொண்டார்.
- ஓடி வந்து வெளியே இழுத்து அவரை காப்பாற்றினார்.
ஓடும் ரெயிலில் இருந்து இறங்க முயன்றபோது தவறி விழுந்த பெண் பயணியை ரெயில்வே காவலர் ஒருவர் காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் மும்பையில் உள்ள போரிவலி ரெயில் நிலையத்தில் அந்தப் பெண் நகரும் ரெயிலில் இருந்து இறங்க முயன்றபோது சமநிலையை இழந்து ரெயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கிக் கொண்டார்.
நடைமேடையில் நின்று கொண்டிருந்த ரெயில்வே காவலர் விரைவாக அப்பெண்ணை நோக்கி ஓடி வந்து வெளியே இழுத்து அவரை காப்பாற்றினார். இது அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது.
இதை இன்று தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தலத்தில் பகிர்ந்துள்ள ரெயில்வே அமைச்சகம் நகரும் ரெயிலில் ஏறவோ, இறங்கவோ கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.
- ஜி.பி.எஸ். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
- ஜிபிஎஸ் 30 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களை பாதிக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மும்பை:
ஜி.பி.எஸ். என்பது ஒரு அரிய தன்னுடல் தாக்க நிலையாகும், இது உடலில் நோயெதிர்ப்பு அமைப்பு, புற நரம்பு மண்டலத்தைத் தாக்குகிறது. இது உணர்வின்மை, கூச்ச உணர்வு மற்றும் தசை பலவீனம் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது.
இருப்பினும் முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் இதில் இருந்து முழுமையாக மக்களை மீட்க முடியும் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
ஜி.பி.எஸ். எந்த வயதிலும் ஏற்படலாம். ஆனால் இது பொதுவாக 30 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களை அதிகம் பாதிக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் கில்லெயின்-பார்ரே சிண்ட்ரோம் (ஜி.பி.எஸ்.) எனப்படும் பாதிப்பு பரவலாகக் காணப்படுகிறது.
இதுதொடர்பாக மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மொத்தம் 225 பேருக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 197 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 28 பேர் சந்தேகப் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளனர்.
இதுவரை 12 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் 6 பேருக்கு ஜி.பி.எஸ். பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 6 பேர் இந்த பாதிப்பினால் உயிரிழந்து இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இதுவரை 179 நோயாளிகள் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர். 24 பேர் இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு உள்ளனர். 15 பேர் வென்டிலேசனில் வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.
மாசுபட்ட தண்ணீரால் இந்த மர்ம நோய், பாதிப்பு ஏற்படுத்தி நோயாளிகளை பலவீனப்படுத்துகிறது என கூறப்படுகிறது. அதனால், குடிமக்கள் கொதிக்க வைத்த குடிநீர் உள்பட தரமுள்ள குடிநீரை குடிக்கவும், புதிதான மற்றும் தூய்மையான உணவை எடுத்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- இதற்காக எதிர்க்கட்சியினர் அப்போது அவரை விமர்சித்தனர்.
- பெண்கள் மத்தியில் தற்கொலை விகிதம் அதிகரித்துள்ளது.
இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி அரசியல் தலைவர்கள் தத்தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக கூட்டணியின் மகாராஷ்டிர அரசின் நீர் வழங்கல் துறை அமைச்சர் குலாப்ராவ் பாட்டீல் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். இவர் பாஜக கூட்டணியில் இடம்பெற்ற ஷிண்டே பிரிவு சிவசேனாவின் முக்கிய தலைவர் ஆவார்.
ஜல்கான் நகராட்சியில் மகளிர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய குலாப்ராவ் பாட்டீல், மறைந்த சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே பெண்கள் பாதுகாப்பு குறித்து கூறிய வழிமுறைகளை எடுத்துரைத்தார்.
குலாப்ராவ் பாட்டீல் கூறியதாவது, பெண்கள் தங்கள் பர்சில் மிளகாய்ப் பொடி மற்றும் கத்தியை வைத்திருக்க வேண்டும் என்று வணக்கத்திற்குரிய பாலாசாகேப் தாக்கரே அறிவுறுத்தினார். இதற்காக எதிர்க்கட்சியினர் அப்போது அவரை விமர்சித்தனர். ஆனால், தற்போது பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பாலாசாகேப் கூறியதை பெண்கள் செய்ய வேண்டிய நேரம் இது.
இன்று பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும்சூழலில், பெண்கள் புலிகளாக மாற வேண்டும். இன்றைய பெண்கள் பலவீனமாக இருக்கக்கூடாது. மாறாக வலிமையுடன் திகழ வேண்டும்.
பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள். அவ்வாறு செய்வோரை நிறுத்த வேண்டும். பெண்கள் மத்தியில் தற்கொலை விகிதம் அதிகரித்துள்ளது. பெண்கள் தற்கொலை செய்து கொள்ளாமல் தங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தார்.
கடந்த மாத இறுதியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த புனே பேருந்து நிலையத்தில் போலீஸ் சோதனைச் சாவடிக்கு வெறும் 100 மீட்டர் தொலைவில் நின்றுகொண்டுருந்த அரசு சொகுசு பஸ்ஸுக்குள் வைத்து 26 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
- நான் உன்னை அப்போது நேசித்தேன், இப்போதும் உன்னை நேசிக்கிறேன்.
- தற்கொலை செய்து கொண்ட நாளில், 'தொந்தரவு செய்யாதீர்கள்' என்ற பலகையை அறைக்கு வெளியே அவர் வைத்திருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 41 வயதான அனிமேட்டர்(ANIMATOR) ஒருவரின் தற்கொலையும், உருக்கமான கடிதமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள வைல் பார்லேவில் உள்ள சஹாரா ஹோட்டலில் நிஷாந்த் திரிபாதி (41 வயது) கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) குளியலறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தனது தற்கொலைக்கு மனைவி அபூர்வாவும், அத்தை பிரார்த்தனாவும் தான் காரணம் என குறிப்பு எழுதி அதை தான் பணியாற்றிய நிறுவனத்தின் இணையதளத்தில் அவர் பதிவேற்றம் செய்திருக்கிறார்.
அவரது தற்கொலை கடிதத்தில், 'இது அபூர்வாவுக்கானது- அன்பே.. நீ இதைப் படிக்கும் நேரத்தில், நான் போய்விட்டிருப்பேன். என்ன நடந்ததோ அதற்காக என் கடைசி தருணங்களில் நான் உன்னை வெறுத்திருக்கலாம். ஆனால் இந்த தருணத்திற்காக நான் அன்பைத் தேர்ந்தெடுத்தேன்.
நான் உன்னை அப்போது நேசித்தேன், இப்போதும் உன்னை நேசிக்கிறேன். நான் உறுதியளித்தபடி இந்த அன்பு ஒருபோதும் குறையாது. நீயும் பிரார்த்தனா அத்தையும்தான், நான் சந்தித்த அத்தனை போராட்டங்களுக்கும், என் மரணத்திற்குக் காரணம் என்பது என் அம்மாவுக்குத் தெரியும். அதனால்தான் நான் உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன், என் அம்மாவிடம் போகாதே. அவள் மனம் உடைந்துவிட்டாள்'.
தனது தாய், சகோதரர் மற்றும் சகோதரிக்கு கடைசி செய்திகளை அனுப்பிய பிறகு, அவர் தனது மனைவி அபூர்வாவுக்கு இந்த கடைசி கடிதத்தை எழுதினார். காவல்துறை தகவலின்படி, அனிமேஷன் துறையில் பணியாற்றி வரும் நிஷாந்த், பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் பகுதியைச் சேர்த்தவர்.
தற்கொலை செய்து கொள்வதற்கு 3 நாட்களுக்கு முன்பு ஹோட்டலில் ஒரு அறையை முன்பதிவு செய்திருக்கிறார். மேலும் தற்கொலை செய்து கொண்ட நாளில், 'தொந்தரவு செய்யாதீர்கள்' என்ற பலகையை அறைக்கு வெளியே அவர் வைத்திருக்கிறார்.
நீண்ட நேரமாகியும் அவர் ஹோட்டல் ஊழியர்களுக்கு பதிலளிக்காததால், மாஸ்டர் சாவியைப் பயன்படுத்தி அவரது அறைக்குள் நுழைந்தபோது, அவர் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நிஷாந்தின் தயார் அளித்த புகாரின்பேரில் மனைவி அபூர்வா மற்றும் அத்தை பிரார்த்தனா மீது பாரதீய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவு 108 (தற்கொலைக்கு தூண்டுதல்) இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
- குடிசைப்பகுதியில் உள்ள தோல் தொழில்கூடங்கள், கடைகளை ராகுல் காந்தி பார்வையிட்டார்.
- பொதுமக்களிடம் சில நிமிடங்கள் உரையாடிய ராகுல் காந்தி அங்கு இருந்து புறப்பட்டு சென்றார்.
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியை அதானி நிறுவனம், மகாராஷ்டிரா அரசுடன் இணைந்து மேம்படுத்த உள்ளது. இதற்கான கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.
தாராவியில் சிறு, குறு தொழில் கூடங்கள் அதிகளவில் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழில்கூடங்களுக்கு தாராவியிலேயே இடம் ஒதுக்கப்படுமா அல்லது வெளிப்பகுதிக்கு மாற்றப்படுமா? என்ற சந்தேகம் நிலவி வருகிறது.
இந்தநிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நேற்று மும்பை வந்தார். பின்னர் அவர் பகல் 1.30 மணியளவில் திடீரென தாராவி குடிசைப்பகுதிக்கு வருகை தந்தார். தாராவி காலாகில்லா, சந்த் ரோகிதாஸ் மார்க் பகுதியில் குடிசைப்பகுதியில் உள்ள தோல் தொழில்கூடங்கள், கடைகளை ராகுல் காந்தி பார்வையிட்டார். அங்கு அவர் தோல் தொழில்கூட தொழிலாளர்கள், கடைக்காரர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் தோல் தொழில் குறித்தும், தாராவி மேம்பாட்டு திட்டத்தால் ஏற்படும் பாதிப்பு, பிரச்சனைகள் குறித்தும் அவர்களிடம் கேட்டறிந்தார். சுமார் 2 மணிநேரம் அவர் தோல் தொழிலாளர்கள், கடைக்காரர்களிடம் உரையாடினார்.

தோல் தொழிலாளர்கள், கடைக்காரர்களை சந்தித்து பேசிய பிறகு, அந்தப்பகுதியில் திரண்டு இருந்த பொதுமக்களிடம் சில நிமிடங்கள் உரையாடிய ராகுல் காந்தி அங்கு இருந்து புறப்பட்டு சென்றார். ராகுல் காந்தி வருகையையொட்டி நேற்று தாராவி டி-ஜங்ஷன் முதல் காலாகில்லா பகுதி வரை பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
ராகுல் காந்தி சட்டசபை தேர்தலுக்கு முன் மும்பை வந்து இருந்தார். இந்தநிலையில் அவர் நேற்று மீண்டும் மும்பைக்கு வருகை தந்துள்ளார். மும்பையில் விரைவில் மாநகராட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் ராகுல் காந்தியின் மும்பை வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- இரண்டு நாட்களில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1350 புள்ளிகள் உயர்வு.
- இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 462 புள்ளிகள் உயர்வு.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், நேற்றும் இன்றும் மிகப்பெரிய அளவில் உயர்வை சந்தித்தன.
நேற்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 740.30 புள்ளிகள் உயர்ந்து 73,730.23 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று 610 புள்ளிகள் உயர்ந்து 74,340.09 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் செக்ஸ் நேற்றைய வர்த்தகத்தில் 73730.23 புள்ளிகளில் நிறைவடைந்த நிலையில் இன்று சுமார் 600 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது. இன்று அதிகபட்சமாக 74,390.80 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 73,415.68 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 609.87 புள்ளிகள் உயர்ந்து 74340.09 புள்ளிகளில் நிறைவடைந்தது.
அதேபோல் இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி நேற்று 254.65 புள்ளிகள் உயர்ந்து 22,337.30 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று சுமார் 140 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது, இன்று அதிகபட்சமாக 22,556.45 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 22,245.85 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 207.40 புள்ளிகள் உயர்ந்து 22,544.70 புள்ளிகளில் நிறைவடைந்தது

30 பங்குகளை அடிப்படையாக கொண்ட மும்பை பங்குச் சந்தையில் ஏசியன் பெயின்ட்ஸ், என்டிபிசி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், பஜாஜ் பின்செர்வ், இந்துஸ்தான் யுனிலிவர், அதானியின் Ports & SEZ, ஆக்சிஸ் வங்கி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டைடன், பஜாஜ் பைனான்ஸ் போன்ற நிறுவன பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் உயர்வை சந்தித்தன.
டெக் மகிந்திரா, கோடக் மகிந்திரா வங்கி, சொமேட்டோ, டாடா மோட்டார்ஸ், இந்துஸ்இந்த் வங்கி போன்ற நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.
- மும்பையில் வாழ மராத்தி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று RSS தலைவரின் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
- RSS தலைவரின் கருத்துக்கு சிவசேனா (உத்தவ் தாக்கரே), காங்கிரஸ் காட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் வாழ்வதற்கு மராத்தி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பையாஜி ஜோஷி, "மும்பையில் ஒரு மொழி பேசுபவர்கள் மட்டும் கிடையாது. இங்கு ஒவ்வொரு பகுதிகளிலும் வெவ்வேறு மொழிகளை பேசுபவர்கள் இருக்கிறார்கள். காட்கோபர் பகுதி மக்கள் குஜராத்தி பேசுகிறார்கள். ஆதலால் நீங்கள் மும்பையில் வசித்தால் மராத்தி மொழி கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை" என்று தெரிவித்தார்.
இதே நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா அமைச்சர் மங்கள் பிரபாத் லோபா கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
மராத்தி குறித்து சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்த கருத்துக்கு சிவசேனா (உத்தவ் தாக்கரே), காங்கிரஸ் காட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி கருத்து தொடர்பாக பாஜக அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் சிவசேனா (உத்தவ் தாக்கரே) சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் ஜாதவ் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு சட்டமன்றத்தில் பதில் அளித்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், "ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேசியதை நான் கேட்கவில்லை. மகாராஷ்டிரா மற்றும் மும்பையின் மொழி மராத்தி தான். இங்கு உள்ள ஒவ்வொருவரும் மராத்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். எங்கள் அரசாங்கம் அனைத்து மொழிகளையும் மதிக்கிறது.
நீங்கள் உங்கள் சொந்த மொழியை நேசித்து மதிக்கிறீர்கள் என்றால், மற்ற மொழிகளையும் அவ்வாறே நேசிப்பீர்கள். இந்த கருத்தில் சுரேஷ் பையாஜி என்னுடன் உடன்படுவார் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.






