என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • மும்பைக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தது.
    • 6-வது தோல்வி அடைந்த சென்னை அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

    மும்பை:

    மும்பையில் நேற்று நடந்த 38வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவரில் 176 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய மும்பை அணி 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இதன்மூலம் 6வது தோல்வி அடைந்த சென்னை அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

    இந்நிலையில், தோல்விக்கு பிறகு சென்னை கேப்டன் தோனி கூறியதாவது:

    அணியில் எதுவும் சரியாக செல்லாத நிலையில் அதற்காக உணர்ச்சி வசப்படுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை.

    ஒருவேளை நாங்கள் தகுதியாக முடியாத சூழல் இருந்தால் அடுத்த சீசனுக்கு சிறந்த லெவனை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.

    கடந்த 2020 ஐ.பி.எல். சீசனும் எங்களுக்கு மோசமான சீசனாக இருந்தது. அதிலிருந்து எப்படி வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம்.

    வீரர்களை மாற்றுவதில் அதிகமாக விருப்பம் காட்ட வேண்டியதில்லை. அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வந்தாலே போதுமானது.

    சிறப்பாக செயல்பட்ட மும்பை அணிக்கு வாழ்த்துகள் என தெரிவித்தார்.

    • சென்னைக்கு எதிரான போட்டியில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.
    • இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேறியது.

    மும்பை:

    மும்பையில் நேற்று நடந்த 38வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவரில் 176 ரன்கள் எடுத்தது.

    தொடர்ந்து ஆடிய மும்பை அணி 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. புள்ளிப்பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேறியது.

    இதற்கிடையே, ஐ.பி.எல். தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் விராட் கோலி 260 போட்டிகளில் 8,326 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இதில் 8 சதங்கள், 59 அரை சதங்கள் அடங்கும்.

    இந்நிலையில், சென்னைக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா 76 ரன் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் ரோகித் சர்மா 258 போட்டிகளில் 6,786 ரன்களுடன் இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார். இதில் 2 சதங்கள், 44 அரை சதங்களும் அடங்கும்.

    இந்தப் பட்டியலில் ஷிகர் தவான் 222 போட்டிகளில் 6,769 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இதில் 2 சதங்கள், 51 அரை சதங்கள் அடங்கும்.

    • டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவரில் 176 ரன்கள் எடுத்தது.

    மும்பை:

    ஐபிஎல் தொடரின் 38-வது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா 5 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ஷேக் ரஷீத் 19 ரன்னில் வெளியேறினார்.

    அறிமுக வீரரான ஆயுஷ் மாத்ரே அதிரடியாக ஆடி 15 பந்தில் 32 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    4வது விக்கெட்டுக்கு இணைந்த சேர்ந்த ஜடேஜா-ஷிவம் துபே ஜோடி 79 ரன்கள் சேர்த்தது, ஷிவம் துபே அரை சதம் கடந்து அவுட்டானார்.

    ஜடேஜா அரை சதம் கடந்து 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரிக்கல்டன் 24 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார். அவருக்கு சூர்யகுமார் யாதவ் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இருவரும் அரை சதம் கடந்தனர்.

    இறுதியில், மும்பை இந்தியன்ஸ் 15.4 ஓவரில் 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 76 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 68 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.

    இது மும்பைக்கு கிடைத்த 4வது வெற்றி ஆகும். சென்னை அணியின் 6வது தோல்வி இதுவாகும்.

    • சிஎஸ்கே முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை தோற்கடித்தது.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் 8-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை மோதியுள்ளது.

    5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இம்முறை 7 போட்டிகளில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது. 5-ல் தோற்றது. 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

    இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் 8-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை இன்று இரவு 7.30 மணிக்கு மீண்டும் சந்தித்து வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது.

    இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இதன்மூலம், சென்னை சூப்பர் கிங்கஸ் முதலாவதாக பேட்டிங் செய்ய களமிறங்ககியது.

    இந்த ஆட்டத்தின் 20 ஓவர் முடிவில், 5 விக்கெட் வித்தியாசத்தில் 176 ரன்களை சிஎஸ்கே அணி எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக ஜடேஜா 53 ரன்கள், ஷிவம் துபே 50 ரன்கள், ஆயுஷ் மாத்ரே 32 ரன்களும் எடுத்தனர்.

    இதைதொடர்ந்து, 177 ரன்கள் என்கிற வெற்றி இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்குகிறது.

    • சிஎஸ்கே முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை தோற்கடித்தது.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் 8-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை மோதுகிறது.

    5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இம்முறை 7 போட்டிகளில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது. 5-ல் தோற்றது. 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

    கடந்த 23-ந் தேதி நடந்த முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை தோற்கடித்தது.

    அதன் பிறகு ஆர்.சி.பி. (50 ரன்), ராஜஸ்தான் ராயல்ஸ் (6 ரன்) , டெல்லி கேப்பிட்டல்ஸ் (25 ரன்), பஞ்சாப் (18 ரன்), கொல்கத்தா (8 விக்கெட்) அணிகளிடம் தொடர்ச்சி யாக தோற்றது.

    தனது 7-வது ஆட்டத்தில் லக்னோவை (5 விக்கெட்) வீழ்த்தியது.

    இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் 8-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை இன்று இரவு 7.30 மணிக்கு மீண்டும் சந்திக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது.

    இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    இதன்மூலம், சென்னை சூப்பர் கிங்கஸ் முதலாவதாக பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.

    இதற்கிடையே, சி.எஸ்.கே. எஞ்சி இருக்கும் 7 போட்டியில் 6-ல் வெற்றி பெற வேண்டும். அப்படி நிகழ்ந்தால் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பில் இருக்க இயலும்.

    இதனால் மும்பையை கண்டிப்பாக வீழ்த்த வேண்டும். அந்த அணியை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்பது சவாலானது. மும்பையை மீண்டும் வீழ்த்தி 3-வது வெற்றியை பெறுமா? என்று சிஎஸ்கே ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளனர்.

    • இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
    • எங்களுக்குள் நிலவும் பிரச்னைகளைவிட மகாராஷ்டிராவின் நலனே பெரியது.

    இந்தி திணிப்பு

    மகாராஷ்டிராவில் தேசிய கல்விக் கொள்கை அமலில் உள்ளது. இந்நிலையில் மும்மொழிக் கொள்கையின் கீழ் 3வது மொழியாக 1 முதல் 5ஆம் வகுப்பு வரை இந்தி மொழி கட்டாயம் என அம்மாநில பாஜக கூட்டணி அரசு உத்தரவிட்டது.

    மேலும் 2025 - 26 கல்வியாண்டு முதல் படிப்படியாக அமல்படுத்தப்படும், 2028 - 29ஆம் கல்வியாண்டிற்குள் அனைத்து வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க முடியாது என சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

    ராஜ் தாக்கரே

    நேற்று கலந்துரையாடல் ஒன்றில் பேசிய ராஜ் தாக்கரே, 'சிவசேனாவின் நான் இருந்தபோது உத்தவ் தாக்கரேவுடன் பணியாற்றுவதில் எவ்வித சிக்கலும் ஏற்படவில்லை. தற்போது என்னுடன் இணைந்து பணியாற்ற உத்தவ் தாக்கரே தயாராக இருக்கிறாரா?

    எங்களுக்குள் நிலவும் பிரச்னைகளைவிட மகாராஷ்டிராவின் நலனே பெரியது. மராத்தியா்களுக்காக போராடுவதை ஒப்பிடுகையில் எங்களின் பிரச்னைகள் மிகவும் சிறியது. மீண்டும் நாங்கள் ஒன்றிணைந்து பணியாற்றுவது கடினமான காரியமல்ல' என்று தெரிவித்தார்.

    உத்தவ் தாக்கரே

    அதே சமயம் நேற்று தனது கட்சி உறுப்பினா்கள் மத்தியில் சனிக்கிழமை பேசிய உத்தவ் தாக்கரே, சிறிய பிரச்னைகளை புறந்தள்ளிவிட்டு மராத்தியா் நலனுக்கு முன்னுரிமை அளிப்பவா்களுடன் ஓரணியில் திரள நானும் தயாா்.

    மக்களவைத் தேர்தலின் போது, மகாராஷ்டிராவின் தொழிற்சாலைகள் குஜராத்துக்கு இடம்பெயர்கின்றன என்று நாங்கள் சொன்னபோது, அவர்கள் (ராஜ் தாக்கரே) அப்போது எதிர்த்திருந்தால், இன்று மத்திய அரசு ஆட்சியில் இருந்திருக்காது.

    மகாராஷ்டிராவின் நலனைப் பற்றி சிந்திக்கும் மத்திய மற்றும் மாநில அளவில் ஒரு அரசாங்கத்தை நாங்கள் அமைத்திருப்போம். மக்களவைத் தோ்தலின்போது பாஜகவுக்கு ஆதரவளித்துவிட்டு, பேரவைத் தோ்தலின்போது அவா்களை எதிா்த்துவிட்டு மீண்டும் அவா்களுடன் சமாதானப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டால் எதுவும் மாறாது.

    முதலில் மகராஷ்டிரத்துக்கு எதிராக செயல்படுபவா்களை இங்கு வரவேற்காதீா்கள். அதன் பிறகு மாநில நலன் குறித்துப் பேசலாம். எனக்கு யாருடனும் மோதல் இல்லை. பாஜகவுடனான கூட்டணி வேண்டுமா? அல்லது எங்கள் கட்சியுடன் கூட்டணி வேண்டுமா என்பதில் மராத்திய மக்கள் தெளிவான முடிவெடுக்க வேண்டும் " என்று தெரிவித்தார்.

    சிவசேனா கட்சியின் நிறுவனா் பால் தாக்கரேவின் இளைய சகோதரா் மகனான ராஜ் தாக்கரே கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து 2006-ஆம் ஆண்டு விலகி, மகாராஷ்டிர நவநிா்மாண் சேனா என்ற கட்சியை தொடங்கி எதிர் துருவத்தில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் இணைவது குறித்து பேசியிருப்பது மகாராஷ்டிர அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அவர்கள் இணைவதில் மகிழ்ச்சியே என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.    

    • தேசிய கல்விக் கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.
    • 1 முதல் 5ஆம் வகுப்பு வரை இந்திய 3வது கட்டாய மொழி.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வரும் கல்வியாண்டில் இருந்து 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மராத்தி மற்றும் ஆங்கில வழி பள்ளிகளில் இந்தி 3ஆவது கட்டாய மொழி என அம்மாநில அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.

    இந்த நிலையில் மகாராஷ்டிராவில் இந்தி கட்டாயம் என்பதை அனுமதிக்க மாட்டோம் என சிவ சேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    சிவசேனா கட்சியிண் தொழிலாளர்கள் பிரிவான பாரதிய கம்கார் சேனா நிகழ்ச்சியில் கலந்த கொண்டு பேசும்போது "சிவசேனாவுக்கு (UBT) இந்தி மொழி மீது எந்த வெறுப்பும் இல்லை. ஆனால் அது ஏன் கட்டாயப்படுத்தப்படுகிறது. இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்றார்.

    • மும்பையில் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க அணை கட்ட பரிந்துரை.
    • அணை கட்டுவதற்காக 4 லட்சம் மரங்களை வெட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மும்பைக்கு குடிநீர் வழங்கும் வகையில் கார்காய் அணை கடட பரிந்துரை வழங்கப்பட்டு்ளது. இதற்கான லட்சணக்கான மரங்கள் வெட்ட பாஜக அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம் மகாராஷ்டிரா மாநிலத்தை பாஜக பாலைவனமாக்க விரும்புகிறது என அதித்யா தாக்கரே குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக ஆதித்யா தாக்கரே கூறியதாவது:-

    இந்த வருடம் மார்ச்- ஏப்ரல் மாதத்தில் மும்பையில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை இதற்கு முன்பாக ஒருபோதும் பார்த்ததில்லை. மாநிலம் முழுவரும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. 40 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்துகிறது.

    மாமநில வனவிலங்கு வாரியம் லட்சகணக்கான மரங்களை வெட்டுவதற்கான திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது. தானே மற்றும ்பல்கார் மாவட்டத்தில் ஐந்து லட்சம் மரங்களை வெட்ட அனுமதி வழங்கப்பட்டள்ளது. மும்பைக்கு குடிநீ்ர் வழங்க கார்காய் அணை கட்டுவதற்கான இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாஜக மகாராஷ்டிராவை பாலைவனமாக்க விரும்புகிறது.

    தேவைப்பட்டால் சிவசேனா (UBT) மத்திய சுற்றுச்சுழல் அமைச்சர், ஜனாதிபதியை இந்த திட்டத்திற்கு எதிராக அணுகும்.

    இவ்வாறு ஆதித்யா தாக்கரே தெரிவித்தார்.

    மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சியில் (2019 முதல் 2022 வரை) இருக்கும்போது கர்காய் அணை திட்டத்தை கைவிட்டது.

    • மராத்தி, ஆங்கிலம் மீடியம் பள்ளிகளில் 3ஆவதாக இந்தி கட்டாய மொழியாக்கப்பட்டுள்ளது
    • மராத்தி மற்றும் மராத்தி அல்லாதவர்களிடையே போராட்டத்தை உருவாக்கி, அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியா இது?

    மகாராஷ்டிராவில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளதால் மராத்தி, ஆங்கிலம் மீடியம் பள்ளிகளில் 3ஆவதாக இந்தி கட்டாய மொழியாக்கப்பட்டுள்ளது என அம்மாநில பாஜக கூட்டணி அரசு அறிவித்துள்ளது.

    தற்போது மராத்தி மற்றும் ஆங்கில மீடியம் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 4ஆம் வகுப்பு வரை மராத்தி மற்றும் ஆங்கிலம் கட்டாயமாக கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது. இனிமேல் ஐந்தாம் வகுப்பு வரை இந்தி 3ஆவது கட்டாய மொழியாக்கப்பட்டுள்ளது.

    இந்த நடைமுறை வரும் கல்வியாண்டில் இருந்து நடைமுறை படுத்தப்படும். தேசிய கல்விக் கொள்கையின்படி புதிய பாடத்திட்டம் 1ஆம் வகுப்பில் 2025-2026-ல் அமல்படுத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    2, 3, 4 மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கு தேசிய கல்விக் கொள்கை 2026-27-ல் அமல்படுத்தப்படும். 5, 9 மற்றும் 11 வகுப்புகளுக்கு 2027-28 முதல் அமல்படுத்தப்படும். 8, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு 2028-29ஆம் ஆண்டில் இருந்து அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நடவடிக்கை இந்தி திணிப்பு என மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அவர் கூறியதாவது, மும்மொழிக் கொள்கையை அரசு விவகாரங்களுக்கு மட்டுமே பயன்படுத்துங்கள். அதனை கல்விக்கு கொண்டுவர வேண்டாம். மாநிலத்தில் அனைத்தையும் இந்திமயமாக்கும் மத்திய அரசின் முயற்சிகளை நவநிர்மாண் சேனா ஒருபோதும் ஏற்காது. நாங்கள் இந்துக்கள், ஆனால், இந்தி அல்ல. மாநிலத்தை இந்தி என்று சித்திரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டால், இங்கு நிச்சயம் ஒரு போராட்டம் வெடிக்கும்.

    இவற்றையெல்லாம் பார்த்தால், வேண்டுமென்றே போராட்டத்தை அரசாங்கம் உருவாக்குகிறது என்று தோன்றுகிறது. வரவிருக்கும் தேர்தல்களில் மராத்தி மற்றும் மராத்தி அல்லாதவர்களிடையே போராட்டத்தை உருவாக்கி, அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியா இது? என்று கேள்வி எழுப்பி உள்ளார். மும்மொழி கொள்கையை இந்தி திணிப்பு என தமிழ்நாடு முன்னரே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இது கடினமான ஆடுகளம்தான். நாங்கள் இன்னும் கூடுதலாக சில ரன்கள் அடித்திருக்க வேண்டும்.
    • ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சுலபமானதாக இல்லை என கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

    மும்பை:

    மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் 33-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

    இதையடுத்து, முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய மும்பை அணி 18.1 ஓவர்களில் மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    இந்நிலையில், போட்டிக்கு பிறகு ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசியதாவது:

    இது கடினமான ஆடுகளம்தான். இந்த ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் அப்படி இல்லை. நாங்கள் இன்னும் கூடுதலாக சில ரன்கள் அடித்திருக்க வேண்டும்.

    மும்பை அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். ஆனால் 160 ரன்கள் என்பது இந்த ஆட்டத்தில் குறைவான இலக்காக மாறிவிட்டது.

    இதுபோன்ற போட்டிகளில் வெற்றி பெற விக்கெட்டுகள் தேவை. இம்பாக்ட் வீரர் ஒன்று அல்லது இரண்டு ஓவர் தான் வீசமுடியும் என எனக்கு தெரியும். இதனால் தான் நாங்கள் ராகுலை தேர்வு செய்தோம். இந்த சூழலில் இருந்து இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

    துரதிர்ஷ்டவசமாக இந்த சீசனில் எங்களுக்கு எதுவும் சரியாக அமையவில்லை. தற்போது எங்களுக்கு சிறிய ஒரு பிரேக் கிடைத்துள்ளது. நாங்கள் எந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்துவோம் என தெரிவித்தார்.

    • முதலில் ஆடிய ஐதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 162 ரன்கள் எடுத்தது.
    • அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 40 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    மும்பை:

    ஐ.பி.எல். தொடரின் 33-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. அபிஷேக் சர்மா 28 பந்தில் 40 ரன்னும், கிளாசன் 28 பந்தில் 37 ரன்னும், டிராவிஸ் ஹெட் 28 ரன்னும் எடுத்தனர். அனிகெட் வர்மா 8 பந்தில் 18 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை களமிறங்கியது. ரோகித் சர்மா 26 ரன்னும், ரிக்கல்டன் 31 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 26 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். வில் ஜாக்ஸ் 36 ரன் எடுத்து அவுட்டானார். பாண்ட்யா 21 ரன் எடுத்தார்.

    இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி 18.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 166 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் மும்பை அணி பெறும் 3வது வெற்றி இதுவாகும். ஐதராபாத் அணி பெற்ற 5வது தோல்வி இதுவாகும்.

    • மராத்தி மற்றும் ஆங்கில மீடியம் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 4ஆம் வகுப்பு வரை மராத்தி மற்றும் ஆங்கிலம் கட்டாயம்.
    • வரும் கல்வியாண்டில் இருந்து 1 முதல் 5 வகுப்பு வரை இந்தி ஆவது கட்டாய மொழியாகும்.

    மகாராஷ்டிராவில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளதால் மராத்தி, ஆங்கிலம் மீடியம் பள்ளிகளில் 3ஆவதாக இந்தி கட்டாய மொழியாக்கப்பட்டுள்ளது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

    தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தி மற்றும் ஆங்கில மீடியம் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 4ஆம் வகுப்பு வரை மராத்தி மற்றும் ஆங்கிலம் கட்டாயமாக கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது. இனிமேல் ஐந்தாம் வகுப்பு வரை இந்தி 3ஆவது கட்டாய மொழியாக்கப்பட்டுள்ளது.

    இந்த நடைமுறை வரும் கல்வியாண்டில் இருந்து நடைமுறை படுத்தப்படும். தேசிய கல்விக் கொள்கையின்படி புதிய பாடத்திட்டம் 1ஆம் வகுப்பில் 2025-2026-ல் அமல்படுத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    2, 3, 4 மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கு தேசிய கல்விக் கொள்கை 2026-27-ல் அமல்படுத்தப்படும். 5, 9 மற்றும் 11 வகுப்புகளுக்கு 2027-28 முதல் அமல்படுத்தப்படும். 8, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு 2028-29ஆம் ஆண்டில் இருந்து அல்படுத்தப்படும்.

    இந்த நடவடிக்கை இந்தி திணிப்பாகும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

    ×