என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • தலா 4 அணிகள் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடக்கிறது.
    • இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.

    மும்பை:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

    டி20 வடிவில் நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

    தலா 4 அணிகள் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடக்கிறது. இதில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்தச் சுற்றில் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் 28-ம்தேதி பைனலில் மோதும்.

    ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா வரும் 10-ம் தேதி யுஏஇ, 14-ம் தேதி பாகிஸ்தான், 19-ம் தேதி ஓமனுடன் மோத உள்ளன. இந்தியா பங்கேற்கும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறுகிறது.

    இந்நிலையில், இந்தத் தொடருக்கான இந்திய அணி வரும் 19-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

    மும்பையில் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழுவினர் கூடி அணியை தேர்வு செய்ய உள்ளனர். இதில் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து அஜித் அகர்கர் செய்தியாளர்களை சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
    • இந்த வழக்கை மும்பை போலீசாரின் பொருளாதார குற்றப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

    மும்பை:

    பிரபல ஹிந்தி நடிகையான ஷில்பா ஷெட்டி, தன் கணவர் ராஜ் குந்த்ராவுடன் மகாராஷ்டிராவின் மும்பையில் வசித்து வருகிறார்.

    ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ்குந்த்ராவும் பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடேட் என்ற ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தின் இயக்குநர்களாக உள்ளனர்.

    இந்த நிறுவனத்திற்கு தொழிலதிபர் தீபக் கோத்தாரி என்பவர் 2015-ம் ஆண்டில் இருந்து 2023 காலகட்டங்களில் ரூ.60.48 கோடி பணம் கொடுத்துள்ளார். அதிக வட்டியை தவிர்க்க, இதை முதலீடு என மாற்றி பதிவு செய்ததாக கோத்தாரி குற்றம் சாட்டியுள்ளார்.

    பணம் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தப்படும் என்ற உத்தரவாதத்துடன், அந்தத் தொகையை முதலீடு செய்யுமாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    இந்தச் சூழலில், கடந்த 2016-ம் ஆண்டு அந்த நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் இருந்து ஷில்பா ஷெட்டி ராஜினாமா செய்துள்ளார்.

    அதன்பிறகு, அந்த நிறுவனத்திற்கு எதிராக ரூ.1.28 கோடி திவால் வழக்கு போடப்பட்டுள்ளது. இதுகுறித்து தனக்கு ஒருபோதும் தெரிவிக்கப்படவில்லை என கோத்தாரி குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக ஜூஹு காவல் நிலையத்தில் கோத்தாரி புகார் அளித்தார்.

    இந்நிலையில், புகாரின் அடிப்படையில் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீஸ் வேலைக்கான தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய வாலிபர், இளம் பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தார்.
    • அப்போது வந்த கும்பல் இளைஞரை கொடூரமாக தாக்கியது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இளம் பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்த நபரை, ஒரு கும்பல் அடித்தே கொன்ற கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.

    பீட்டாவாட் குர்த் கிராமத்தைச் சேர்ந்தவர் கான் (வயது 20), இவர் போலீஸ் வேலைக்கான தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்காக ஜாம்னர் நகருக்கு சென்றுள்ளார். விண்ணப்பித்து முடித்த உடன், அருகில் உள்ள கடையில் காபி குடித்தவாறு இளம்பெண் ஒருவருடன் பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது 10 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து, கான் உடன் தகராறு செய்து கொடூரமாக அடித்துள்ளனர்.

    அதோடு மட்டுமல்லாமல் அவர் வசித்து வந்த கிராமத்திற்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து கட்டை, இரும்பு கம்பியால் பலமாக தாக்கியுள்ளனர். கானின் குடும்பத்தினர் தடுக்க முயன்றும் பலனில்லாமல் போனது. இறுதியாக கான் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது தொடர்பாக புகார் அளித்து, அடித்து கொன்றவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என காவல்நிலையத்தை கானின் உறவினர்கள் முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர்.

    ஏற்கனவே உள்ள பழைய பகையால் கான் அடித்துக் கொள்ளப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • வழக்கு தொடர்ந்துள்ள நபரின் தாத்தாவினுடைய ஆதரவாளர்கள் இப்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர்.
    • குற்ற பின்னணியுடன் தொடர்புடைய வரலாறு இருக்கிறது.

    2023 ஆம் ஆண்டு லண்டன் சென்றிருந்தபோது சாவர்க்கரை குறிவைத்து ராகுல் காந்தி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார்.

    இந்துத்துவா சித்தாந்தவாதிக்கு எதிராக இழிவான கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறி, சாவர்க்கரின் பேரன் ராகுல் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்த வழக்கு வழக்கு புனே நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

    இந்த சூழலில், ராகுல் காந்தியின் வழக்கறிஞர் பவார் நீதிமன்றத்தில் ஒரு மனுவை சமர்ப்பித்துள்ளார். அதில் சாவர்க்கர் மற்றும் நாதுராம் கோட்சே ஆதவலர்களால் ராகுல் காந்தியின் உயிருக்கு அச்சறுத்தல் இருப்பதாகவும், அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

    அந்த மனுவில், வழக்கு தொடர்ந்துள்ள நபரின் தாத்தாவினுடைய ஆதரவாளர்கள் இப்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர்.

    இதனால் வழக்கில் ஆதிக்கம் செலுத்துவது அல்லது அழுத்தம் கொடுக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

    நமது தேசதந்தை மகாத்மா காந்தி கொலை வழக்கில் தொடர்புள்ள நாதுராம் கோட்சே, அவரின் தம்பி கோபால் கோட்சே ஆதவாளர்களுடன் மனுதாரருக்கு நேரடி தொடர்புள்ளது.

    எனவே குற்ற பின்னணியுடன் தொடர்புடைய வரலாறு இருப்பதால், அதுபோன்ற சூழ்நிலை மீண்டு வந்துவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கைக்காக மனு வழங்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார். 

    அவதூறு வழக்கு தொடர்ந்து சாவர்க்கர் பேரன் இதன் மூலம் அரசியல் ரீதியாக ஆதாயங்களை பெற வாய்ப்புள்ளதாகவும் பவார் தெரிவித்துள்ளார்.  

    • இந்த கார் நிறத்தை மாற்றும் திறன் கொண்டது.
    • உலகிலேயே 11 பேரிடம் மட்டும்தான் இந்தக் கார் உள்ளது.

    மும்பை:

    இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரும், ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரும், பிரபல தொழிலதிபருமாக இருந்து வருபவர் முகேஷ் அம்பானி. இவரது மனைவி நீடா அம்பானி.

    இந்நிலையில், ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவரான நீடா அம்பானி இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த காரை வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

    நீடா அம்பானியின் Audi A9 Chameleon காரின் விலை ரூ.100 கோடி ஆகும். அவரது கணவரான அம்பானியின் காரின் விலையை விட இது அதிகம்.

    இந்த கார் நிறத்தை மாற்றும் திறன்களைக் கொண்டுள்ளது. இதன் ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் நிறத்தை மாற்ற முடியும். இந்த வாகனமானது மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது.

    இந்தக் கார் உலகிலேயே 11 பேரிடம் மட்டும்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • டெல்லி தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.
    • தெருநாய்களை ஒட்டுமொத்தமாக அகற்றுவது என்பது கொடூரமான, குறுகிய பார்வை கொண்ட, இரக்கமற்ற செயல் என ராகுல் காந்தி கருத்து.

    டெல்லி தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவானது, இரக்கமற்றதும் குறுகிய பார்வை கொண்டதுமாகும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.

    டெல்லியில் சுற்றித்திரியும் அனைத்து தெருநாய்களையும் எட்டு வாரங்களுக்குள் பிடித்து காப்பகங்களில் அடைத்துப் பராமரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு நாய்கூட தெருக்களில் விடப்படக்கூடாது என்பதை உறுதி செய்யுமாறு டெல்லி அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களுக்குக் கடுமையாக அறிவுறுத்தியுள்ள நீதிமன்றம், இந்த நடவடிக்கைக்கு இடையூறு செய்யும் தனிநபர்கள், விலங்கு ஆர்வலர்கள் அல்லது அமைப்புகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

    உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், "டெல்லியில் உள்ள அனைத்து தெருநாய்களையும் அப்புறப்படுத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவானது மனிதாபிமான மற்றும் அறிவியல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கொள்கைகளிலிருந்து பின்னோக்கிச் செல்லும் நடவடிக்கையாகும். இந்த வாயில்லா ஜீவன்கள் அழிக்கப்பட வேண்டிய சிக்கல் அல்ல; தெருநாய்களை ஒட்டுமொத்தமாக அகற்றுவது என்பது கொடூரமான, குறுகிய பார்வை கொண்ட, இரக்கமற்ற செயலாகும்.

    அவற்றுக்கு உரிய தங்குமிடங்கள், கருத்தடை, தடுப்பூசி மற்றும் சமூகப் பராமரிப்பு போன்ற நடவடிக்கைகளின் மூலமே தெருக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். பொதுமக்களின் பாதுகாப்பையும் விலங்குகளின் நலனையும் ஒருசேரக் கொண்டு செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

    ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு மகாராஸ்டிர மாநில பாஜக தலைவர் ராஜ் புரோகித் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ராஜ் புரோஹித் கூறுகையில் "தேசிய பிரச்சினைகளை திசைப் திருப்புவதற்காக ராகுல் காந்தி நீதிமன்ற உத்தரவு மீது கவனம் செலுத்துகிறார். ராகுல் காந்தி நேர்மையற்ற அரசியல்வாதி போன்று சுற்றி வருகிறார். அதற்கு பதிலாக அவர் விவசாயிகள் நலன் மற்றும் வறுமை போன்ற முக்கியமான பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். பாகிஸ்தானின் (அணு ஆயுத தாக்குதல்) அச்சுறுத்தலுக்கு மத்தியில் அவர் பிரதமர் நரேந்திர மோடியை ஆதரித்திருக்க வேண்டும். டெல்லியில் இந்தியா கூட்டணி போராட்டம் நடத்தியது பாசாங்குத்தனம். தேசத்திற்கு எதிரானது. அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.

    • சம்பவம் தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • மயக்க மருந்துகளை கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.

    மகாராஷ்டிராவில் 14 வயது வங்கதேச சிறுமி 3 மாத காலத்திற்குள் 200 ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பால்கர் மாவட்டத்தில் வசாய் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த மாதம் 25-ந்தேதி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் இருந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி உள்பட 3 பேர் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் வங்கதேசத்தில் இருந்து சிறுமிகளை இந்தியாவுக்கு நுழைய உதவி உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பாதிக்கப்பட்ட சிறுமி போலீசாரிடம் கூறுகையில், பள்ளியில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்ததால் வீட்டை விட்டு வந்ததாகவும், அப்போது தனக்குத் தெரிந்த ஒரு பெண்மணியால் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்ததாகவும், பின்னர் பாலியல் தொழிலில் தன்னைத் தள்ளிவிட்டதாகவும் கூறினார். மேலும் மயக்க மருந்துகளை கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், சூடான கரண்டியால் முத்திரை குத்தியுள்ளதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார். கடந்த 3 மாதத்தில் 200 ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பல்வேறு சித்ரவதைகள் செய்ததாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    இதனிடையே, முன்கூட்டியே பருவமடைவதைத் தூண்டுவதற்காக சிறுமிக்கு ஹார்மோன் ஊசிகள் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி நவி மும்பை, மகாராஷ்டிராவின் புனே, குஜராத், கர்நாடகா மற்றும் நாட்டின் பிற இடங்களுக்கு கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • புனேவின் ஹெத் மலைப்பகுதியில் கொஹிடி கிராமத்தில் கேஷ்திர மகாதேவ் குண்டேஷ்வர் என்ற சிவன் கோவில் உள்ளது.
    • உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

    மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில், கோயிலுக்குச் சென்ற பக்தர்களின் வாகனம் மலைப் பகுதியில் இருந்து கவிழ்ந்ததில் 8 பெண்கள் உயிரிழந்தனர். மேலும், 29 பேர் படுகாயமடைந்தனர்.

    புனேவின் ஹெத் மலைப்பகுதியில் கொஹிடி கிராமத்தில் கேஷ்திர மகாதேவ் குண்டேஷ்வர் என்ற சிவன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு நேற்று மாலை புனேவின் பபல்வாடி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 40 பக்தர்கள் லாரியில் சென்று கொண்டிருந்தனர்.

    மலைப்பாங்கான பகுதியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் லாரியில் இருந்த பயணிகளில் 8 பெண் பக்தர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 29 பேர் படுகாயமடைந்தனர்.

    தகவலறிந்து விரைந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, மராட்டிய முதல்-மந்திரி பட்னாவிஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதேபோல், மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்தார். 

    • பீகார் மாநில வாக்களார் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு.
    • டெல்லியில் இன்று எம்.பி.க்கள் பேரணி மேற்கொண்டபோது, தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

    தேர்தல் ஆணையம் பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்த பணியை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. முக்கியமாக மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, தன்னிடம் ஆதாரம் இருப்பதாக தெரிவித்து வருகிறார்.

    இந்த நிலையில் பீகார் மாநில SIR-ஐ கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையத்தின் தலைமையகம் நோக்கி பேரணி சென்றனர். பேரணியின்போது ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

    இந்த நிலையில், பேரணியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டதன் மூலம், உலகம் ஜனநாயகத்தின் படுகொலையை கண்டுள்ளது உன சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், போராட்டத்தில் அரசு ஏன் தலையீடு செய்கிறது என்பதற்கு, இது தற்போதைய சாட்சி எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • மோர்படா அருகே வேகமாக வந்த லாரி அவர்கள் மீது மோதியுள்ளது.
    • பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    லாரி மோதிய விபத்தில் மனைவி இறந்த நிலையில் யாரும் உதவி செய்யாததால் தன் மனைவியின் உடலை பைக்கில் கட்டி எடுத்து சென்ற கணவரின் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவம் நாக்பூரில் நடந்துள்ளது. ரக்ஷா பந்தன் அன்றைக்கு அமித், கியார்சி தம்பதியினர் நாக்பூரின் லோனாராவிலிருந்து மத்தியப் பிரதேசத்தின் கரண்பூருக்கு சென்றுகொண்டிருந்த போது, மோர்படா அருகே வேகமாக வந்த லாரி அவர்கள் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் கியார்சி சாலையில் விழுந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய அந்த லாரி டிரைவர் நிற்காமல், அந்த பெண்ணின் மீது மீண்டும் மோதிவிட்டு அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

    அந்த பெண்ணின் கணவர் அமித் அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்டும், யாரும் உதவி செய்ய முன்வராததால் வேறு வழியில்லாமல் இறந்து போன தனது மனைவியின் உடலை தனது இரு சக்கர வாகனத்தில் கட்டிக்கொண்டு தனது கிராமத்திற்கு கொண்டுசெல்ல புறப்பட்டுள்ளார்.

    சிறிது நேரத்தில் பின்தொடர்ந்து வந்த காவல்துறையினர், வீடியோ எடுத்ததுடன் அமித்தை தடுத்து நிறுத்தி விசாரித்து உள்ளனர். விசாரணயில் அமித் நடந்ததைச் சொல்ல பின்னர் அவரது மனைவியின் உடலை நாக்பூரில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.



    • 288 இடங்களில் 160 இடங்களை வெல்ல உதவுவதாக உறுதியளித்து இரண்டு பேர் வந்தனர்.
    • அந்த 2 பேரும் டெல்லியில் எங்களை சந்திக்க வந்தார்கள்.

    நடந்து முடிந்த கர்நாடகா, மாகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், அரியானா சட்டமன்றத் தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல்களில் தேர்தல் ஆணையம் பஜகவுடன் இணைந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

    குறிப்பாக மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி அதிக இடங்கள் பெற்ற நிலையில் 5 மாதங்கள் கழித்து நடந்த சட்டமன்றத் தேர்தலில் தோற்றதை குறிப்பிட்ட அவர் இந்த இடைப்பட்ட குறுகிய காலத்தில் புதிதாக 1 கோடி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

    இந்நிலையில் மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நாக்பூரில் ஊடகங்களிடம் பேசினார்.

    அப்போது, மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் மோசடி செய்வதாக வாக்குறுதி அளித்து இரண்டு பேர் தன்னை அணுகியதாக தெரிவித்தார்.

    மாநில சட்டமன்றத் தேர்தலில் 288 இடங்களில் 160 இடங்களை வெல்ல உதவுவதாக உறுதியளித்து இரண்டு பேர்  அணுகியதாகவும், அதற்கான வழி அவர்களிடம் இருப்பதாகவும் பவார் கூறினார்.

    இருப்பினும், தானும் ராகுல் காந்தியும் இதை நிராகரித்ததாக அஜித் தலைவர் தெரிவித்தார்.

    "அந்த 2 பேரும் டெல்லியில் எங்களை சந்திக்க வந்தார்கள். எங்கள் கூட்டணி 288 இடங்களில் 160 இடங்களை வெல்ல உதவுவதாக அவர்கள் உறுதியளித்தனர். அவர்கள் சொன்னதைக் கேட்டு நாங்கள் ஆச்சரியப்பட்டோம்.

    தேர்தலை நாசமாக்குவதற்கு தங்களிடம் எல்லா வழிகளும் இருப்பதாக அவர்கள் கூறினர். இருப்பினும், ராகுல் காந்தியும் நானும் அவர்களைப் புறக்கணிக்க முடிவு செய்தோம். இது எங்கள் வழி அல்ல என்ற செய்தியையும் அவர்களுக்கு வழங்கினோம்" என்று சரத் பவார் தெரிவித்தார்.

    • இந்திய பொருட்கள் மீது டொனால்டு டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்தது நெருக்கடி உத்தியாகும்.
    • இந்திய மக்களாகிய நாம், நாட்டின் நலனை காக்க அரசுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நெருக்கடி உத்தியை இந்தியா அரசுக்கு எதிராக பயன்படுத்துகிறார். டொனால்டு டிரம்பின் நடவடிக்கைக்கு எதிராக இந்தியா அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என மகாராஷ்டிரா மாநில மூத்த அரசியல் கட்சி தலைவரும், தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) கட்சி தலைவருமான சரத் பவார் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சரத் பவார் கூறியதாவது:-

    இந்திய பொருட்கள் மீது டொனால்டு டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்தது நெருக்கடி உத்தியாகும். இந்திய மக்களாகிய நாம், நாட்டின் நலனை காக்க அரசுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.

    அமெரிக்க அதிபராக முதல்முறை பணியாற்றிய டிரம்பின் பணி முறையை நாம் பார்த்திருக்கிறோம். அவரை கட்டுப்படுத்த யாரும் இல்லை என நான் உணர்கிறேன். அவர் தனது மனதில் தோன்றுவதை உணர்ச்சிவசப்பட்டுப் பேசுகிறார்.

    நம் நாட்டிற்கும் அண்டை நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டு வரும் விரிசலை பிரதமர் மோடி புறந்தள்ளி விடக்கூடாது. இன்று பாகிஸ்தான் நமக்கு எதிராக இருக்கிறது. நேபாளம், வங்கதேசம், இலங்கை, மாலத்தீவுகள் கூட நம்முடைய மகிழ்சியாக இல்லை.

    நம்முடைய அண்டை நாடுகள் நம்மை விட்டு வலகிச் சென்று கொண்டிருக்கின்றன. உறவுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு சரத் பவார் தெரவித்துள்ளார்.

    ×