என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • பேட்ஸ்மேன்களுக்கான புதிய ஒருநாள் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டது.
    • இதில் ரோகித் சர்மா, விராட் கோலி பெயர்கள் நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    மும்பை:

    பேட்ஸ்மேன்களுக்கான புதிய ஒருநாள் தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. இதில் ரோகித் சர்மா, விராட் கோலி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெளியான பட்டியலில் முதல் 100 இடங்களில் கூட இருவரது பெயர்களும் இடம்பெறவில்லை.

    கடந்த வாரம் வரை இந்தப் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 2-வது இடத்திலும், விராட் கோலி 4-வது இடத்திலும் நீடித்து வந்தனர்.

    ஐ.சி.சி. விதிமுறைப்படி, சுமார் 9 மாத காலம் ஒரு விளையாட்டு வீரர் போட்டிகளில் பங்கேற்கவில்லை என்றால் அவரது பெயர் தரவரிசை பட்டியலில் இருந்து நீக்கப்படும் அல்லது ஓய்வு அறிவித்திருக்க வேண்டும். ஆனால் இந்த இரண்டும் இவர்கள் விஷயத்தில்

    நடக்கவில்லை.

    இந்தச் செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீயாகப் பரவி, பெரும் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

    தரவரிசைப் பட்டியலில் இருந்து அவர்களது பெயர்கள் நீக்கப்பட்டது ஒருவேளை இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார்களோ என்ற வதந்தி பரவியது.

    2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான அணியில் இருவருக்கும் என்பதை பிசிசிஐ மறைமுகமாக தெரிவிக்கிறதா எனவும் சாடி வருகின்றனர்.

    பி.சி.சி.ஐ. இருவரையும் ஓய்வுபெறும்படி கட்டாயப்படுத்திவிட்டதா என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    ரசிகர்களின் பதற்றம் உச்சத்தை எட்டிய நிலையில் சில மணி நேரங்களுக்குப் பிறகு ஐசிசி தனது தவறைத் திருத்தியது. இது ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட குழப்பம் எனத் தெரியவந்தது. அதன்பின் ஐசிசி வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் ரோகித் சர்மா 2-வது இடத்திலும், விராட் கோலி 4-வது இடத்திலும் இடம்பெற்றனர்.

    • வினோத் காம்ப்ளி உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.
    • உடல்நிலை சீராகி வந்தாலும் அவருக்கு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்படுகிறது.

    மும்பை:

    முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான வினோத் காம்ப்ளி (53), உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.

    சிறுநீர் தொற்று காரணமாக டிசம்பர் 2024-ல் தானே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின், அவர் வீட்டிற்குத் திரும்பியிருந்தாலும், அவரது குணமடைதல் மெதுவாகவும் கடினமாகவும் உள்ளது. உடல்நிலை சீராகி வந்தாலும் அவருக்கு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், அவரது இளைய சகோதரர் வீரேந்திர காம்ப்ளி தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:

    வினோத் காம்ப்ளி கடுமையான போராட்டத்தை எதிர்கொண்டு வருகிறார். ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அவருக்காக பிரார்த்தனை செய்யவேண்டும்.

    அவருக்கு பேசுவதில் சிரமம் உள்ளது. அவர் குணமடைய நேரம் எடுக்கும். ஆனால் அவர் ஒரு சாம்பியன், அவர் திரும்பி வருவார். அவர் நடக்கவும் ஓடவும் தொடங்குவார். அவர்மீது எனக்கு நிறைய நம்பிக்கை உள்ளது. நீங்கள் அவரை மீண்டும் மைதானத்தில் பார்க்க முடியும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

    வினோத் காம்ப்ளி இந்தியாவுக்காக 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
    • உணவு வீணாவதைத் தடுப்பதற்கான ஒரு முன்னோக்கிய படி.

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒரு ஓட்டலில் யாராவது உணவை வீணாக்கினால், அவர்கள் ரூ.20 அபராதம் செலுத்த வேண்டும் என்ற விதியை அறிமுகப்படுத்தி உள்ளது.

    உணவு வீணாவதைத் தடுக்க இந்த புதுமையான முடிவை எடுத்துள்ளது. உணவை வீணாக்குவதற்கு அபராதம் விதித்து கையால் எழுதப்பட்ட உணவக அறிவிப்பு கார்டு புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    இதுகுறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    திருமணங்கள் மற்றும் பிற நிகழ்வுகளிலும் இதே போன்ற விதி இருந்தால் உணவு வீணாவதை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். உணவு வீணாவதைத் தடுப்பதற்கான ஒரு முன்னோக்கிய படி.

    உணவை வீணாக்கக்கூடாது என்பது சரிதான் ஆனால் ஒருவர் எப்படி தங்களுக்குப் பிடிக்காத உணவை உண்ணும்படி கட்டாயப்படுத்த முடியும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

    இருப்பினும் வாடிக்கையாளர்கள் பொறுப்புடன் செயல்பட ஊக்குவிக்கும் நோக்கில் உணவகம் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

    • மும்பையை அச்சுறுத்தும் மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை இலாகா ஆரஞ்சு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
    • தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

    மும்பையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக நேற்றும், நேற்று முன்தினமும் மும்பையில் புறநகர் பகுதிகளிலும் வரலாறு காணாத அளவுக்கு மிக கன மழை பெய்தது.

    இந்த 2 நாட்களில் மட்டும் 300 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்ததால் மும்பையில் சாலைகள், தெருக்கள் வெள்ளத்தில் மிதந்தன.

    இந்த நிலையில் இன்று 5-வது நாளாக மும்பையில் பலத்த மழை பெய்து வருகிறது. மும்பையை அச்சுறுத்தும் மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை இலாகா ஆரஞ்சு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

    மும்பையில் மட்டுமின்றி தானே, புனே, ராய்கட், கோல்காபூர், ரத்தினபுரி உள்பட பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்கிறது. இதனால் மும்பையில் இருந்து பெரும்பாலான மாவட்டங்களுக்கு போக்குவரத்து தடைப்பட்டு உள்ளது. அதுபோல வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து மும்பைக்கு வரும் போக்குவரத்து முடங்கி உள்ளது.

    மும்பையில் நீடிக்கும் மழை காரணமாக இன்று ரெயில், பஸ், விமான போக்குவரத்துக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. முக்கிய சாலைகளில் இடுப்பளவுக்கு தண்ணீர் ஓடுகிறது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    தொடர் மழை காரணமாக பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்களும் இயங்கவில்லை. 90 சதவீத மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.



    மும்பையில் மழை காரணமாக இதுவரை 21 பேர் பலியாகி உள்ளனர். தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 பேரை தேடும் பணி நடந்து வருகிறது. பேரிடர் மீட்பு குழுவினர் கூடுதலாக மும்பைக்கு விரைந்து உள்ளனர்.

    மும்பையில் பக்திமார்க்-செம்பூர் இடையே மோனோ ரெயிலில் சிக்கி தவித்த 800 பயணிகள் மீட்கப்பட்டனர். அதுபோல தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும் மழை காரணமாக 12 லட்சம் ஹெக்டேர் விளை நிலங்களில் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    • இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
    • தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சத்தாரா மாவட்டத்தில் குடிபோதையில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பெண் போலீஸ் அதிகாரியை ஆட்டோவில் 120 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. .

    பாக்யஸ்ரீ ஜாதவ் என்ற பெண் போலீஸ் அதிகாரி, ஒரு ஆட்டோவை நிறுத்துமாறு சைகை செய்தார். ஆனால் ஓட்டுநர் ஆட்டோவை நிற்காமல் வேகமாக இயக்கியுள்ளார். அப்போது ஆட்டோவில் பின்னால் சிக்கி பெண் போலீஸ் அதிகாரி இழுத்து செல்லப்பட்டார்.

    இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    பின்னர் அங்கிருந்தவர்கள் ஆட்டோவை தடுத்து நிறுத்தி போலீஸ் அதிகாரியை மீட்டனர். இதனையடுத்து ஆட்டோ ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தின் போது காயமடைந்து பாக்யஸ்ரீ தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    • மைசூர் காலனி ரெயில் நிலையம் வந்த மோனோ ரெயில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பாதி வழியின் நின்றது.
    • விபத்து குறித்து மோனோ ரெயில் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    மகாராஷ்டிரா தலைநகர் மும்பை மற்றும் புறநகரில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. இன்று காலையிலும் மழை வெளுத்து வாங்கியது.

    கொட்டித் தீர்த்த கனமழையால் மும்பை நகரமே வெள்ளக்காடாக மாறி உள்ளது. சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

    இதற்கிடையே, மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மைசூர் காலனி ரெயில் நிலையம் வந்த மோனோ ரெயில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பாதி வழியின் நின்றது. இதனால் ரெயில் பயணித்த பயணிகள் அச்சம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ரெயிலில் சிக்கி இருந்தவர்களை நீள ஏணிகளின் மூலம்  மீட்கும் பணிகள் நடந்தன. இந்நிலையில் சுமார் 4 மணி நேர போராட்டத்தின் பின் சிக்கியிருந்த 582 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.  

    விபத்து குறித்து மோனோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள முதற்கட்ட அறிக்கையில், "வழக்கத்தைவிட ரயிலில் பயணிகள் கூட்டம் அதிகரித்ததால் ரெயிலின் எடை 109 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. இது ரெயிலின் இயல்பான எடை தாங்கும் திறனாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 104 மெட்ரிக் டன் அளவைவிட அதிகம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • ரெயில் தண்டவாளங்களில் 17 அங்குலம் வரை தண்ணீர் தேங்கியதால், புறநகர் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.
    • மும்பை மோனோ ரெயில் ஒன்று நடுவழியில் அந்தரத்தில் சிக்கிய நிலையில் அதில் இருந்த சுமார் 500 பயணிகள் தீயணைப்பு துறையினரால் மீட்கப்பட்டனர்.

    மகாரஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 300 மி.மீ. மழை பெய்துள்ளது. நகரில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.

    இந்நிலையில் அடுத்த 48 மணிநேரம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

    மும்பை, தானே, ராய்காட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கனமழையால் மிதி (Mithi) நதி அபாயக்கட்டத்தை தாண்டியதால், அப்பகுதியில் இருந்த 400 முதல் 500 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    மும்பை விமான நிலையத்தில் 304 புறப்படும் விமானங்களும், 198 உள்வரும் விமானங்களும் தாமதமாகின. 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ரெயில் தண்டவாளங்களில் 17 அங்குலம் வரை தண்ணீர் தேங்கியதால், புறநகர் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.

    தாழ்வான பகுதிகளான தாதர், மாதுங்கா, பரேல், சியோன் போன்ற இடங்களில் வெள்ள நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்கி வருகிறது.  

    இதற்கிடையே மும்பை மோனோ ரெயில் ஒன்று நடுவழியில் அந்தரத்தில் சிக்கிய நிலையில் அதில் இருந்த சுமார் 500 பயணிகள் தீயணைப்பு துறையினரால் மீட்கப்பட்டனர்.

    • கொட்டித் தீர்த்த கனமழையால் மும்பை நகரமே வெள்ளக்காடாக மாறி உள்ளது.
    • சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

    மும்பை:

    மகாராஷ்டிரா தலைநகர் மும்பை மற்றும் புறநகரில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. இன்று காலையிலும் மழை வெளுத்து வாங்கியது.

    கொட்டித் தீர்த்த கனமழையால் மும்பை நகரமே வெள்ளக்காடாக மாறி உள்ளது. சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

    இதற்கிடையே, மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மைசூர் காலனி ரெயில் நிலையம் வந்த மோனோ ரெயில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பாதி வழியின் நின்றது. இதனால் ரெயில் பயணித்த பயணிகள் அச்சம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ரெயிலில் சிக்கி இருந்தவர்களை நீள ஏணிகளின் மூலம் பத்திரமாக மீட்டு வருகின்றனர்.

    • மும்பை மற்றும் புறநகரில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
    • சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

    மும்பை:

    மகாராஷ்டிரா தலைநகர் மும்பை மற்றும் புறநகரில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. இன்று காலையிலும் மழை வெளுத்து வாங்கியது.

    கொட்டித் தீர்த்த கனமழையால் மும்பை நகரமே வெள்ளக்காடாக மாறி உள்ளது.

    சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

    இந்நிலையில், இந்திய அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் ரோகித் சர்மா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அனைவரும் பத்திரமாக, பாதுகாப்பாக இருங்கள் என பதிவிட்டுள்ளார்.

    • கொட்டித் தீர்த்த கனமழையால் மும்பை நகரமே வெள்ளக்காடாக மாறி உள்ளது.
    • சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

    மகாராஷ்டிரா தலைநகர் மும்பை மற்றும் புறநகரில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. இன்று காலையிலும் மழை வெளுத்து வாங்கியது.

    கொட்டித் தீர்த்த கனமழையால் மும்பை நகரமே வெள்ளக்காடாக மாறி உள்ளது. மும்பையில் வெளுத்து வாங்கும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

    • மும்பையில் பல இடங்களில் தாழ்வான பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது
    • மும்பையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

    மகாராஷ்டிரா தலைநகர் மும்பை மற்றும் புறநகரில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. இன்று காலையிலும் மழை வெளுத்து வாங்கியது.

    இதனால் மும்பையில் பல இடங்களில் தாழ்வான பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. அந்தேரி மேற்கு, வீர தேசாய் சாலையில் 1 அடிக்கும் மேல் நீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.

    மேலும் மும்பையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

    • தேவையில்லாமல் வீடுகளை விட்டு யாரும் வெளியில் வரவேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • மும்பை மற்றும் ராய்காட் மாவட்டத்தில் இன்று மிக கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    மும்பை:

    மும்பை மற்றும் புறநகரில் நேற்று இரவு விடிய விடிய இடைவிடாமல் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இன்று காலையிலும் மழை வெளுத்து வாங்கியது.

    இதனால் மும்பையில் பல இடங்களில் தாழ்வான பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. சயானில் உள்ள சண்முகாந்தா ஹாலை சுற்றி சுமார் 1 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் தேங்கியது.

    அந்தேரி சுரங்கப்பாதை மூடப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. குர்லா, செம்பூர், கிங்சர்க்கிள் உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. விரைவு சாலைகளில் வாகனங்கள் வெள்ளத்தில் தத்தளித்தபடி சென்றது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

    தேவையில்லாமல் வீடுகளை விட்டு யாரும் வெளியில் வரவேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மும்பை அருகே உள்ள விக்ரோலியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சில வீடுகள் சேதம் அடைந்தது. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிர் இழந்தனர். காயம் அடைந்த 2 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.

    மழையால் விமான சேவையும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. விமானங்கள் புறப்படும் நேரம் குறித்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு கேட்டறியலாம் என பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    மும்பை தவிர பால்கர், தானே, ரத்னகிரி, உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மும்பை மற்றும் ராய்காட் மாவட்டத்தில் இன்று மிக கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    ×