என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • வெளியில் சென்றிருந்த ஆதித்யா ராய் கபூர் வீட்டிற்கு திரும்பினார்.
    • நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் நுழைய முயன்ற ஒரு ஆணும் பெண்ணும் மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

    பாலிவுட் நடிகர் ஆதித்யா ராய் கபூரின் வீட்டிற்குள் அனுமதியின்றி நுழைந்ததற்காக துபாயைச் சேர்ந்த ஒரு பெண்ணை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.

    நேற்று (திங்கள்கிழமை) மாலை, ஆதித்யா ராய் கபூரின் வீட்டிற்கு அந்தப் பெண் வந்து, அவருக்கு உடைகள் மற்றும் பரிசுகளை வழங்க வந்ததாக கூறியுள்ளார். நடிகருடன் முன்கூட்டியே ஒரு சந்திப்பு இருப்பதாக அவர் கூறிய பிறகு, வீட்டுப் பணிப்பெண் அப்பேனை உள்ளே அனுமதித்தார்.

    வெளியில் சென்றிருந்த ஆதித்யா ராய் கபூர் வீட்டிற்கு வந்த பிறகு, ஊழியர்கள் அந்தப் பெண்ணின் வருகை குறித்து அவருக்குத் தெரிவித்தனர். இருப்பினும், அப்பெண் யார் என்று தனக்குத் தெரியாது என்று கபூர் கூறியுள்ளார். இதனால் எச்சரிக்கை அடைந்த வீட்டு ஊழியர்கள், அவர் ஆதித்யாவை நெருங்க முயன்றபோது அவரைத் தடுத்தனர்.

    உடனடியாக அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்தப் பெண்ணைக் கைது செய்தனர். அவரின் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

    மும்பையில் சமீப காலமாக பிரபல நடிகர்களின் வீடுகளுக்குள் மர்ம நபர்கள் அத்துமீறி நுழையும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு, நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் நுழைய முயன்ற ஒரு ஆணும் பெண்ணும் மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அல்ட்ரா சிமெண்ட் (22.1 சதவீதம்), ஐடிசி (2.01 சதவீதம்), டாடா மோட்டார்ஸ், என்டிபிசி, ஆக்சிஸ் வங்கி பங்குகள் சரிவு.
    • சன் பார்மா, அதானி போர்ட்ஸ், நெஸ்ட்லே, ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் ஏற்றம் கண்டன.

    இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் 624.82 புள்ளிகளும், இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் 174.95 புள்ளிகளும் சரிந்தன.

    மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் நேற்றைய வர்த்தக முடிவில் 82,176.45 புள்ளிகளாக இருந்தது. இன்று காலை 130 புள்ளிகள் குறைந்து 82,038.20 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. அதன்பின் சுமார் 1050 புள்ளிகள் வரை சரிவை சந்தித்தது. பின்னர் மெல்லமெல்ல ஏற்றம் கண்டது. இன்று அதிக பட்சமாக 82,410.52 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 81,121.70 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 624.82 (0.76%) புள்ளிகள் சரிந்து 81,551.63 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    இதேபோல் இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி நேற்றைய வர்த்தக முடிவில் 25,001.15 புள்ளியாக இருந்தது. இன்று காலை 5 புள்ளிகள் குறைந்து 24,956.65 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. பின்னர் 295 புள்ளிகள் வரை குறைந்து, குறைந்த பட்சமாக 24,704.10 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. அதன்பின் கடகடவென உயர்ந்தது. அதிபட்சமாக 25,062.90 புள்ளிகளில் வர்த்தகமானது. இறுதியாக 174.95 (0.70%) புள்ளிகள் சரிந்து 24,826.20 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    அல்ட்ரா சிமெண்ட் (22.1 சதவீதம்), ஐடிசி (2.01 சதவீதம்), டாடா மோட்டார்ஸ், என்டிபிசி, ஆக்சிஸ் வங்கி, ஹெச்.சி.எல். டெக், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிசிஐ வங்கி பங்குகள் சரிவை சந்தித்தன.

    இந்தூஸ்இந்த் வங்கி, சன் பார்மா, அதானி போர்ட்ஸ், நெஸ்ட்லே, ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் ஏற்றம் கண்டன.

    • பாராளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
    • உத்தவ் தாக்கரே காலில் விழாததால்தான் பாஜக சிவசேனாவைப் பிளவுபடுத்தியது

    26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதமாக இந்திய ராணுவத்தால் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் தோல்வியடைந்தது என சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

    அவர் கூறியதாவது, "பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதல் ஏன் நடந்தது? அதற்கு அமித் ஷா மட்டுமே பொறுப்பு. உள்துறை அமைச்சராக அவர் தோல்வியடைந்தவர். பிரதமர் மோடி அவரை ராஜினாமா செய்து பதவி விலகச் சொல்ல வேண்டும்.

    ஆபரேஷன் சிந்தூர் ஒரு தோல்வி. பாராளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் இதைக் கோரினார்" என்று சஞ்சய் ராவத் கூறினார்.

    மேலும், உத்தவ் தாக்கரே காலில் விழாததால்தான் பாஜக சிவசேனாவைப் பிளவுபடுத்தியது என்று சஞ்சய் ராவத் குற்றம் சாட்டினார்.

    ஜூன் 2022 இல், ஏக்நாத் ஷிண்டே உத்தவ் பிரிவுடன் முறித்துக் கொண்டு பாஜகவில் இணைந்து மஹாயுதி கூட்டணியை உருவாக்கி ஆட்சிக்கு வந்தார்.

    மத்தியிலும், மூன்றரை ஆண்டுகாலம் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த பாஜக, பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. தங்கள் தோல்வியை மறைக்க எதற்கும் மகாத்மா காந்தி, நேரு, இந்திரா காந்தி மற்றும் மன்மோகன் சிங் மீது பழி சுமத்துவதாக சஞ்சய் ராவத் விமர்சித்தார்.

    இந்த மாதம் 7 ஆம் தேதி, இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டு 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது.    

    • மும்பை, ராய்காட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
    • மும்பையின் ஆச்சார்யா ஆத்ரே சௌக் மெட்ரோ நிலையத்திற்குள் மழை நீர் புகுந்தது.

    தலைநகர் மும்பை உட்பட மகாராஷ்டிராவின் பல மாவட்டங்களில் காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

    சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் ரெயில்களும் பாதிக்கப்பட்டன.

    மும்பை, ராய்காட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

    இன்று (திங்கள்கிழமை) காலை இடி, மின்னலுடன் கூடிய கனமழை தொடங்கியதால், மும்பைவாசிகள் சிரமப்பட்டனர். குர்லா, வித்யாவிஹார், சியோன், தாதர், பரேல் பகுதிகள் மற்றும் மேற்கு புறநகர்ப் பகுதிகளில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    மும்பையில் அடுத்த சில மணி நேரங்களுக்கு மிதமான முதல் கனமழை வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்தச் சூழலில், மிகவும் அவசியமான சந்தர்ப்பங்களில் மட்டுமே குடிமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு நகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இதற்கிடையே கனமழை காரணமாக மும்பையின் ஆச்சார்யா ஆத்ரே சௌக் மெட்ரோ நிலையத்திற்குள் மழை நீர் புகுந்தது. ரெயில்களை விட்டு வெளியே வர அஞ்சிய மக்கள் உள்ளேயே இருந்தனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. 

    • பிரதமர் மோடி அரசின் கீழ் 60 கோடி ஏழை மக்கள் 5 லட்சம் வரையில் இலவச சிகிச்சை பெற்றுள்ளனர்.
    • மோடி தலைமையிலான அரசு 1.35 லட்சம் கோடி ரூபாய் சுகாதாரத்துறைக்கு ஒதுக்கியுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள தேசிய புற்றுநோய் இன்ஸ்டிடியூட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் தங்குவதற்காக வீடுகள் கட்டிக் கொடுப்பதற்கான ஸ்வாஸ்தி நிவாஸ் (Swasti Niwas) திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.

    இந்த அடிக்கல் விழாவில் அமித் ஷா பேசியதாவது:-

    பிரதமர் மோடி அரசின் கீழ் 60 கோடி ஏழை மக்கள் 5 லட்சம் வரையில் இலவச சிகிச்சை பெற்றுள்ளனர். மோடி தலைமையிலான அரசு 1.35 லட்சம் கோடி ரூபாய் சுகாதாரத்துறைக்கு ஒதுக்கியுள்ளது. இது மன்மோகன் அரசில் 37 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. பிரதமர் மோடி தலைமையின் கீழ் சுகாதாரத்துறை கட்டமைப்புகள் மிகப்பெரிய வளர்சியை பெற்றுள்ளன.

    வரும் காலங்களில் இந்த இன்ஸ்டிடியூட் கேன்சருக்கு சிகிச்சை அளிக்கும் நாட்டின் சிறந்ததாக வளர்ச்சிப் பெற இருக்கிறது. கேன்சருக்கான சிகிச்சை நீண்ட காலமானது. நோயாளிகள், அவர்களுடைய குடும்பங்களின் வலி அதிகமானது. வலியை தனிப்பட்ட முறையில் அனுபவிப்பவர்கள் மட்டுமே சமூகத்திற்கு சேவை செய்யும் மனப்பான்மையைக் கொண்டுள்ளனர் மற்றும் மக்களின் துன்பத்தை துடைக்கிறார்கள்.

    • சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தானே நகராட்சி தெரிவித்துள்ளது.
    • பெங்களூருவில் நேற்று ஒருவர் கொரோனா வைரஸால் இறந்தார்.

    நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருமகிறது.

    மகாராஷ்டிராவின் தானேயில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் கால்வா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 21 வயது கோவிட்-19 நோயாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தானே நகராட்சி தெரிவித்துள்ளது.

    மும்ப்ராவைச் சேர்ந்த அவர் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மே 22, 2025 அன்று தானேயில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

    இதற்கிடையே பெங்களூருவில் நேற்று ஒருவர் கொரோனா வைரஸால் இறந்தார்.   

    • கைது செய்யப்பட்டவர் சோட்யா சுந்தர் கோப்ரகடே ஆவார்.
    • குதிரை சவாரி அகாடமியில் குதிரையை வன்புணர்வு செய்தார்.

    மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள குதிரை சவாரி அகாடமியில் குதிரையை பாலியல் வன்புணர்வு செய்ததற்காக 30 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் சோட்யா சுந்தர் கோப்ரகடே ஆவார்.

    இந்த சம்பவம் மே 17 அன்று கிட்டிகாடன் பகுதியில் உள்ள அகாடமியில் நடந்தது. சுந்தர் இரவில் அகடெமிக்குள் அத்துமீறி நுழைவதை செக்யூரிட்டி கவனித்தார்.

    பின்னர் சிசிடிவி கேமராவை ஆராய்ந்தபோது, அந்த இளைஞர் குதிரைகளில் ஒன்றை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அகாடமி மேலாளர் போலீசில் புகார் அளித்தார்.

    இதைத்தொடர்ந்து அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். விசாரணை நடைபெற்று வருவதாகவும், அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • மோசமான நிதி நிலைமை காரணமாக, தொழில்நுட்ப படிப்புக்கு பதிலாக பி.ஏ. படித்தார்.
    • ஸ்ரீஹரிகோட்டாவில் திறன் தேர்வுக்கு அழைக்கப்பட்டார்.

    மகாராஷ்டிராவின் கோண்டியா மாவட்டத்தில் உள்ள நந்தன் நகரைச் சேர்ந்த பானி பூரி (கோல்கப்பா) விற்பனையாளரான ராம்தாஸ், தற்போது இஸ்ரோவில் தொழில்நுட்ப வல்லுநர் பிரிவில் பணிபுரிகிறார்.

    அவரது தந்தை டோங்கர்கான் ஜில்லா பரிஷத் பள்ளியில் பியூனாகப் பணியாற்றி சமீபத்தில் ஓய்வு பெற்றார். அவரது தாயார் ஒரு இல்லத்தரசி. மோசமான நிதி நிலைமை காரணமாக, தொழில்நுட்ப படிப்புக்கு பதிலாக பி.ஏ. படித்தார். அதன் பிறகு அவரால் படிக்க முடியவில்லை. நிதி நெருக்கடி காரணமாக, பகலில் பானிபூரி விற்றும், இரவில் படிப்பதன் மூலமும் ராம்தாஸ் தனது இலக்கை நோக்கி முன்னேறினார்.

    டிரோராவில் உள்ள தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில் (ஐடிஐ) சேர்ந்து பம்ப் ஆபரேட்டர்-கம்-மெக்கானிக் படிப்பை முடித்தார். அங்கு நீர் சுத்திகரிப்பு மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப திறன்களை வளர்த்துக்கொண்டார்.

    2023 ஆம் ஆண்டில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பயிற்சி பயிற்சிப் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டது. அதற்கு விண்ணப்பித்து, 2024 ஆம் ஆண்டு நாக்பூரில் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அவர், ஆகஸ்ட் 29, 2024 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் திறன் தேர்வுக்கு அழைக்கப்பட்டார். திறன் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, அவர் இஸ்ரோவால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    மே 19, 2025 தேதியிட்ட சேர்க்கை கடிதத்தின் அவரை தேடி வந்தது. இதன்மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் விண்வெளி மையத்தில் பம்ப் ஆபரேட்டர்-கம்-மெக்கானிக்காக ராமதாஸ் தற்போது சேர்ந்துள்ளார்.

    • 2023-24 நிதியாண்டில் மத்திய அரசுக்கு 2.1 லட்சம் கோடி ரூபாய் டிவிடெண்டாக வழங்கியது.
    • தற்போது 27.4 சதவீதம் அதிகரித்து 2.69 லட்சம் கோடி ரூபாயாக வழங்க இருக்கிறது.

    2024-25 நிதியாண்டுக்கான டிவிடெண்டாக மத்திய அரசுக்கு இந்திய ரிசர்வ் வங்கி இதுவரை இல்லாத அளவிற்கு 2.69 லட்சம் கோடி ரூபாய் வழங்க உள்ளது.

    இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா தலைமையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் மத்திய இயக்குநர்கள் குழுவின் 616ஆவது கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    2023-24 நிதியாண்டில் மத்திய அரசுக்கு 2.1 லட்சம் கோடி ரூபாய் டிவிடெண்டாக வழங்கியது. 2022-2023 நிதியாண்டில் 87,416 கோடி ரூபாய் டிவெண்டாக வழங்கியிருந்தது.

    அவசர காலத்தில் நிலைமையை சமாளிப்பதெற்கென்று ஒதுக்கப்படும் நிதி சிஆர்பி (Contingent Risk Buffer) என்பது ஆகும். ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட சதவிகிதத்தில் ரிசர்வ் வங்கி இந்த அவசரகால ஆபத்து தணிப்பு (சிஆர்பி) நிதியை பராமரிக்கும். அந்த நிதி ஆண்டு முடிந்த பிறகு உபரியாக இருக்கும் நிதியை மத்திய அரசுக்கு வழங்கும். இது உபரி நிதி அல்லது டிவிடெண்ட் என்று அழைக்கப்படுகிறது.

    இந்த சிஆர்பி 7.50 சதவீதத்தில் இருந்து 4.50 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும். குறைக்கவும் ஒப்புதல் வழங்கியுள்ளது. கடந்த நிதியாண்டில் 6.50 சதவீதமாக இருந்த சிஆர்பி தற்போது 7.50 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • சக மாணவருடன் படம் பார்க்க சென்றபோது, தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
    • மது அருந்த வைத்து தனது நண்பர்களுடன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

    மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் 3ஆம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வரும் மாணவி (வயது 22) ஒருவர், கடந்த 18ஆம் தேதி தன்னுடன் படிக்கும் சக மாணவனுடன் இரவு 10 மணிக்கு படம் பார்க்க சென்றுள்ளார். அப்போது அந்த மாணவன் மது அருந்தியுள்ளான். மாணவியை யாரும் இல்லாத தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளான். அப்போது அந்த மாணவியை மது அருந்தும்படி வற்புறுத்தியுள்ளான். தன்னுடன் படிக்கும் சக மாணவன் வற்புறுத்தியதால், அந்த மாணவி மது அருந்தியுள்ளார்.

    இதனால் மாணவி போதை தலைக்கேறி என்ன நடக்கிறது என்பது தெரியாத அளவிற்கு மதிமயங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த மாணவன் தன்னுடைய படிக்கும் மேலும் ஒரு மாணவன் மற்றும் ஒரு நண்பரை அந்த இடத்திற்கு வரவழைத்துள்ளான்.

    பின்னர் 3 பேரும் சேர்ந்து அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். போதை தெளிந்த பின்னர், மாணவருடன் சண்டையிட இந்த விசயம் தொடர்பாக யாரிடமாவது தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.

    இருந்தபோதிலும், தனக்கு நடத்த கொடூரத்தை, தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் சில பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைமுது சயெ்துள்ளனர்.

    • காந்தரின் புதிய பிராண்ட் அம்பாசடராக பாலிவுட் இளவரசர் ஷாருக் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • பச்சன் பாரம்பரிய நம்பிக்கையையும், கான் நவீன அழகு உணர்வையும் கொண்டு வருகிறார்கள்.

    இணையத்தில் பெரும் கவர்ச்சியையும் ஊகங்களையும் ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    கால்யான் ஜுவல்லர்ஸ் குழுமத்தின் வாழ்க்கைமுறை நகை பிராண்டான காந்தரின் புதிய பிராண்ட் அம்பாசடராக பாலிவுட் இளவரசர் ஷாருக் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இது வெறும் பிரசாரச் செய்தி அல்ல. இந்திய நகைத் தொழிலில் ஒரு திருப்புமுனை. பல நாட்களாக டீசர் வீடியோக்கள் மூலம் பரிந்துரைக்கப்பட்ட இந்த வாய்ப்பு, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.

    ஸ்டைலிஷ் நகைகளில் திகழ்ந்த கானின் தோற்றம், இது அவருடைய சொந்த முயற்சியா என்ற கேள்விகளுக்கே துவக்கமாயிற்று.

    அதில் தெளிவாகக் கூறப்பட்டது: ஷாருக் கான் காந்தரின் பிராண்ட் முகம்தான், உரிமையாளர் அல்ல. இது ஒரு தூய்மையான பிராண்டு தூதுவராக இருந்தாலும், அதன் கலாச்சார, வர்த்தக தாக்கம் முக்கியத்துவம் வாய்ந்தது.

    இப்போது, அமிதாப் பச்சனை பிரதிநிதித்துவப்படுத்தும் கால்யான் ஜுவல்லர்ஸும், ஷாருக் கானை பிரதிநிதித்துவப்படுத்தும் காந்தரும், ஒரே குழுமத்தின் கீழ் இணைந்துள்ளன.

    பச்சன் பாரம்பரிய நம்பிக்கையையும், கான் நவீன அழகு உணர்வையும் கொண்டு வருகிறார்கள்.

    • நக்சலைட்டுகளை முற்றிலும் அழிக்க மத்திய அரசு உறுதிப்பூண்டுள்ளது.
    • சத்தீஸ்கரில் 27 நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், மகாராஷ்டிரா எல்லையில் தற்போது 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    மகாராஷ்டிரா- சத்தீஸ்கர் மாநில எல்லையில் அமைந்துள்ள மகராஷ்டிராவின் கிழக்கு மாவட்டமான கட்சிரோலியில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

    கட்சிரோலி மாவட்டத்தின் கவாண்டே பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் இருப்பதாக நம்பத்தகுந்த ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் போலீஸ் சிறப்பு கமாண்டோ குழு சி-60 மற்றும் சிஆர்பிஃஎப் வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    நேற்று மதியத்தில் இருந்து வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கனமழை பெய்த போதிலும் 300 போலீசார் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் கவாண்டே மற்றும் நெல்குண்டாவில் இருந்து இந்திராவதி ஆற்றங்கரையோரம் வரை இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இன்று காலை ஆற்றங்கரையோரத்தை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபடும்போது மறைந்திருந்த நக்சலைட்டுகள் போலீசார் மற்றும் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு போலீசார் மற்றும் சிஆர்பிஆஃப் வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.

    இரண்டு மணி நேரத்திற்கு மேலான நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

    அத்துடன் துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர். சத்தீஸ்கரின் பெசவராஜு என்ற நக்சலைட் தலைவர் உள்பட 27 பேர் சில தினங்களுக்கு முன் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த நிலையில் மகாராஷ்டிரா- சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்த துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது.

    ×