என் மலர்
மகாராஷ்டிரா
- தான் நம்பும் பாதையைப் பின்பற்றுவதில் நம்பிக்கை கொண்டவர்.
- வேறுபட்ட நம்பிக்கைகளைக் கொண்டவர்களை மதிப்பவர்தான் இந்து.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடு வகையில் 3 நாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் "இந்து என்பவர் யார்? தான் நம்பும் பாதையைப் பின்பற்றுவதில் நம்பிக்கை கொண்டவர். வேறுபட்ட நம்பிக்கைகளைக் கொண்டவர்களை மதிப்பவர்தான்" என்றார்.
- ரிசர்வ் வங்கியும் பொருளாதாரத்திற்குத் தேவையான ஆதரவை அளிக்கும்.
- அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுகளைத் தரும் என நம்புகிறோம்.
ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதற்கு தண்டனையாக இந்தியா மீது அமெரிக்கா 25 சதவீதம் வரி விதித்தது. ஏற்கனவே விதித்த 25 வரியுடன் சேர்ந்து தற்போது வரிச்சுமை 50 சதவீதம் ஆகி உள்ளது. இந்த கூடுதல் வரிவிதிப்பு நாளை முதல் அமலுக்கு வர உள்ளது.
இந்நிலையில் இதன் விளைவுகள் குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா விளக்கம் அளித்துள்ளார்.
நேற்று, மும்பையில் நடைபெற்ற வங்கிகள் மாநாட்டில் பேசிய அவர், "இந்த வரிவிதிப்பால், ரத்தினக் கற்கள், நகைகள், ஜவுளி, ஆடைகள் மற்றும் இறால் ஏற்றுமதி போன்ற துறைகள் கடுமையாகப் பாதிக்கப்படலாம்.
இந்த பாதிப்புகளை எதிர்கொள்ள அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரிசர்வ் வங்கியும் பொருளாதாரத்திற்குத் தேவையான ஆதரவை அளிக்கும்.
ஏற்கெனவே, பொருளாதாரம் புழங்குவதற்கு வசதியாக ரெப்போ வட்டி விகிதத்தை 100 புள்ளிகள் குறைத்துள்ளோம்.
அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுகளைத் தரும் என்றும் இந்த வரிவிதிப்பால் இந்தியாவின் வர்த்தக உறவுகள் பாதிக்கப்படாது நாங்கள் நம்புகிறோம்.
ஆகஸ்ட் 15, 2025 நிலவரப்படி இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு 695 பில்லியன் டாலர் ஆக உள்ளது. இது சுமார் 11 மாத இறக்குமதிக்கு போதுமானது.
இந்தியப் பொருளாதாரம் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் வலுவான அடித்தளத்தைக் கொண்டுள்ளது" என்று தெரிவித்தார்.
- ராகுல் காந்தி ஒரு தொடர் பொய்யர் என நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.
- அவர் இடைவிடாமல் தொடர்ந்து பொய்யை பரப்பி வருகிறார்.
பாஜக-வுக்கு எதிராக வாக்கு திருட்டு குற்றச்சாட்டை தொடர்ந்து கூறிவரும் ராகுல் காந்தி, தொடர் பொய்யர் என மகாராஷ்டிரா மாநில முதல்வர் பட்நாவிஸ் தாக்கியுள்ளார்.
இது தொடர்பாக பட்நாவிஸ் கூறியதாவது:-
ராகுல் காந்தி ஒரு தொடர் பொய்யர் என நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அவர் இடைவிடாமல் தொடர்ந்து பொய்யை பரப்பி வருகிறார். மகாராஷ்டிராவில் உள்ள தலைவர்கள், ராகுல் காந்தி உண்மையைத்தான் பேசிக்கொண்டிருக்கிறார் என திடீரென உணர்வதை பார்ப்பதற்கு வேதனையாக இருக்கிறது. பொய்களால் கட்டிய கோட்டை இடிந்து விழுகிறது.
மக்களின் வாக்குகளை பெற, மக்களிடம் சென்று அவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்பதை அவர்கள் உணராவிட்டால், அவர்களின் பொய்கள் தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொள்வதற்காக மட்டுமே.
இவ்வாறு பட்நாவிஸ் தெரிவித்தார்.
- தேஜஸ்வி பிரதமர் மோடியின் பீகார் பயணத்தை கடுமையாக விமர்சனம் செய்தார்.
- பிரதமர்மீது அவதூறு பரப்பியதாக தேஜஸ்வி மீது மகாராஷ்டிராவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மும்பை:
பீகார் மாநிலத்தில் முதல் மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
நேற்று முன்தினம் பீகார் சென்ற பிரதமர் மோடி சுகாதாரம், மின்சாரம் உள்பட பல்வேறு துறைகளில் ரூ.13,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இதற்கிடையே, பிரதமரின் பீகார் பயணம் குறித்து மாநில முன்னாள் துணை முதல் மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மகனுமான தேஜஸ்வி யாதவ் சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். போலி வாக்குறுதிகளைத் தந்து, ஓட்டு திருட்டில் ஈடுபடுவதாக பிரதமர் மீது அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இதுதொடர்பாக, மகாராஷ்டிராவின் பா.ஜ.க. எம்.எல்.ஏ. மிலிந்த் ராம்ஜி நரோடே கட்ச்ரோலி போலீசில் புகார் அளித்தார்.
இந்நிலையில், பிரதமர் மீது அவதூறு கருத்து தெரிவித்த தேஜஸ்வி மீது பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதுகுறித்து பேசிய தேஜஸ்வி, வழக்குக்கு பயப்படுபவர்கள் அல்ல நாங்கள். உண்மையை தொடர்ந்து உரக்கச் சொல்வோம் என தெரிவித்தார்.
- சுனில் கவாஸ்கர் 10,000 டெஸ்ட் ரன்களை எடுத்த முதல் வீரர்.
- அதிக டெஸ்ட் சதங்கள் (34) அடித்த வீரர் போன்ற பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.
மும்பை:
வான்கடே மைதானத்தில் மும்பை கிரிக்கெட்டிற்கு பெருமை சேர்த்த ஜாம்வான்களை கவுரவிக்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும், அது ஆகஸ்ட் மாதம் திறக்கப்படும் எனவும் மும்பை கிரிக்கெட் சங்கம் தெரிவித்திருந்தது. இதற்கு ஷரத்பவார் அருங்காட்சியகம் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வான்கடே மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள சரத்பவார் அருங்காட்சியகம் நேற்று திறந்துவைக்கப்பட்டது. இதன்
நுழைவாயிலில் இந்திய பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கரின் ஆளுயர சிலையை சரத்பவார் மற்றும் கவாஸ்கர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சுனில் கவாஸ்கர் 1971 முதல் 1987-ம் ஆண்டு வரை இந்தியா மற்றும் மும்பை அணிகளுக்காக விளையாடியவர்.
10,000 டெஸ்ட் ரன்களை எடுத்த முதல் வீரர், அதிக டெஸ்ட் சதங்கள் (34) அடித்த வீரர் போன்ற பல்வேறு சாதனைகளை அவர் படைத்துள்ளார். தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக உள்ளார்.
ஏற்கனவே வான்கடே மைதானத்தில் சச்சின் டெண்டுல்கருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஏசி பெட்டிகளின் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் போது துப்புரவு தொழிலாளர்கள் உடலைக் கண்டுபிடித்தனர்.
- இறந்த சிறுவனின் தாய் புகார் அளித்திருப்பது தெரியவந்தது.
மகாராஷ்டிராவின் மும்பையில் ரெயில் குப்பைத் தொட்டியில் ஐந்து வயது சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று, உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் இருந்து குர்லாவில் உள்ள லோக்மான்ய திலக் ரெயில் முனையத்திற்கு வந்து சேர்ந்த குஷிநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஏசி பெட்டிகளின் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் போது துப்புரவு தொழிலாளர்கள் உடலைக் கண்டுபிடித்தனர்.
அவர்கள் தெரிவித்த தகவலின்பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.
காவல்துறையினருக்குக் கிடைத்த காணாமல் போனோர் புகார்களை ஆய்வு செய்தபோது, இறந்த சிறுவனின் தாய் புகார் அளித்திருப்பது தெரியவந்தது.
குஜராத்தின் சூரத்தைச் சேர்ந்த தனது உறவினர் விகாஸ் ஷா வெள்ளிக்கிழமை இரவு தனது மகனைக் கடத்திச் சென்றதாகக் தாய் புகார் அளித்திருக்கிறார். இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
- 17,000 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கு தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானியிடம் விசாரணை நடைபெற்றது.
- மும்பையில் உள்ள வீட்டில் இன்று காலை முதல் 8 சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை.
தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் 17,000 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கு தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானியிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மும்பையில் உள்ள வீட்டில் இன்று காலை முதல் 8 சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், அம்பானியும் அவரது குடும்பத்தினர் அனைவரும் உள்ளனர்.
- விநாயகர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்க, வெள்ளி நகைகள் மட்டும் ரூ.67.03 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
- ஜி.எஸ்.பி. பந்தலில் 27-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை விநாயகர் சதுர்த்தி விழா நடக்கிறது.
மும்பை:
மும்பையில் வருகிற 27-ந் தேதி முதல் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் களை கட்ட உள்ளது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். பொது இடங்களில் பந்தல் அமைத்து வழிபடும் பிரமாண்ட விநாயகர் சிலைகள் சிற்ப கூடங்களில் இருந்து கொண்டு வரும் பணி தொடங்கி உள்ளது. இந்தநிலையில் பிரசித்தி பெற்ற கிங்சர்க்கிள் ஜி.எஸ்.பி. பந்தல் விநாயகருக்கு ரூ.474 கோடியே 46 லட்சத்துக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் விநாயகர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்க, வெள்ளி நகைகள் மட்டும் ரூ.67.03 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. பந்தலில் வைக்கப்படும் பொருட்கள் ரூ.2 கோடிக்கும், அங்கு வழிபாடு செய்ய வரும் பக்தர்களுக்கு ரூ.30 கோடிக்கும், பந்தல் பணியாளர்களுக்கு ரூ.375 கோடிக்கும், ரூ.43 லட்சத்துக்கு தீ விபத்து காப்பீடும் செய்யப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.பி. பந்தல் விநாயகர் மும்பையில் உள்ள பணக்கார விநாயகர் சிலைகளில் ஒன்றாகும். இந்த சிலை விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது 69 கிலோ தங்கம், 336 கிலோ வெள்ளி ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். ஜி.எஸ்.பி. பந்தலில் 27-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை விநாயகர் சதுர்த்தி விழா நடக்கிறது.
- நாய்களை தூக்கிச் சென்று சாப்பிடலாம் என சிறுத்தை தாக்கியது.
- ஆனால் தெருநாய் சிறுத்தையை படுகாயமாக்கியது.
டெல்லி தலைநகர் பகுதியில் தெருநாய்கள் அடிக்கடி பொதுமக்களை தாக்கி வந்த நிலையில், வெறிநாய் கடித்து சிலர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டது. இதனால் நாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகத்தில் அடைத்து பராமரிக்க உச்சநீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டது. பின்னர், கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்த இன்று உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் மட்டுமல்ல இந்தியாவின் பெரும்பாலான இடத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்த வண்ணம் உள்ளது. தனியாக செல்லுபவர்களை கடித்து குதறும் காட்சிகள் அடிக்கடி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில் சிறுத்தைகள், புலிகள் வீட்டில் உள்ள நாய்களை அடித்து தூக்கிச் செல்லும் காட்சிகளையும் பார்த்திருக்கிறோம்.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு சிறுத்தையையே தெருநாய் கடித்து சுமார் 300 மீ. தூரத்திற்கு இழுத்துச் சென்ற பதைபதைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாஷிக் மாவட்டத்தில் உள்ள நிபாத் தாலுக்காவிற்கு உட்பட்ட கங்குர்டே வஸ்தி அருகே, சில நாய்கள் உலாவிக்கொண்டிருந்தன. அப்போது திடீரென அந்த பகுதியில் புகுந்த சிறுத்தை, நாய்களை துரத்தியது. இதில் ஒரு நாய், சிறுத்தையின் வாய் பகுதியை கவ்விக்கொண்டது. இதனால் சிறுத்தையால் ஒன்னும் செய்ய முடியவில்லை. தன்னை மிஞ்சிய எடை கொண்ட சிறுத்தையை 300 மீ தூரத்திற்கு இழுத்துச் சென்றது. பின்னர் படுகாயம் அடைந்த சிறுத்தை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
அதிக எடை மற்றும் மின்னல் வேகத்தில் பாயும் சிறுத்தையையே கடித்து குதறுகிறது என்றால், அப்பாவி மக்கள் தனியாக கிடைத்தால் என்னவாகும்? என வீடியோவை பார்க்கம்போது பதைபதைக்க வைக்ககிறது.
- கிராஸ் வோட்டிங் விழும் என நீங்கள் (என்டிஏ) அஞ்சுகிறீர்களா?.
- ஆந்திரா, தெலுங்கானா எம்.பி.க்கள் இடையே குழப்பம் நிலவுகிறது.
துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி நடைபெறுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகள் சார்பில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவரும், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியுமான சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார்.
ஆந்திர மாநில எம்.பி.க்கள், அம்மாநிலத்தைச் சேர்ந்த சுதர்சன் ரெட்டிக்கு சாதகமாக வாக்களிப்பார்களா? அல்லது என்.டி.ஏ. கூட்டணி வேட்பாளரான தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாக்களிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு கட்சி சி.பி. ராதாகிருஷ்ணனுக்குதான் ஆதரவு எனத் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா எம்.பி. சுதர்சன் ரெட்டியை ஆதரிக்கக் கூடும் என தேசிய ஜனநாயக கூட்டணி பயப்படுவதாக சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சஞ்சய் ராவத் கூறியதாவது:-
பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா, காங்கிரஸ் தலைமையிலான UPA வேட்பாளர் பிரதிபா பாட்டீலை 2007ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது ஆதரித்தது. ஏனென்றால், அவர் மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர். ஆந்திரா மற்றும் தெலுங்கானா எம்.பி.க்கள் எதிர்க்கட்சி வேட்பாளரான சுதர்சன் ரெட்டியை ஆதரிக்கக்கூடும் என என்டிஏ (தேசிய ஜனநாயக கூட்டணி) பயப்படுகிறது.
கிராஸ் வோட்டிங் விழும் என நீங்கள் (என்டிஏ) அஞ்சுகிறீர்களா?. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான டூப்ளிக்கேட் சிவசேனா மூலம் கிராஸ் வோட்டிங் விழும். பேப்பரில் என்டிஏ கூட்டணி மெஜாரிட்டியாக உள்ளது. எதிர்க்கட்சி வேட்பாளர் ஆந்திராவில் இருந்து வந்துள்ளார். ஆந்திரா, தெலுங்கானா எம்.பி.க்கள் இடையே குழப்பம் நிலவுகிறது. ராகுல் காந்தி நாட்டிலும், பீகாரிலும் மற்றும் பல இடங்களிலும் உருவாக்கிய சூழ்நிலை காரணமாக, கிராஸ் வோட்டிங் விழ வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
- என்.டி.ஏ. வேட்பாளர் எங்களுடைய சித்தாந்தத்துடன் ஒத்துப்போகவில்லை.
- அவர் ஜார்க்கண்ட் கவர்னராக இருந்தபோது, முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
துணை ஜனாதிபதி தேர்தலில் என்.டி.ஏ. வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என மகாராஷ்டிரா மாநில முதல்வர் பட்நாவிஸ் கேட்டுக்கொண்ட நிலையில், தனது கோரிக்கையை ஏற்க முடியாத இயலாமையை (வாக்களிக்க முடியாது) வெளிப்படுத்தியதாக தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சரத் பவார் கூறியதாவது:-
எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். எதிர்க்கட்சிகளுக்கு என்டிஏ-வை விட குறைவான எம்.பி.க்கள் மட்டுமே இருந்தபோதிலும், அதனால் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை.
எதிர்க்கட்சிகளின் அனைத்து வாக்குகளும் சுதர்சன் ரெட்டிக்கு செல்லும். அதன்மூலம் பலம் தெரியவரும். நாங்கள் எந்தவொரு ஆச்சர்யத்தையும் எதிர்பார்க்கவில்லை.
என்.டி.ஏ. வேட்பாளர் எங்களுடைய சித்தாந்தத்துடன் ஒத்துப்போகவில்லை. அவர் ஜார்க்கண்ட் கவர்னராக இருந்தபோது, முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அவர் கவர்னரை சந்தித்தபோது கைது செய்யப்பட்டார். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்கு இது தெளிவான உதாரணம். அத்தகைய வேட்பாளருக்கு ஆதரவை எதிர்பார்ப்பது பொருத்தமானது அல்ல. எனவே, முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்க முடியாத எனது இயலாமையை நான் வெளிப்படுத்தினேன்.
இவ்வாறு சரத் பவார் தெரிவித்தார்.
- மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
- நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது.
இந்நிலையில் மும்பையில் வெள்ளம் சூழ்ந்த சாலையில் 'ஸ்பைடர் மேன்' உடையணிந்த ஒரு நபர் வைப்பரைக் கொண்டு தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் காட்சி, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
'இன்னும் நிறைய தண்ணீரை அகற்ற வேண்டும்' என்ற நகைச்சுவையான தலைப்புடன் பகிரப்பட்ட இந்த வீடியோ, கிட்டத்தட்ட 2 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
இந்த வீடியோவுக்கு மும்பைவாசிகள், நகைச்சுவையாகவும், மும்பையின் உள்கட்டமைப்பை அரசு மேம்படுத்தாததால் ஏற்படும் இன்னல்கள் குறித்தும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.






