என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sanjay Malhotra"

    ஜனநாயகன் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

    விஜய் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஜன நாயகன். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார்.

    அரசியலால் விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான "தளபதி கச்சேரி" வெளியாகி அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக புது அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு.

    படத்தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்ஷன்ஸ் இது சார்ந்த ஒரு வீடியோ பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

    அதில் மலேசியாவின் ட்வின் டவர்ஸ் இடம்பெற்றுள்ளது. இதனால் படத்தின் இசை வெளியீட்டு விழா அங்கு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில், ஜனநாயகனின் இசை வெளியீட்டு விழா குறித்து முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    அதன்படி, விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 27ம் தேதி மலேசியாவில் நடைபெறவுள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.

    • சஞ்சய் மல்ஹோத்ரா, அவர்படித்த ஐஐடி கான்பூருக்கு விஜயம் செய்தபோதும் இதே கேள்வி எழுப்பட்டது.
    • ரிசர்வ் வங்கியின் 26வது ஆளுநராக பொறுப்பேற்பதற்கு முன்பு, மத்திய நிதி அமைச்சகத்தில் வருவாய் செயலாளராக பணியாற்றினார்.

    டெல்லி பொருளாதாரப் பள்ளியில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்வில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோதரா மாணவர்களுடன்  உரையாடினார்.

    அப்போது ரிசர்வ் வங்கி ஆளுநராக ஆக சில டிப்ஸ்களை சொல்லுங்கள் என்று ஒரு மாணவரின் கேள்விக்கு பதிலளித்த சஞ்சய் மல்ஹோத்ரா, ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் வார்த்தைகளை நினைவு கூர்ந்து பேசினார்.

    அதாவது, "எதிர்காலத்தை நாம் கணிக்க முடியாது. உங்கள் கர்மாவைச் செய்யுங்கள். உங்கள் வேலையை ஆர்வத்துடனும் கடின உழைப்புடனும் செய்யுங்கள். நீங்கள் திரும்பிப் பார்க்கும்போதுதான் எப்படி முன்னேறுவது என்பது உங்களுக்குப் புரியும்" என்று சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.

    முன்னதாக சஞ்சய் மல்ஹோத்ரா அவர் படித்த ஐஐடி கான்பூருக்கு விஜயம் செய்தபோதும் அங்கு ஒரு மாணவர் இதே கேள்வியை எழுப்பியபோதும் சஞ்சய் மல்ஹோத்ரா இதே பதிலை அளித்தார்.

    சஞ்சய் மல்ஹோத்ரா 1990 பேட்ச் ராஜஸ்தான் கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். ஐஐடி கான்பூரில் பொறியியல் பட்டமும், அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கையில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

    டிசம்பர் 11, 2024 அன்று ரிசர்வ் வங்கியின் 26வது ஆளுநராக பொறுப்பேற்பதற்கு முன்பு, மத்திய நிதி அமைச்சகத்தில் வருவாய் செயலாளராக சஞ்சய் மல்ஹோத்ரா பணியாற்றினார்.  

    • ரிசர்வ் வங்கியும் பொருளாதாரத்திற்குத் தேவையான ஆதரவை அளிக்கும்.
    • அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுகளைத் தரும் என நம்புகிறோம்.

    ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதற்கு தண்டனையாக இந்தியா மீது அமெரிக்கா 25 சதவீதம் வரி விதித்தது. ஏற்கனவே விதித்த 25 வரியுடன் சேர்ந்து தற்போது வரிச்சுமை 50 சதவீதம் ஆகி உள்ளது. இந்த கூடுதல் வரிவிதிப்பு நாளை முதல் அமலுக்கு வர உள்ளது.

    இந்நிலையில் இதன் விளைவுகள் குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா விளக்கம் அளித்துள்ளார்.

    நேற்று, மும்பையில் நடைபெற்ற வங்கிகள் மாநாட்டில் பேசிய அவர், "இந்த வரிவிதிப்பால், ரத்தினக் கற்கள், நகைகள், ஜவுளி, ஆடைகள் மற்றும் இறால் ஏற்றுமதி போன்ற துறைகள் கடுமையாகப் பாதிக்கப்படலாம்.

    இந்த பாதிப்புகளை எதிர்கொள்ள அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரிசர்வ் வங்கியும் பொருளாதாரத்திற்குத் தேவையான ஆதரவை அளிக்கும்.

    ஏற்கெனவே, பொருளாதாரம் புழங்குவதற்கு வசதியாக ரெப்போ வட்டி விகிதத்தை 100 புள்ளிகள் குறைத்துள்ளோம்.

    அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுகளைத் தரும் என்றும் இந்த வரிவிதிப்பால் இந்தியாவின் வர்த்தக உறவுகள் பாதிக்கப்படாது நாங்கள் நம்புகிறோம்.

    ஆகஸ்ட் 15, 2025 நிலவரப்படி இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு 695 பில்லியன் டாலர் ஆக உள்ளது. இது சுமார் 11 மாத இறக்குமதிக்கு போதுமானது.

    இந்தியப் பொருளாதாரம் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் வலுவான அடித்தளத்தைக் கொண்டுள்ளது" என்று தெரிவித்தார்.

    • UPI-க்கும் செலவுகள் உள்ளன, யாராவது ஒருவர் அதனை ஏற்கத்தான் வேண்டும்
    • இந்த மானிய மாதிரி நீண்டகாலம் தொடர முடியாது

    இந்தியாவில் கோடிக்கணக்கானோர் UPI பணபரிவர்தனைகளை தினந்தோறும் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் UPI ரிவர்தனைகள் குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

    நேற்று சென்னையில் நடந்த பணவியல் கொள்கைக் குழு (MPC) கூட்டத்திற்குப் பிந்தைய பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர்,"UPI பரிவர்த்தனை எப்போதும் இலவசமாகவே இருக்கும் என நான் ஒருபோதும் கூறவில்லை. UPI-க்கும் செலவுகள் உள்ளன, யாராவது ஒருவர் அதனை ஏற்கத்தான் வேண்டும்" என்று தெரிவித்தார்.

    தற்போது அரசு மற்றும் வங்கிகள் மானியமளித்து UPI யை இயக்கி வருவதாகவும், இந்த மாதிரி நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்குமா என்ற கேள்வி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    முன்னதாக ஜூலை 2025-ல் நடந்த பைனான்சியல் எக்ஸ்பிரஸ் BFSI உச்சி மாநாட்டில், "UPI யை இயக்குவதற்கு அரசு, வங்கிகள், அல்லது பயனர்கள் செலவை ஏற்க வேண்டும். இந்த மானிய மாதிரி நீண்டகாலம் தொடர முடியாது" என்று சஞ்சய் மல்கோத்ரா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ரிசர்வ் வங்கியின் மூத்த ஊழியர்கள் வரவேற்றனர்.
    • இவரது பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.

    ரிசர்வ் வங்கியின் 26-வது ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா பதவியேற்றுக்கொண்டார். இன்று (டிசம்பர் 11) காலை மத்திய தலைமையகத்திற்கு வந்த சஞ்சய் மல்ஹோத்ராவை ரிசர்வ் வங்கியின் மூத்த ஊழியர்கள் வரவேற்றனர்.

    சஞ்சய் மல்ஹோத்ரா பொறுப்பேற்ற போது துணை நிலை ஆளுநர்கள் சுவாமிநாதன், ராஜேஸ்வர ராவ், சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ஐஏஎஸ் அதிகாரியான மல்ஹோத்ரா ரிசர்வ் வங்கியின் தலைமைப் பொறுப்பில் மிக முக்கியமான கட்டத்தில் பொறுப்பேற்று இருக்கிறார். இவரது பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.

    முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த சக்திகாந்த தாஸ் பதவிக்காலம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டார்.

    ×