என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஆபத்தான நிலையில் வினோத் காம்ப்ளி: பிரார்த்தனை செய்யுங்கள் என சகோதரர் உருக்கம்
- வினோத் காம்ப்ளி உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.
- உடல்நிலை சீராகி வந்தாலும் அவருக்கு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்படுகிறது.
மும்பை:
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான வினோத் காம்ப்ளி (53), உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.
சிறுநீர் தொற்று காரணமாக டிசம்பர் 2024-ல் தானே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின், அவர் வீட்டிற்குத் திரும்பியிருந்தாலும், அவரது குணமடைதல் மெதுவாகவும் கடினமாகவும் உள்ளது. உடல்நிலை சீராகி வந்தாலும் அவருக்கு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அவரது இளைய சகோதரர் வீரேந்திர காம்ப்ளி தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:
வினோத் காம்ப்ளி கடுமையான போராட்டத்தை எதிர்கொண்டு வருகிறார். ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அவருக்காக பிரார்த்தனை செய்யவேண்டும்.
அவருக்கு பேசுவதில் சிரமம் உள்ளது. அவர் குணமடைய நேரம் எடுக்கும். ஆனால் அவர் ஒரு சாம்பியன், அவர் திரும்பி வருவார். அவர் நடக்கவும் ஓடவும் தொடங்குவார். அவர்மீது எனக்கு நிறைய நம்பிக்கை உள்ளது. நீங்கள் அவரை மீண்டும் மைதானத்தில் பார்க்க முடியும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.
வினோத் காம்ப்ளி இந்தியாவுக்காக 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.






