என் மலர்tooltip icon

    கேரளா

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெங்கு பாதிப்புக்கு 6 பேர் பலியாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
    • காய்ச்சல் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில சுகாதாரத்துறை எடுத்து வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

    இந்நிலையில் கேரளாவில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் 1,373 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் மாநிலத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில் 294பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

    அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் டெங்கு பாதிப்புக்கு 6 பேர் பலியாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் காய்ச்சல் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில சுகாதாரத்துறை எடுத்து வருகிறது.

    மாநிலத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் கொசுக்களால் பரவும் டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா, ஜிகா உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்பு இருப்பதால், கொசு உற்பத்தியை தடுக்க முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    • வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்த அன்று, தனது தொகுதியில் ரோடு-ஷோ சென்று ஆதரவு திரட்டினார்.
    • பிரியங்கா காந்தி பிரசாரம் செய்யும் போது, ராகுல் காந்தியும் அவருடன் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற 26-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 20 தொகுதிகளிலும் மொத்தம் 194 பேர் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ், பாரதிய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.

    பெரும்பாலான தொகுதிகளில் மும்முனை போட்டி நிலவுகிறது. பிரசாரம் நிறைவடைய இன்னும் 8 நாட்களே இருப்பதால், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் காங்கிரஸ், பாரதிய ஜனதா, கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டி போட்டு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் கம்யூனிஸ்டு கட்சி இருந்துவரும் நிலையில், கேரளாவில் இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிடுகின்றன. இதனால் அங்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தலில் எதிரெதிராக இருந்து மல்லுக்கட்டும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

    கேரளாவில் வயநாடு, திருவனந்தபுரம், அட்டிங்கல், பத்தினம்திட்டா, மாவேலிக்கரை, ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், சாலக்குடி, ஆலத்தூர், பாலக்காடு, கோழிக்கோடு, வடகரா, கண்ணூர், காசர்கோடு ஆகிய 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    அந்த தொகுதிகள் மட்டுமின்றி, அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தொகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்த அன்று, தனது தொகுதியில் ரோடு-ஷோ சென்று ஆதரவு திரட்டினார். பின்பு அவர் தேர்தல் பிரசாரத்தை நேற்று மீண்டும் தொடங்கினார்.

    அவர் நேற்று வயநாட்டில் ரோடு-ஷோ சென்றது மட்டுமின்றி, கோழிக்கோடு கடற்கரையில் நடந்த பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டார். ராகுல் காந்தி கேரளாவில் தொடர்ந்து ஒரு வாரம் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

    அவர் வயநாடு தொகுதியில் இன்று 2-வது நாளாக பிரசாரத்தில் ஈடுபட்டார். மற்ற தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அடுத்தடுத்த நாட்களில் ஆதரவு திரட்டுகிறார்.

    இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக பிரியங்கா காந்தி வருகிற 20-ந்தேதி கேரளா வருகிறார். அவர் திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, சாலக்குடி ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்து காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    பிரியங்கா காந்தி பிரசாரம் செய்யும் போது, ராகுல் காந்தியும் அவருடன் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ராகுல் காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பிரியங்கா காந்தியும் கேரளா வர உள்ளதால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • எர்ணாகுளம் ரெயில் நிலையத்தை கடந்து சென்ற பின்னர், கார்த்திக்கை பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது.
    • யணியை கடித்தது பாம்பா அல்லது எலியா என்ற சந்தேகம் உள்ளது என்று ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.

    பெரும்பாவூர்:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் இருந்து நேற்று காலை 9.30 மணியளவில் விரைவு ரெயில் (ரெயில் எண்.16329) மதுரை நோக்கி புறப்பட்டது. 6-வது பெட்டியில் மதுரை சின்ன கோவிலாங்குளம் பகுதியை சேர்ந்த கார்த்திக்(வயது 23) என்பவர் பயணம் செய்தார். தொடர்ந்து எர்ணாகுளம் ரெயில் நிலையத்தை கடந்து சென்ற பின்னர், கார்த்திக்கை பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அவர் வலி தாங்க முடியாமல் துடித்தார். பின்னர் கோட்டயம் மாவட்டம் ஏட்டுமானூர் ரெயில் நிலையத்துக்கு ரெயில் வந்தது. உடனே கார்த்திக் மீட்கப்பட்டு அங்கு தயாராக இருந்த ஆம்புலன்சு மூலம் கோட்டயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பயணியை கடித்தது பாம்பா அல்லது எலியா என்ற சந்தேகம் உள்ளது என்று ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.

    இதையடுத்து அந்த ரெயில் பெட்டியில் இருந்த அனைத்து பயணிகளும் கீழே இறக்கப்பட்டு, ரெயில்வே ஊழியர்கள், போலீசார் சோதனை நடத்தினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

    • தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக பிரதமர் மோடி கேரளாவுக்கு மீண்டும் வந்திருக்கிறார்.
    • பிரதமர் வருகையை முன்னிட்டு கேரளாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு வருகிற 26-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கேரள மாநிலத்தை பொறுத்தவரை தற்போது 19 மக்களவை தொகுதிகள் காங்கிரஸ் கூட்டணியின் வசம் இருக்கிறது. அதேபோன்று தற்போதைய தேர்தலிலும் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கடசி செயல்பட்டு வருகிறது.

    அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியும் பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றி கேரளாவில் கால் பதிந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் தேர்தல் பணியாற்றி வருகிறது. இதனால் பாரதிய ஜனதா சார்பில் பிரபலங்கள் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டு இருக்கின்றனர்.

    மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே பிரதமர் மோடி கேரளாவுக்கு வந்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் கடந்த மார்ச் மாதம் 15-ந்தேதி பத்தினம்திட்டாவில் நடந்த பொதுக்கூட்டம் மற்றும் 19-ந்தேதி பாலக்காட்டில் நடந்த ரோடு-ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு திரட்டினார்.

    இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக பிரதமர் மோடி கேரளாவுக்கு மீண்டும் வந்திருக்கிறார். அவர் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் திருச்சூர் தொகுதி வேட்பாளரான நடிகர் சுரேஷ்கோபி, ஆலத்தூர் தொகுதி வேட்பாளரான சரசு, திருவனந்தபுரம் தொகுதி வேட்பாளரான மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர், அட்டிக்கல் தொகுதி வேட்பாளரான மத்திய மந்திரி முரளீதரன் ஆகியோரை ஆதரித்து இன்று பிரசாரம் செய்தார்.

    இதற்காக பிரதமர் மோடி நேற்று இரவு மைசூருவில் இருந்து விமானம் மூலம் கொச்சி வந்தடைந்தார். பின்பு அங்கிருந்து எர்ணாகுளம் சென்று, அங்குள்ள விருந்தினர் மாளிகையில் இரவில் தங்கினார்.

    பிரதமர் மோடி இன்று காலை எர்ணாகுளத்தில் இருந்து திருச்சூர் மாவட்டம் ஆலத்தூர் தொகுதியில் உள்ள குன்னமங்களத்துக்கு சென்றார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பாரதிய ஜனதா வேட்பாளர்கள் சுரேஷ்கோபி, சரசு ஆகியோரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:

    உங்கள் அனைவரின் ஆதரவையும் அன்பையும் பார்த்து, கேரளாவில் இந்த புத்தாண்டு ஒரு புதிய தொடக்கத்தை கொண்டு வந்துள்ளது என்று என்னால் நம்பிக்கையுடன் கூற முடியும். இந்த புத்தாண்டு கேரளாவின் வளர்ச்சி ஆண்டாக இருக்கும். இந்த புதிய ஆண்டு புதிய அரசியலின் தொடக்க ஆண்டாக இருக்கும். அதனால்தான் இன்று கேரளாவும் மீண்டும் மோடி அரசு என்று கூறுகிறது என்றார்.

    பிரதமர் வருகையை முன்னிட்டு கேரளாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பிரதமர் பயணிக்கும் சாலைகள், அவர் பங்கேற்ற கூட்டங்கள் நடந்த பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    பிரதமர் மோடி கடந்த ஜனவரி மாதம் 2 முறை, பிப்ரவரியில் ஒரு முறை, மார்ச் மாதம் 2 முறை என 5 முறை வந்திருந்த நிலையில், தற்போது 6-வது முறையாக கேரளாவுக்கு வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சசிதரூர் மீது தேர்தல் ஆணையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் புகார் செய்தனர்.
    • எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை மீண்டும் செய்யக்கூடாது என்று அவருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் தற்போதைய எம்.பியான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசிதரூர் மீண்டும் போட்டியிடுகிறார். அதே தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர், இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் பன்னியன் ரவீந்திரன் உள்பட 12 பேர் போட்டியிடுகின்றனர்.

    இந்த தொகுதியில் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கிடையே கடும்போட்டி நிலவுகிறது. அந்த கட்சிகளின் வேட்பாளர்கள் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் சசிதரூர், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில், ஓட்டு வாங்க பொதுமக்கள் மற்றும் பாதிரியார் உள்ளிட்ட கிறிஸ்வத தலைவர்களுக்கு பாரதிய ஜனதா வேட்பாளரான மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் பணம் கொடுத்ததாக குற்றம் சாட்டினார்.

    சசிதரூரின் இந்த கருத்துக்கு தன்மீது ஆதார மற்ற குற்றச்சாட்டுகளை கூறியிருப்பதாக மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்திருந்தார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சசிதரூர் மீது தேர்தல் ஆணையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் புகார் செய்தனர்.

    இந்நிலையில் மத்திய மந்திரி மீது ஓட்டுக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டு விவகாரத்தில் சசிதரூருக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை மீண்டும் செய்யக்கூடாது என்று அவருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    • சட்டமன்றத்தில் அரசு மெஜாரிட்டியை இழந்தால் அந்த ஆட்சி கவிழும்.
    • அதற்கு ஒரே தீர்வு மறு தேர்தல்தான்.

    மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பா.ஜனதா நேற்று வெளியிட்டது அதில் "ஒரே நாடு ஒரே தேர்தல்" என்ற வாக்குறுதியை கொடுத்துள்ளது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் "ஒரே நாடு ஒரே தேர்தல்" முறை நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை எம்.பி.-யுமான சசி தரூர் கூறியதாவது-

    யுசிசி (பொது சிவில் சட்டம்) சட்டத்தில் என்ன இருக்கிறது? அதன் வரைவு வராமல் அது குறித்து ஏதும் கூற முடியாது. மற்ற சமூகங்கள் வரைவு சட்டத்தை எதிர்க்கவில்லை என்றால் ... நமது சமூகத்தை பிளவுபடுத்தும் எதையும் நாங்கள் விரும்பவில்லை, அதை ஒருங்கிணைக்க வேண்டும்... என்பது நமக்கு இருக்க வேண்டும்.

    "ஒரே நாடு ஒரே தேர்தல்" என்பதில் ஒரு பிரச்சனை இருக்கிறது. சட்டமன்றத்தில் அரசு மெஜாரிட்டியை இழந்தால் அந்த ஆட்சி கவிழும். அதற்கு ஒரே தீர்வு மறு தேர்தல்தான். ஆனால் "ஒரே நாடு ஒரே தேர்தல்" கருத்தின்படி ஐந்து வருடத்திற்கு ஒருமுறைதான் தேர்தல் என நிர்ணயத்து விட்டால், மெஜாரிட்டியை இழந்த அரசு வீழ்ந்த பிறகு, ஆறு மாதத்திற்கு பிறகு அவர்கள் குடியரசு ஆட்சியை அமல்படுத்துவார்களா?. இது ஜனநாயக விரோதம் இல்லையா?.

    இவ்வாறு சசி தரூர் தெரிவித்துள்ளார்.

    • முகநூலில் சமீபத்தில் வெளிவந்த இது போன்ற கருத்து பதிவு குறித்து பா.ஜனதா கட்சி நிர்வாகி ஒருவர், பாலோடு போலீசில் புகார் தெரிவித்தார்.
    • இந்த பதிவுகள் அரசியல் கட்சி ஆர்வலர்களிடையே பதட்டத்தை தூண்டுவதாக உள்ளது

    திருவனந்தபுரம்:

    பிரதமர் நரேந்திர மோடியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரப்பப்படுவதாக கேரள போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் முகநூலில் சமீபத்தில் வெளிவந்த இது போன்ற கருத்து பதிவு குறித்து பா.ஜனதா கட்சி நிர்வாகி ஒருவர், பாலோடு போலீசில் புகார் தெரிவித்தார்.

    அதில், கேரளாவை சேர்ந்த நபீல் நாசர் என்பவர் தான் இது போன்ற கருத்துக்களை பதிவிடுவதாகவும், கடந்த மாதம் (மார்ச்) 20-ந் தேதி முதல் ஆட்சேபணைக்கு ரிய பதிவுகளை சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டு வருகிறார் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பிரதமர் மோடியின் புகழை கெடுக்கும் நோக்கத்துடன் அவருக்கு எதிராக போலியான அறிக்கைகளை பதிவு செய்துள்ளதாகவும், இந்த பதிவுகள் அரசியல் கட்சி ஆர்வலர்களிடையே பதட்டத்தை தூண்டுவதாக உள்ளது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

    இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், ஐ.பி.சி.153, 171ஜி மற்றம் கேரள போலீஸ் சட்டத்தின் 120 (ஒ) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாரதிய ஜனதா மீதான காங்கிரசின் பயத்தால் கொடிகள் இல்லை என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு குற்றம் சாட்டியது.
    • சி.பி.எம். மற்றும் பா.ஜனதா கட்சிகள் எதிர்பாராத கூட்டணியை உருவாக்கி உள்ளன.

    திருவனந்தபுரம்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த 3-ந் தேதி மனு தாக்கல் செய்ய வந்த அவர், ரோடு-ஷோவிலும் பங்கேற்றார். அப்போது காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி கொடிகள் எங்கும் காணப்படவில்லை.

    இதனை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் விமர்சித்திருந்தார். பாரதிய ஜனதா மீதான காங்கிரசின் பயத்தால் கொடிகள் இல்லை என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு குற்றம் சாட்டியது. இந்த நிலையில் ராகுல்காந்தி வருகிற 15 மற்றும் 16-ந் தேதி வய நாட்டில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளதாகவும் இந்த நிகழ்ச்சியிலும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் கொடிகள் பயன்படுத்தபட மாட்டாது என்று மாநில காங்கிரஸ் அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், ஐக்கிய ஜனநாயக முன்னணியின் ஒருங்கிணைப்பாளருமான ஹாசன் கூறியதாவது:-

    வயநாட்டில் வருகிற 15 மற்றும் 16-ந் தேதிகளில் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இந்த பிரசாரத்தின் போது, காங்கிரஸ் அல்லது கூட்டணி கட்சிகளின் கொடிகளை காட்டுவதை தவிர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்சியின் சின்னங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும். கட்சியின் முடிவுக்கான காரணங்களை வெளியிட வேண்டிய அவசியமில்லை. அதே நேரம் மற்ற தொகுதிகளில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர்கள் விரும்பினால் கொடியை பயன்படுத்தலாம்.

    அடுத்த வாரம் முழுவதும் கண்ணூர், திருச்சூர், திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் ராகுல்காந்தி பிரசாரம் மற்றும் பொதுக்கூட்டங் களில் பங்கேற்க உள்ளார். சி.பி.எம். மற்றும் பா.ஜனதா கட்சிகள் எதிர்பாராத கூட்டணியை உருவாக்கி உள்ளன. தேர்தல் பிரசாரத்தை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து யாரிடம் இருந்தும் வழி காட்டுதல் தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இறப்புக்கு ஈடாக ரூ.34 கோடி பெற்றுக்கொள்ள சிறுவன் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.
    • இதனால் 'சேவ் அப்துல் ரஹீம்' என்ற செல்போன் செயலி நிறுவப்பட்டு, நிதி திரட்டப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள வாலிபரான அப்துல் ரஹீம் மாற்றுத்திறனாளி சிறுவனை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு சவுதி அரேபிய நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

    சிறுவனின் இறப்புக்கு ஈடாக 34 கோடி ரூபாயைப் பெற்றுக்கொள்ள சிறுவனின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். இதனால் 'சேவ் அப்துல் ரஹீம்' என்ற செல்போன் செயலியையும் நிறுவி கூட்டு நிதி திரட்டும் பணியில் அவரது நண்பர்கள் ஈடுபட்டனர்.

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானோர் நிதி அளித்தனர். கடந்த வாரம் நிர்ணயிக்கப்பட்ட ரூ.34 கோடியையும் தாண்டி அதிகமாகவே நிதி வந்தடைந்தது.


    இந்நிலையில், சவுதியில் சிக்கிய கேரள வாலிபரை மீட்க முக்கிய பங்காற்றியவர் பாபி செம்மனூர் என்பதும், இவர் தனது பங்காக ஒரு கோடி ரூபாய் கொடுத்ததுடன், குறைந்த கால அவகாசத்தை நீட்டிக்கும் வகையில் சவுதி அரசிடம் பேசியதும் விசாரணையில் தெரியவந்தது.

    பிரபல தொழிலதிபரான பாபி செம்மனூர் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை நிதி திரட்டும் பிரசாரத்தை நடத்துவதாக அறிவித்திருந்தார். அதன்பின், பல்வேறு தரப்பு மக்களும் உதவ முன்வந்தனர். திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் சாலையோரங்கள் போன்ற பொது இடங்களிலும் மக்கள் உதவி கோரப்பட்டது. இதனால் மொத்தம் ரூ.34 கோடியே 45 லட்சம் நிதி கிடைத்துள்ளது.

    செம்மனூர் நகைக்கடையின் நிறுவனரான பாபி செம்மனூர் விமானத்தில் பயணிக்க ஆசைப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு பயண ஏற்பாடு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சவுதி அரேபியாவில் கேரள வாலிபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
    • கேரளத்தைச் சேர்ந்த இந்தியரை மீட்க நிவாரண நிதி அளிப்பதற்காக ரூ.34 கோடி நிதி திரட்டப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அப்துல் ரஹீம். இவர் கடந்த 2006-ல் சவுதி அரேபியா சென்று, அங்கு ஒரு குடும்பத்தினரிடம் டிரைவராக பணிபுரிந்தார். அந்தக் குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சனையில் அப்துல் ரஹீம் முதலாளியின் மாற்றுத்திறனாளி மகனின் உடலில் பொருத்தப்பட்டிருந்த சுவாசக் கருவியை துண்டித்தார்.

    இதில் அந்த சிறுவன் உயிரிழந்தான். இதனால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

    இதற்கிடையே, சிறுவனின் இறப்புக்கு ஈடாக 34 கோடி ரூபாயைப் பெற்றுக் கொள்ள சிறுவனின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.

    இதையடுத்து, 'சேவ் அப்துல் ரஹீம்' என்ற செல்போன் செயலியையும் நிறுவி கூட்டு நிதி திரட்டும் பணியில் அவரது நண்பர்கள் ஈடுபட்டனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானோர் நிதி அளித்தனர்.

    இந்நிலையில், கடந்த வாரம் நிர்ணயிக்கப்பட்ட ரூ.34 கோடியையும் தாண்டி அதிகமாகவே நிதி வந்தடைந்தது.

    இதுதொடர்பாக அப்துல் ரஹீமின் தாயார் பாத்திமா கூறுகையில், 18 ஆண்டுகளுக்குப் பிறகு எனது மகன் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.

    இதுகுறித்து கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில், கேரளாவை குறிவைத்து இடைவிடாத வெறுப்பு பிரசாரங்களை எதிர்கொள்வதில் மலையாளிகளின் அடங்காத ஆவி பிரகாசிக்கிறது. கேரளாவின் பின்னடைவு மற்றும் இரக்கத்தை ஒன்றாக நிலைநிறுத்துகிறது.

    சவுதி அரேபியாவில் மரணதண்டனையை எதிர்நோக்கும் கேரளாவைச் சேர்ந்த அப்துல் ரஹீமின் கதை இந்த எதிர்ப்பைக் குறிக்கிறது. அவரது விடுதலைக்காக 34 கோடி ரூபாய் திரட்டப்பட்ட நிலையில் கேரளாவின் மக்கள் மற்றும் மதிப்புகள் மீதான அர்ப்பணிப்பு தெளிவாக உள்ளது, பிளவுபடுத்தும் பொய்களை உடைக்கிறது. இந்த மனிதாபிமானத்திற்காக கைகோர்த்த அனைவருக்கும் நன்றி. ஐக்கியம், இரக்கம் மற்றும் உண்மையின் உண்மையான கேரளக் கதையை நாங்கள் தொடர்ந்து பகிர்ந்து கொள்வோம் என பதிவிட்டுள்ளார்.

    • தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.
    • தோல்வி பயம் தான் மோடியை இது போன்ற தவறுகளில் குதிக்க வைக்கிறது.

    திருவனந்தபுரம்:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்திருக்கிறார். முதலமைச்சரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் அதற்கு அவர் அளித்திருக்கும் பதில் விவரம் வருமாறு:-

    கேள்வி: தமிழகம் யாருடன் இருக்கும்?

    பதில்: தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். ஒவ்வொரு நாளும் நான் பார்க்கும் மக்களின் முகங்களில் அந்த நம்பிக்கை தெரிகிறது. கடந்த 3 ஆண்டுகளில் மாநில அரசு செயல்படுத்திய திட்டங்கள் மக்களுக்கு தெரியும். எங்களுக்கு 2021-ல் இருந்ததை விட ஆதரவு அதிகரித்துள்ளது.

    இதற்கிடையே பிரதமர் மோடிக்கு எதிரான மக்களின் கோபம் பல மடங்கு அதிகரித்துள்ளது.மோடி ஒரு நொறுங்கிய கட்டுக்கதை. தமிழகத்தில் கடந்த 2 சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதா வெற்றி பெறவில்லை. தமிழ் மொழிக்கும், நாட்டுக்கும் துரோகம் செய்த பா.ஜ.க.வை வீழ்த்தவேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர்.

    கேள்வி: டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது பற்றி...

    பதில்: தோல்வி பயம் தான் மோடியை இது போன்ற தவறுகளில் குதிக்க வைக்கிறது. 370-400 இடங்களில் வெற்றி பெறு வேன் என்று கூறும் ஒருவர், எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்வது ஏன்? வட இந்திய மாநிலங்களில் காங்கிரஸ்-ஆம்ஆத்மி கூட்டணி வலுப்பெற்றுள்ளது.

    இந்த மாநிலங்களில் கெஜ்ரிவால் பிரசாரத்தை தொடங்கினால் எதிர்பார்த்த இடங்களை கூட வெல்ல முடியாது என்பது உறுதி. அவர் பிரசாரத்தில் ஈடுபடுவதை தடுக்கவும், அவரது நற்பெயரை கெடுக்கவும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பிறகு கெஜ்ரிவாலின் புகழ் பல மடங்கு அதிகரித்தது.

    கேள்வி: மோடியின் மாற்று யார்?

    பதில்: இனி மோடி தேவையில்லை என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர். இந்நிலையில் மோடியின் மாற்று யார் என்று மக்களின் வாக்குகள் மூலம் நிரூபிக்கப்படும். மக்களின் விரும்பப்படி மோடி ஆட்சியில் இருந்து அகற்றப்படுவார். ஒரு தகுதியான நபர் ராஜ்ஜியத்தை ஆளுவார்.

    கேள்வி: மோடி அரசின் 10 ஆண்டு கால ஆட்சி குறித்து உங்களின் கருத்து என்ன?

    பதில்: மோடி வாக்காளர்களுக்கு பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்தார். ஆனால் அந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. கறுப்பு பணத்தை மீட்டு அனைவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று வடமாநிலங்களில் பிரசாரம் செயதார். இந்த வாக்குறுதி பாரதிய ஜனதா பெரும்பான்மையை வெல்ல உதவியது. ஆட்சிக்கு வந்ததும் வங்கி கணக்கு தொடங்கச்சொல்லி அனைவரையும் ஏமாற்றினார்.

    இந்திய பொருளாதாரம் மட்டுமின்றி மாநிலங்களில அமைதியான சூழலும் அழிக்கப்பட்டது. மோடி வெற்றி பெறுவது நாட்டுக்கு மட்டுமல்ல. பாரதிய ஜனதாவுக்கும் நல்லதல்ல.

    கேள்வி: தமிழகத்தில் தி.மு.க.-அ.தி.மு.க.வுக்கு இடையே சண்டையா?

    பதில்: தமிழகத்தில் தி.மு.க. முன்னிலையில் உள்ளது. இரண்டாவது இடத்துக்கு போராடும் அ.தி.மு.க. மிகவும் பின்தங்கியுள்ளது. மற்ற கட்சிகள் கனவுலகில் உள்ளன. தி.மு.க.வை எதிர்ப்பது மட்டுமே அ.தி.மு.க.வின் கொள்கை.

    • கேரள தேர்தலில் இடது சாரி ஜனதாயக முன்னணி மற்றும் ஐக்கிய ஜனதாயக முன்னணி இடையே தான் போட்டி உள்ளது.
    • மக்களவை தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை. ஆனால் அரசியலில் தொடர்ந்து ஈடுபடவேண்டும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போதைய எம்.பி.யான சசி தரூர், பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் உள்பட 12 பேர் போட்டியிடுகின்றனர். அங்கு மும்முனைப்போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு இன்றும் 12 நாட்களே உள்ள நிலையில், வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பிரசாரத்தில ஈடுபட்டிருக்கின்றனர்.

    இந்நிலையில் மக்களவை தேர்தலில் இனி போட்டியிடமாட்டேன் என்று சசி தரூர் தெரிவித்துள்ளார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    கேரள தேர்தலில் இடது சாரி ஜனதாயக முன்னணி மற்றும் ஐக்கிய ஜனதாயக முன்னணி இடையே தான் போட்டி உள்ளது. வருகிற மக்களவை தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் நான் போட்டியிடுவதே இறுதியாகும். இனி மக்களவை தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை. ஆனால் அரசியலில் தொடர்ந்து ஈடுபடவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    ×