என் மலர்
இந்தியா
- 20 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கு.
- முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் குற்றவாளிகள் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
பவாரியா கொள்ளையர்களால் அதிமுக எம்எல்ஏ சுதர்சமன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பவாரியா கொள்ளையர்களால் முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் குற்றவாளிகள் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
மேலும், குற்றவாளிகள் மூவருக்கான தண்டனை விவரம் வரும் 24ம் தேதி அறிவிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கில் பவாரியா கொள்ளையர்களுக்கு தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 20 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொன்ற பவாரியா கொள்ளையர்கள் ஜெகதீஷ், ராகேஷ், அசோக்கிற்கு வாழ்நாள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் ஜெகதீஷ், அசோகிற்கு தலா 4 ஆயுள் தண்டனையும், குற்றவாளி ராகேஷிற்கு 5 ஆயுள் தண்டனையும் நீதிமன்றம் விதித்தது.
ஜெகதீஷ் மற்றும் அசோகிற்கு தலா ரூ.40,000, ராஷே்க்கு ரூ.50,000 அபராதம் விதித்து சென்னை முதன்னை நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
மேலும், மூன்று பேருக்கும் மூன்று பிரிவுகளின் கீழ் ஆயுள் தண்டனை விதித்து சென்னை முதன்மை அமர்வு நீதிபதி ஆப்ரஹாம் லிங்கன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
கடந்த 2005ம் ஆண்டில் கும்மிடப்பூண்டி அதிமுக எம்எல்ஏ சுதர்சனம் வீட்டில் நுழைந்து அவரைக் கொன்று கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு ஜனவரி மாதம் தானாகுளத்தில் வீட்டின் கதவை உடைத்து எம்எல்ஏ சுதர்சனத்தை பவாரியா கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
சுதர்சனத்தை கொன்று அவரது மனைவி, மகன்களை தாக்கி 62 சவரவன் தங்க நகைகளை பவாரியா கொள்ளையர்கள் திருடி சென்றனர். சுதர்சனத்தை கொன்ற பவாரியா கொலையாளிகளை சுட்டுப்பிடிக்க அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
பிடிபட்ட 9 பேரில் 3 பெண்கள் ஜாமினில் தலைமறைவான நிலையில் 2 பேர் சிறையில் உயிரிழந்தனர். இதில், மீதமுள்ள 4 பேரில் மூன்று பேரான ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதர்சனத்தை கொன்று கொள்ளையடிக்கப்பட்ட வழக்கின் பின்னணியை வைத்து உருவானதே தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
- விண்ணப்பங்களை கொடுக்காமலேயே தவறான தகவலை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்துள்ளனர்.
- விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் ஆளும் கட்சியினரிடம் தான் இருக்கிறதா இந்த கேள்வி எழுந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு எஸ்.ஐ.ஆர். விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏறக்குறைய 50 சதவீதம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வாக்குச்சாவடி தேர்தல் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், நிறைய வாக்காளர்கள் தங்களது விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ இன்று மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன் குமாரை சந்தித்து புகார் மனு அளித்தார்.
மதுரை மாநகர் பகுதியில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளில் இதுவரை 35 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை மட்டுமே வாக்காளர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. வீடு, வீடாக சென்று விண்ணப்ப படிவத்தை வழங்குவோம் என்று கூறினார்கள், மூன்று முறை வீட்டு கதவை தட்டுவோம் என்றார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு சரியான பயிற்சி இல்லை. இதன் காரணமாக வாக்காளர்களுக்குரிய விண்ணப்பபடிவங்கள் அவர்களை சென்று சேரவில்லை. மேலும், விண்ணப்ப படிவங்களை பெற்றவர்கள் குறைந்த அளவிலேயே, அதாவது 40 சதவீதத்திற்கு உள்ளேயே தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கியுள்ளனர். இந்த நிலையில் மேற்கு சட்டமன்ற தொகுதியில் அனைத்து வாக்காளர்களுக்கும் அவர்களுக்குரிய வாக்காளர் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட நபர்களுக்கு விண்ணப்பங்களை கொடுக்காமலேயே இப்படி தவறான தகவலை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்துள்ளனர். இதில் பெரிய மோசடி நடந்துள்ளதாக கருதுகிறோம். இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்தோம்.
ஆனால் கலெக்டர் தேர்தல் கமிஷன் வழங்கியுள்ள நாட்களுக்குள் அனைத்து பணிகளையும் முடித்து விடுவோம் அப்படி ஏதாவது விடுபட்டவர்கள் இருந்தால் அடுத்த மாதம் 4-ந்தேதிக்கு மேல் அதற்குரிய விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம் என்கிறார். அது எப்படி முடியும் அது முடிகிற காரியமா? எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.
ஆளும் கட்சியான தி.மு.க. இந்த வாக்காளர் விண்ணப்ப படிவத்தை அதிகளவில் பெற்றுள்ளனர். அவர்களுடைய தலைவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுடன் பேசி வருகிறார். அப்போது அந்த நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு உரிய விண்ணப்ப படிவங்களை கொடுத்து வருகிறோம் என்று கூறுகிறார். அப்படி என்றால் அந்த விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் ஆளும் கட்சியினரிடம் தான் இருக்கிறதா இந்த கேள்வி எழுந்துள்ளது.
எனவே தேர்தல் அதிகாரிகள் நேர்மையான முறையில் செயல்பட்டு அனைத்து வாக்காளர்களிடம் அவர்களுக்கு உரிய விண்ணப்ப படிவங்களை கொண்டு சேர்க்க வேண்டும். அப்போதுதான் உண்மையான வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற முடியும். இல்லாவிட்டால் அதில் ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இதனையும் மாவட்ட கலெக்டர் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
- ரெட்டிபாளையம் சாலை, காந்திபுரம், வஹாப் நகா், சப்தகிரி நகா், ராஜலிங்கம் நகா்,
தஞ்சாவூா்:
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மருத்துவக்கல்லூரி சாலை உதவி செயற்பொறியாளா் அண்ணாசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலையிலுள்ள துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
எனவே, மருத்துவக்கல்லூரி பகுதிகள், ஈஸ்வரி நகா், முனிசிபல் காலனி, ஆா்.ஆா். நகா், புதிய பேருந்து நிலையம், புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, திருவேங்கடம் நகா், கருப்ஸ் நகா், ஏ.வி.பி. அழகம்மாள் நகா், மன்னா் சரபோஜி கல்லூரி, மாதாகோட்டை, சோழன் நகா்,
தமிழ்ப் பல்கலைக்கழகம், வஸ்தாசாவடி, மானோஜிபட்டி, ரெட்டிபாளையம் சாலை, காந்திபுரம், வஹாப் நகா், சப்தகிரி நகா், ராஜலிங்கம் நகா், ஐஸ்வா்யா காா்டன், சுந்தரபாண்டியன் நகா், ஜெபமாலைபுரம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அறுவடைக்கு பின்னர் நெல்லை உடனே கொள்முதல் செய்திருந்தால் பிரச்சனை வந்திருக்காது.
- நானும் டெல்டாகாரான் என வீரவசனம் பேசிய முதல்வர், விவசாயிகளுக்கு விரோதமாக உள்ளார்.
சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
டிஜிபி நியமனம்
டிஜிபி ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்னரே அடுத்த டிஜிபி குறித்து முடிவு செய்யாதது ஏன்?
நிரந்தர டிஜிபியை நியமிக்க முடியாமல் திமுக அரசு தடுமாறுவது ஏன்.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகே டிஜிபி தேர்வு பட்டியலை தமிழக அரசு தயாரித்தது.
பட்டியலில் உள்ள 3 பேரும் கைப்பாவையாக செயல்பட மாட்டார்கள் என்பதால்தான் திமுக அரசு தடுமாறுகிறது.
இன்னும் டிஜிபி நியமனம் செய்யப்படாததை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும் வழக்கு உள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் டிஜிபி நியமனம் முறையாக நடைபெற்றது.
விவசாயிகள் பாதிப்பு
திமுக அரசின் அலட்சியத்தால்தான் விவசாயிகளுக்கு துயரம் ஏற்பட்டுள்ளது.
அறுவடைக்கு பின்னர் நெல்லை உடனே கொள்முதல் செய்திருந்தால் பிரச்சனை வந்திருக்காது.
கொள்முதல் செய்வதிலும் தாமதம் கொள்முதல் செய்த நெல்லை அனுப்புவதிலும் தாமதம். நெல்லை கொள்முதல் செய்யாததால்தான் மழையில் நனைந்து முளைத்து விட்டன.
நெல் கொள்முதல் நிலையங்களில் தேவையான அளவுக்கு லாரிகள் இல்லை. மதுரை சோழவந்தான் அருகே அரசு கொள்முதல் நிலையத்தில் லாரிகள் வராததால் நெல் மூட்டைகள் தேக்கம் ஏற்பட்டது.
நானும் டெல்டாகாரான் என வீரவசனம் பேசிய முதல்வர், விவசாயிகளுக்கு விரோதமாக உள்ளார். இப்போதும் நான் விவசாயிதான். முக ஸ்டாலின் விவசாயிகளுக்கு விரோதி.
முதலமைச்சர் விவசாயிகளை பார்க்க செல்லாமல் திரைப்படம் பார்க்க சென்றுவிட்டார்.
நெல் கொள்முதல் ஈரப்பதம் தொடர்பாக மத்திய அரசு என்ன கூறியது என்பதை தெரிவிக்க வேண்டும்.
மத்திய வேளாண் சட்டம்
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்கள் குறித்து முதல்வருக்கு தெரியுமா?.
3 வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது என்பதால்தான் நாங்கள் ஆதரவு அளித்தோம்.
ஆளுங்கட்சி செய்வதை நாங்கள் செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
விவசாயிகள் பாதிக்கப்படும் போது திமுக எம்பிக்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?
காவிரி நதிநீர் பிரச்சனையில் 22 நாட்கள் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
- கடந்த 4½ ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாவை தமிழக அரசு வழங்கி உள்ளது.
- மாணவி பிரேமாவுக்கு கலைஞர் கனவு இல்ல வீட்டை வழங்கியவர் முதலமைச்சர்.
திருவேற்காடு நகராட்சி சுந்தரசோழபுரத்தில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 294 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் முடிவுற்ற கட்டிடங்கள் திறப்பு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி கலந்து கொண்டார்.
தொடர்ந்து பல கூட்டங்களில் பேசி வருவதால் தொண்டை கட்டி உள்ளது. மூன்று நாட்களுக்கு பேசக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தாலும் உங்களிடம் பேச வந்துள்ளேன். திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கினோம்.
இந்தியாவிலேயே நீர் நிலைகளில் தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக திருவள்ளூர் மாவட்டம் பாலபுரம் ஊராட்சி மத்திய அரசின் விருது வாங்கி உள்ளது. அதற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதே திருவள்ளூர் மாவட்டத்தில் 65 ஆயிரம் பேருக்கு முதல்வர் வீட்டு மனை பட்டாக்களை வழங்கி உள்ளார். கடந்த 4½ ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாவை தமிழக அரசு வழங்கி உள்ளது.
தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் கலைஞர் ஆட்சியில்தான் ரேசன்கடை திறக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுதேடி ரேசன் பொருட்கள் வினியோகிக்கப்படுகிறது.
குடிசை வீடுகளை கான் கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தை கலைஞர் கொண்டு வந்தார். கலைஞர் கனவு இல்லம் வாயிலாக ஏராளமானோர் வீடு பெற்று உள்ளனர். மாணவி பிரேமாவுக்கு கலைஞர் கனவு இல்ல வீட்டை வழங்கியவர் முதலமைச்சர்.
மாணவி தான்யாவின் இல்லத்திற்கு சென்று உடல்நிலை குறித்து கேட்டறிந்தவர் முதலமைச்சர். தான்யாக்கள், பிரேமாக்கள் முகத்தில் மகிழ்ச்சியை கொண்டு வர கூடிய ஆட்சி தான் முதல்வர் ஆட்சி.
கும்மிடிப்பூண்டி, திரு வள்ளூர் தொகுதிகளில் அமைக்கப்படும் மினி ஸ்டேடியங்கள் விரைவில் கட்டி முடிக்கப்படும். தமிழ கத்தில் ஏராளமான திட்டங் கள் தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விடியல் பயணம், காலை உணவுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மகளிர் சுய உதவி குழுக் களை சேர்ந்த பெண்களுக்கு ஐ.டி.கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மகளிர் சுய உதவி குழு பெண்கள் தயாரிக்கும் பொருட்களில் 25 கிலோ வரை அரசு பஸ்களில் 100 கிலோ மீட்டர் வரை கட்டணமின்றி எடுத்து செல்லலாம். இதனால் அவர்களின் லாபம் அதிகரிக்கும்.
டிசம்பர் 15-ந்தேதி முதல் விடுபட்ட அனைத்து மகளி ருக்கும் மாதம் 1000 மகளிர் உரிமைத்தொகை வந்து சேரும். பெண்கள், மாற்றுத் திறனாளிகள், மாணவர்கள் என அனைத்து தரப்பின ருக்குமான ஆட்சி திராவிட மாடல் ஆட்சி.
இவ்வாறு அவர் பேசினார்.
- திருவள்ளூர் மாவட்டத்தில் 30ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்.
அடுத்த 7 நாட்களுக்கான வானிலை ஆறிக்கை குறித்து வானிலை மைய இயக்குநர் அமுதா பேட்டி அளித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
குமரி கடல் பகுதியில் உள்ள சுழற்சியால் நமக்கு மழை கிடைக்க அதிக வாய்ப்பு.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் 29ம் தேதி மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 30ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்.
டிசம்பர் மாதத்தில் எந்த அளவுக்கு மழை இருக்கும் என நவம்பர் 30-ல் அறிக்கை வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
- முல்லை நகர், செங்குளம் காலனி, இ.பி. காலனி, காஜாமலை,
திருச்சி:
திருச்சி மன்னார்புரம் துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே நாளை காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மன்னார்புரம், டி.வி.எஸ். டோல்கேட், உலகநாதபுரம், என்.எம்.கே. காலனி, சி.ஹெச். காலனி, உஸ்மான்அலி தெரு, சேதுராமன் பிள்ளை காலனி. ராமகிருஷ்ணா நகர்,
முடுக்குப்பட்டி, கல்லுக்குழி, ரேஸ்கோர்ஸ் ரோடு, கேசவ நகர் காஜா நகர்,ஜெ.கே. நகர். ஆர்.வி.எஸ். நகர், சுப்ரமணியபுரம், ராஜா தெரு, அண்ணா நகர், ரஞ்சிதபுரம், சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனி, மத்திய சிறைச்சாலை, கொட்டப்பட்டு, பொன்மலைப்பட்டி, முல்லை நகர், செங்குளம் காலனி, இ.பி. காலனி, காஜாமலை, தர்கா ரோடு, (கலெக்டர் பங்களா) மன்னார்புரம், ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
இந்த தகவலை மன்னார்புரம் செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்து உள்ளார்.
- சித்தராமையா முதல்வராக பதவி ஏற்று இரண்டரை ஆண்டு காலம் நிறைவடைந்துள்ளது.
- அடுத்த இரண்டரை ஆண்டுகள் டி.கே. சிவக்குமார் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்ப்பு.
கர்நாடக மாநில முதல்வராக இருக்கும் சித்தராமையாவின் இரண்டரை ஆண்டு பதவிக்காலம் நவம்பர் 20-ந்தேதியுடன் முடிவடைந்துள்ளது. இதனால் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு டி.கே. சிவக்குமார் முதல்வராக பதவி ஏற்பார் என காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. டி.கே. சிவக்குமார், சித்தராமையா ஆகியோர் கார்கேவை ஏற்கனவே சந்தித்து பேசினர்.
இந்த நிலையில் சித்தராமையா உடன் கார்கே நேற்று ஒரு மணி நேரத்திற்கு மேல் சந்தித்து பேசியுள்ளார். கடந்த ஒரு வாரத்திற்குள் இது 2ஆவது சந்திப்பாகும். இதனால் முதலமைச்சர் பதவியில் மாற்றம் ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையே டி.கே. சிவக்குமார் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் டெல்லி சென்று முகாமிட்டுள்ளனர். நேற்று 6 எம்.எல்.ஏ.-க்கள் டெல்லி சென்றுள்ளனர். இவர்கள் மேலிட தலைவர்களை சந்தித்து டி.கே. சிவக்குமாரை முதலமைச்சராக்க வலியுறுத்துவார்கள் எனத் தெரிகிறது.
இதற்கிடையே, சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் ஆகியோர் மேலிடம் என்ன முடிவு செய்கிறதோ, அதை ஏற்போம் எனத் தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் மாற்றம் பேச்சு வலுத்துவரும் வரும் நிலையில் சித்தராமையாவிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:-
நாங்கள் மேலிட முடிவுக்கு கட்டுப்படுவோம். அவர்கள் நான் தொடர்ந்து முதலமைச்சராக தொடர வேண்டும் என்றால், நான் தொடர்ந்து முதலமைச்சராக இருப்பேன். இறுதியாக எதுவாக இருந்தாலும் மேலிடம் முடிவு செய்யும். அதை நான் ஏற்றுக் கொள்வேன். டி.கே. சிவக்குமாரும் ஏற்றுக்கொள்வார்.
இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.
மேலும், டி.கே. சிவக்குமார் முதலமைச்சர் ஆவாரா? என்ற கேள்விக்கு "மேலிடம் முடிவு செய்யும் என்று நான் சொன்ன பிறகு, நீங்கள் மீண்டும் அதையே கேட்கிறீர்கள்" எனப் பதில் அளித்தார்.
ராகுல் காந்தி வெளிநாட்டில் இருந்து வந்த பிறகு, சித்தராமையா டெல்லி சென்று அவரை சந்திப்பார் எனத் தகவல் வெளியாகி வருகிறது.
முதலமைச்சர் மாற்றம் குறித்து மேலிடம் (உயர்மட்ட குழு) முடிவு செய்யும் என கார்கே தெரிவித்திருந்தார்.
- இந்திய கடல் பகுதிகளில் மூன்று சுழற்சிகள் ஒன்றாக காணப்படுகின்றன.
- கடந்த 24 மணிநேரத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாக இருந்தது.
அடுத்த 7 நாட்களுக்கான வானிலை ஆறிக்கை குறித்து வானிலை மைய இயக்குநர் அமுதா பேட்டி அளித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
இந்திய கடல் பகுதிகளில் மூன்று சுழற்சிகள் ஒன்றாக காணப்படுகின்றன. குமரிக்கடல், அதை ஒட்டிய பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளது. இதனால், மீனவர்கள் உடனே கரைக்கு திரும்ப வேண்டும் எனவும், தமிழகம், கேரள கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
வடகிழக்கு பருவமழை இயல்பில் இருந்து 5 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. 4 இடங்களில் அதி கனமழை, 76 இடங்களில் கனமழை பதிவாகி இருக்கிறது.
கடந்த 24 மணிநேரத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
- காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
- சிந்திலுப்பு, எல்லப்பநாய்க்கனூர், ஆலமரத்தூர், இலுப்பநகரம்
குடிமங்கலம்:
ஆலமரத்தூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி பெதப்பம்பட்டி, சோமவாரப்பட்டி, ருத்தரப்பநகர், லிங்கமநாயக்கன் புதூர், கொங்கல்நகரம்,
கொங்கல்நகரம் புதூர், எஸ்.அம்மாபட்டி, நஞ்சேகவுண்டன்புதூர், மூலனூர், விருகல்பட்டிபுதூர், விருகல்பட்டிபழையூர், அணிக்கடவு, ராமச்சந்திராபுரம், மரிக்கந்தை, செங்கோடகவுண்டம்புதூர், சிந்திலுப்பு, எல்லப்பநாய்க்கனூர், ஆலமரத்தூர், இலுப்பநகரம், சிக்கனூத்து, ஆமந்தகடவு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
மேற்கண்ட தகவலை, உடுமலை மின்பகிர்மான செயற்பொறியாளர் ராஜா தெரிவித்து உள்ளார்.
- 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த கோர விபத்தில் 5 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 6 பேர் பலியாகி உள்ளனர்.
பஸ்கள் அதிவேகமாக வந்ததே விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில், பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்த செய்தி, மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் பூரணமாகக் குணமடையும் வகையில், தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தி, உயர்தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தர்மேந்திரா உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள இல்லத்தில் காலமானார்.
- பாலிவுட்டில் தர்மேந்திராவின் ஒவ்வொரு கதாபாத்திரமும் பலதரப்பட்ட மக்களை கவர்ந்துள்ளது.
பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா (89) உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள இல்லத்தில் காலமானார்.
இந்நிலையில், இந்திய சினிமாவின் சகாப்தம் முடிவுற்றது என்று தர்மேந்திராவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில்," நடிகர் தர்மேந்திராவின் மறைவு இந்திய சினிமாவின் சகாப்தம் முடிவுற்றுள்ளதை குறிக்கிறது. பாலிவுட்டில் தர்மேந்திராவின் ஒவ்வொரு கதாபாத்திரமும் பலதரப்பட்ட மக்களை கவர்ந்துள்ளது.
தர்மேந்திராவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என்றார்.






