search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்க்கு ₹12 லட்சம் அபராதம் விதிப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்க்கு ₹12 லட்சம் அபராதம் விதிப்பு

    • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நேற்று மோதின
    • 177 ரன்களை துரத்திய லக்னோ அணி 19 ஓவர்கள் முடிவில் 180 ரன்களை குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 34 ஆவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நேற்று மோதின.

    அதில், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா சிறப்பாக ஆடி 57 ரன்களை குவித்தார். கடைசியில் களமிறங்கிய எம்.எஸ். டோனி 9 பந்துகளில் 28 ரன்களை குவித்தார்.

    177 ரன்கள் என்ற இலக்கை துரத்திய லக்னோ அணி 19 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 180 ரன்களை குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சி.எஸ்.கே. சார்பில் முஸ்தாஃபிசுர் மற்றும் பத்திரனா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    அதைத் தொடர்ந்து லக்னோவுக்கு எதிரான போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்க தவறியதால் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ்க்கு ₹12 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.

    Next Story
    ×