செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலில் 9 பேர் பலி

Published On 2017-11-16 11:25 GMT   |   Update On 2017-11-16 14:12 GMT
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காபுல்:

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபுல் நகரின் கைர் கானா பகுதியில் ஒரு உணவகம் அமைந்துள்ளது. இந்த உணவகத்தின் அருகே இன்று இன்று மதியம் ஜமியத்-இ-இஸ்லாமி கட்சி சார்பில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப் கானியின் முன்னாள் அலோசகர் உட்பட அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர். 

அப்போது சுமார் 1:30 மணியளவில் அந்த கூட்டத்திற்குள் நுழைந்த ஒரு தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான். இதையடுத்து அப்பகுதியில் இருந்த மக்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். இந்த வெடிகுண்டு தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர். 


இந்த தாக்குதலில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை.
Tags:    

Similar News