செய்திகள்
தற்கொலை

திருவாரூர் அருகே புதுப்பெண் தற்கொலை

Published On 2020-01-16 15:36 GMT   |   Update On 2020-01-16 17:40 GMT
திருவாரூர்அருகே காதல் திருமணம் செய்த புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அடுத்த கீழக்கரையை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் சிவரஞ்சனி (வயது 18). இவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்துள்ளார். இவர் அதே ஊரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார். செந்தில்குமார் மீன் வியாபாரம் செய்து வருகிறார். 

இந்நிலையில் சிவரஞ்சனி சரியாக சாப்பிடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஒரு உடல் மெலிந்து ஒல்லியாக இருந்துள்ளார். இதனைப் பார்த்த இருவீட்டாரும் சிவரஞ்சனி திட்டி ஒழுங்காக சாப்பிட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். இதில் மன உளைச்சலுக்கு ஆளான சிவரஞ்சனி வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயக்கம் அடைந்துள்ளார். இதனை பார்த்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவரஞ்சனி இறந்தார். 

இதுதொடர்பாக இவரது தந்தை கோவிந்தராஜ் நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் கார்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News