search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுப்பெண் தற்கொலை"

    • கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபமடைந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கம்பம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 52). இவர் குடும்பத்துடன் நெசவு வேலை செய்து வருகிறார். இவரது மகள் ஷாலினி (24) க்கும் தேனி மாவட்டம் கம்பம் அருகே சுக்காங்கால்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணராஜா என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 பேரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

    கணவருடன் தனித்தகுடித்தம் நடத்தி வந்தார். இந்த நிலையில் அவரது மனைவிக்கு தெரியாமல் ரூ.3 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷாலினி தனது கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    சிறிது நேரத்தில் வீட்டுக்குள் சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயன்றார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்து ஷாலினியை மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கீர்த்தனா சாணி பவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    கோவை மாவட்டம் புளியங்குளத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 48). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவரது 2-வது மகள் கீர்த்தனாவை (23) கடந்த ஜூன் மாதம் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தானர்.

    இந்நிலையில் கீர்த்தனா மற்றும் கார்த்திக் இருவரும் தலை ஆடி கொண்டாடுவதற்காக கோபாலகிருஷ்ணன் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

    அங்கு கீர்த்தனா மற்றும் கார்த்திக்கை கோபாலகிருஷ்ணன் சரிவர கவனிக்காததால் கோபமடைந்த கார்த்திக் மற்றும் கீர்த்தனா சத்தியமங்கலத்திற்கு திரும்பி வந்துள்ளனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று கீர்த்தனா சாணி பவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த கோபாலகிருஷ்ணன் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் இதகுறித்து புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமணம் நடைபெற்று 3-வது நாளிலேயே மணப்பெண் தற்கொலை செய்து கொண்டிருப்பதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது.
    • புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இருவீட்டாரின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருச்சி:

    திருச்சி மேலகல்கண்டார் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 31). தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், திருச்சி தாளக்குடி மகாலட்சுமி நகர் டேவிட் என்பவரின் மகள் ரெஸ்பாகா (25) என்பவருக்கும் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது.

    இதையடுத்து மறுவீடு அழைப்பிற்காக பெண்ணின் வீட்டிற்கு புதுமண தம்பதியினர் அழைத்து செல்லப்பட்டனர். பெற்றோர் வீட்டுக்கு செல்லும் ஆர்வத்தில் இருந்தார்.

    அங்கு தடபுடல் விருந்து நடைபெற்றது. விருந்திற்கு பின்னர் பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்து கொண்டு மாப்பிள்ளை வீட்டார் காரில் புறப்பட்டு உள்ளனர். ஆசையுடன் வளர்த்த மகளை ஆனந்த கண்ணீருடன் பெண் வீட்டார் வழி அனுப்பி வைத்துள்ளனர்.

    புது மாப்பிள்ளை, புது வாழ்வு, புது கனவுகளுடன் தனது கணவரின் அருகில் அமர்ந்து சந்தோஷமாக பயணித்துள்ளார். ஆனால் இந்த சந்தோஷ பயணம் வெகு நேரம் நீடிக்கவில்லை.

    ஸ்ரீரங்கம் பகுதியில் பைபாஸ் ரோட்டில் கார் சென்று கொண்டிருந்த போது புது மணப்பெண் ரெஸ்பாகா திடீரென்று மயங்கி, ஸ்டீபன் மீது சாய்ந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை வீட்டார் உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு காரை கொண்டு சென்று உள்ளனர்.

    திருவானைக்காவல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு ரெஸ்பாகாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    தலையில் இடி விழுந்தது போல் உணர்ந்த புதுமாப்பிள்ளையும், அவரது வீட்டாரும் செய்வதறியாது திகைத்து நின்றனர். பின்னர் ஸ்டீபன் இது குறித்து மணப்பெண் வீட்டிற்கு தகவல் அளித்தார். அங்கு வந்த மணப்பெண் வீட்டார் கதறி துடித்தனர்.

    இது தொடர்பாக அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் அங்கு வந்த கொள்ளிடம் போலீசார் புதுப்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மறுவீடு அழைப்பு விருந்திற்கு முன்னதாகவே ரெஸ்பாகா விஷம் அருந்தி இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.

    விரும்பாத திருமணமா அல்லது ஏதேனும் காதல் தோல்வியா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நடைபெற்று 3-வது நாளிலேயே மணப்பெண் தற்கொலை செய்து கொண்டிருப்பதால், இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது.

    புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இருவீட்டாரின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • காதல் திருமணம் செய்து கொண்டனர்
    • கோட்டாட்சியர் பிரேமலதா விசாரனை நடத்தினார்

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த விண்ண மங்கலம் பகுதியை சேர்ந்தவர் அனுப்பிரியா (வயது 26). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    மேலும் வங்கி தேர்வு எழுதுவ தற்காக ஆம்பூரில் உள்ள தனி யார் பயிற்சி மையத்திற்கு சென்று கொண்டிருந்தார். பயிற்சி வகுப்புக்கு சென்ற போது மின்னூர் பகுதியை சேர்ந்த திருமுருகன் (26) என் பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் சில மாதங்க ளாக இருவரும் காதலித்து வந்தனர்.

    கடந்த 25 நாட்க ளுக்கு முன்பு திருமுருகனும், அனுப்பிரியாவும் ஆம்பூரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு மின்னூரில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தனர்.

    நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் அனுப் பிரியா வீட்டில் உள்ள மின்வி சிறியில் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார்.

    இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் தாலுகா போலீசார் அனுப்பிரியா வின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக ஆம்பூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அனுப்பிரியா தற்கொலை செய்து கொண்டது குறித்து தகவலறிந்து வந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று காலை ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர். மேலும் அனுப்பிரியாவின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இச்சம்பவத்தால் போலீஸ் நிலையம் முன்பாக கூடுதலாக போலீசார் குவிக்கப்பட் டனர். திருமணமாகி 25 நாட் களே ஆவதால் அனுப்பிரியா சாவுக்கான காரணம் குறித்து வாணியம்பாடி கோட்டாட் சியர் பிரேமலதா விசாரனை நடத்தினார்.

    இந்த நிலையில் திருமுரு கனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • மதியம் வீட்டின் மேல் மாடியில் உள்ள ஒரு அறைக்கு சென்ற ரம்யா நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை.
    • போலீசார் வழக்குப்பதிந்து, ரம்யா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் சின்னகிணத்துப்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகள் ரம்யா (வயது 24). இவருக்கும், திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் ஜெகதீஷ் என்கிற சித்திரை செல்வன் என்பவருக்கும் பெற்றோர் முன்னிலையில் கடந்த 28-ந்தேதி தாந்தோணிமலையில் ஒரு கோவிலில் வைத்து திருமணம் நடந்துள்ளது.

    இந்நிலையில் மறுவீட்டு அழைப்பிற்காக நேற்று முன்தினம் காலை வெள்ளக்கோவிலில் இருந்து ரம்யா தனது கணவர் சித்திரை செல்வனுடன் புறப்பட்டு தனது தந்தை வீடான சின்னகிணத்துப்பட்டிக்கு வந்துள்ளார். பின்னர் மதியம் வீட்டின் மேல் மாடியில் உள்ள ஒரு அறைக்கு சென்ற ரம்யா நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ரம்யா மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டுக்கொண்ட நிலையில் தொங்கினார்.

    இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ரம்யாவின் பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ரம்யாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தற்கொலை குறித்து ரம்யாவின் தந்தை அழகர்சாமி மாயனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, ரம்யா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான மறுநாளே புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி விசாரணை நடத்தி வருகிறார்.

    • புதுப்பெண்ணிற்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு வந்துள்ளது. திடீரென அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகில் உள்ள கருவேலநாயக்கன்பட்டி வாசுகி காலனியை சேர்ந்த வர் கண்ணன்பிரபு(44). ஆட்டோ டிரைவராக வேலைபார்த்து வருகிறார். இவரது மகள் அபிநயா(18). இவருக்கும் கேரளாவை சேர்ந்த கோபிகண்ணன் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் 25-ந்தேதி திருமணம் நடந்தது.

    அதன்பிறகு அபிநயா விற்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு வந்துள்ளது. இத னால் புதுமண தம்பதிகளை தங்களது வீட்டிற்கு வர வழைத்தனர். அபிநயாவிற்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த அபிநயா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேனி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருமணமாகி 40 நாட்களே ஆவதால் ஆர்.டி.ஓ மேல் விசாரணை நடத்த உள்ளார்.

    • இளம்பெண் உடலில் தீ வைத்து கொண்டதால் படுகாயமடைந்தார்.
    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி அருகே சின்னமனூர் ஓடைப்பட்டி பி.கே.எஸ்.நகரை சேர்ந்தவர் பிரகாஷ்ராஜ் மனைவி மீனா(20). இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி திருமணம் நடந்தது. கணவன்-மனைவி தனியாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் பிரகாஷ்ராஜ் வேலைநிமித்தமாக சென்னைக்கு சென்றார். இதனால் மீனா தனது தாய்வீட்டில் தங்கியிருந்தார்.

    இந்தநிலையில் சம்பவத்தன்று திடீரென தனது உடலில் தீ வைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த தாய் செல்வி, மீனாவை மீட்டு முதலுதவி செய்தார். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    சிகிச்சையில் இருந்தபோது தனக்கு வாழ பிடிக்கவில்லை என தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து ஓடைப்பட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • திருமணமாகி 3 நாட்களில் விபரீதம்
    • ேபாலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தாலுகா காக்கணபாளையம் கிராமத்தில் வசிப்பவர் மகேந்திரன் மகன் துருவன் (வயது 27) கட்டிட மேஸ்திரி.

    செங்கம் பகுதியைச் சேர்ந்தவர் பானுப்பிரியா (வயது 25), இவரும் கட்டிடப் பணியில் கூலி வேலை செய்து வந்தனர்.

    இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 3 காதல் திருமணம் செய்து கொண்டு காக்கணம் பாளையத்தில் உள்ள துருவன் வீட்டில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் திடீரென குடும்ப சண்டை காரணமாக அருகில் உள்ள கிணற்றில் பானுப்பிரியா குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து குரிசிலா பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பானுப்பிரியா ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை பெற்று விவாகரத்து பெற்றுள்ளதை மறைத்ததாகவும் கணவர் திட்டியதால் அவர் கிணற்றில் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து வன்கொடுமை சட்டத்தில் துருவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். காதல் திருமணம் ஆகி 3 நாட்களில் காதல் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவன் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 2 பேருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது.
    • காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

     கோவை,

    கோவை கோவில்பாளையம் அருகே உள்ள குரும்பாளையத்தைச் சேர்ந்தவர் ஹரிபிரகாஷ். இவரது மனைவி தனலட்சுமி (வயது 21). இவர்கள் 2 பேரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கணவன் -மனைவி இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆவாரம்பாளையம் வந்து வசித்து வந்தனர். இந்த நிலையில் 2 பேருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இது குறித்து தனலட்சுமி கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் கணவன் -மனைவி இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் தனலட்சுமி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட தனலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு 

    • திருமணமான 10 நாளில் புதுப்பெண் தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
    • விமலா தேவியின் தாய் யார் மீதும் இதுவரை புகார் கொடுக்கவில்லை.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள தேவூரை அடுத்த நல்லங்கியூரை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் ஜீவானந்தம் (வயது 27), மொபைல் போன் சர்வீஸ் வேலை செய்து வருகிறார்.

    ஈரோடு மாவட்டம் காடப்பனூர் ஊராட்சி குதிரைக்கல்மேட்டை சேர்ந்த குப்புசாமி மகள் விமலாதேவி (வயது 20), இவர்களுக்கு கடந்த 5-ந் தேதி திருமணம் ஆனது.

    இந்த நிலையில் கணவர் வீட்டில் இருந்த கமலாதேவி நேற்று முன்தினம் மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதையடுத்து அவரது உடலை எரிக்க இரு வீட்டினரும் முடிவு செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் திருமணமான 10 நாளில் புதுப்பெண் தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாப்பிள்ளை பிடிக்காமல் கட்டாயப்படுத்தி விமலாதேவிக்கு திருமணம் செய்து வைத்ததாகவும், இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    மேலும் விமலா தேவியின் தாய் யார் மீதும் இதுவரை புகார் கொடுக்கவில்லை. இதனால் விமலா தேவி யாரையாவது காதலித்தாரா? அதற்கு பெற்றோர் சம்மதிக்காமல் கட்டயாப்படுத்தி திருமணம் செய்து வைத்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அடிக்கடி செல்போனில் டிக்டாக் பார்ப்பதையும், கேம் விளையாடுவதையும் கணவர் கண்டித்ததால் வெண்ணிலா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • தாண்டிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரும்பாறை:

    தாண்டிக்குடி அருகே உள்ள அம்பேத்கார் காலனியை சேர்ந்தவர் மணிகண்டன்(27).

    கூலித்தொழிலாளி. இவருக்கும் வெண்ணிலா(21) என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது. வெண்ணிலா அடிக்கடி செல்போனில் டிக்டாக் பார்ப்பதையும், கேம் விளையாடுவதையும் வாடிக்கையாக வைத்திருந்தார்.

    இதனை மணிகண்டன் கண்டித்தார். இதனால் மனமுடைந்த வெண்ணிலா விஷம் குடித்து மயங்கிகிடந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு அவரை தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தாண்டிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பத்மநாபனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • திருமணமாகி 10 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணை நடந்து வருகிறது.

    கோவை:

    கோவை நீலாம்பூர் மேற்கு வீதியை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 26). தொழிலாளி. இவருக்கும் கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஜீவஜெயந்தி (21) என்பவரும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் பத்மநாபனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.சம்பவத்தன்று பத்மநாபன் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்ேபாது அவர் ஜீவஜெயந்தியிடம் தகராறில் ஈடுபட்டு திட்டினார். இதனால் அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார்.

    நேற்று வீட்டில் இருந்த அவர் விரக்தி அடைந்து திடீரென தூக்குப்போட்டு கொண்டார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த பத்மநாபன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜீவஜெயந்தியை மீட்டார்.

    ஆனால் அவர் அதற்குள் இறந்துவிட்டார். பின்னர் இதுகுறித்து பத்மநாபன் சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜீவஜெயந்தியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 10 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணை நடந்து வருகிறது. திருமணமான 10 மாதத்தில் புது பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×