search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி அருகே திருமணமான ஒரே மாதத்தில் புதுப்பெண் தற்கொலை
    X

    கோப்பு படம்

    தேனி அருகே திருமணமான ஒரே மாதத்தில் புதுப்பெண் தற்கொலை

    • இளம்பெண் உடலில் தீ வைத்து கொண்டதால் படுகாயமடைந்தார்.
    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி அருகே சின்னமனூர் ஓடைப்பட்டி பி.கே.எஸ்.நகரை சேர்ந்தவர் பிரகாஷ்ராஜ் மனைவி மீனா(20). இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி திருமணம் நடந்தது. கணவன்-மனைவி தனியாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் பிரகாஷ்ராஜ் வேலைநிமித்தமாக சென்னைக்கு சென்றார். இதனால் மீனா தனது தாய்வீட்டில் தங்கியிருந்தார்.

    இந்தநிலையில் சம்பவத்தன்று திடீரென தனது உடலில் தீ வைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த தாய் செல்வி, மீனாவை மீட்டு முதலுதவி செய்தார். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    சிகிச்சையில் இருந்தபோது தனக்கு வாழ பிடிக்கவில்லை என தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து ஓடைப்பட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×