search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுப்பெண் தற்கொலை வழக்கில் கணவன் கைது
    X

    புதுப்பெண் தற்கொலை வழக்கில் கணவன் கைது

    • திருமணமாகி 3 நாட்களில் விபரீதம்
    • ேபாலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தாலுகா காக்கணபாளையம் கிராமத்தில் வசிப்பவர் மகேந்திரன் மகன் துருவன் (வயது 27) கட்டிட மேஸ்திரி.

    செங்கம் பகுதியைச் சேர்ந்தவர் பானுப்பிரியா (வயது 25), இவரும் கட்டிடப் பணியில் கூலி வேலை செய்து வந்தனர்.

    இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 3 காதல் திருமணம் செய்து கொண்டு காக்கணம் பாளையத்தில் உள்ள துருவன் வீட்டில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் திடீரென குடும்ப சண்டை காரணமாக அருகில் உள்ள கிணற்றில் பானுப்பிரியா குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து குரிசிலா பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பானுப்பிரியா ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை பெற்று விவாகரத்து பெற்றுள்ளதை மறைத்ததாகவும் கணவர் திட்டியதால் அவர் கிணற்றில் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து வன்கொடுமை சட்டத்தில் துருவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். காதல் திருமணம் ஆகி 3 நாட்களில் காதல் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவன் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×