செய்திகள்

நெல்லை அருகே அரிவாளை காட்டி மிரட்டி சிறுமியை கடத்தி சென்ற கும்பல்

Published On 2018-09-10 16:14 GMT   |   Update On 2018-09-10 16:14 GMT
நெல்லை அருகே வீடு புகுந்து அரிவாளை காட்டி மிரட்டி சிறுமியை கடத்தி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

நெல்லை:

நெல்லையை அடுத்த மானூர் அருகேயுள்ள தெற்கு வாகைகுளம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுதுரை. சம்பவத்தன்று பொன்னுதுரையும், அவரது மனைவியும் நெல்லை மார்க்கெட்டுக்கு வந்துவிட்டனர். வீட்டில் அவர்களது மகள் மட்டும் தனியாக இருந்தார்.

அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 4 பேர் வந்தனர். அவர்கள் திடீரென பொன்னுதுரையின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தனர். பின்னர் அரிவாளை காட்டி மிரட்டி பொன்னுதுரையின் மகளை கடத்தி சென்று விட்டனர்.

வீட்டுக்கு வந்த பொன்னுதுரையும், அவரது மனைவியும் இதுபற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மானூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து வீடு புகுந்து அரிவாளை காட்டி மிரட்டி சிறுமியை கடத்தி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News