செய்திகள்
தற்கொலை செய்துகொண்ட புதுப்பெண் மீனா

வாணியம்பாடியில் திருமணமான ஒரே நாளில் புதுப்பெண் தற்கொலை

Published On 2018-04-27 04:33 GMT   |   Update On 2018-04-27 04:33 GMT
வாணியம்பாடியில் திருமணமான ‘ஒரே நாளில்’ புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி:

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் மருத்துவர் காலனியை சேர்ந்தவர் விநாயகம். இவரது மகள் மீனா (வயது 20). இவருக்கும், வாணியம்பாடி அடுத்த குரிசிலாப்பட்டை சேர்ந்த சின்னசாமி மகன் கோவிந்தராஜ் (25) என்ற நாதஸ்வர கலைஞருக்கும், நேற்று முன்தினம் மணமகன் வீட்டில் பந்தல் அமைத்து, திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்தவுடன், மணமகள் வீட்டிற்கு புதுமண தம்பதி அழைத்து வரப்பட்டனர். மாப்பிள்ளை கோவிந்தராஜ் நேற்று மாலை வேலை நிமித்தமாக குரிசிலாப்பட்டுக்கு சென்றார். புதுப்பெண் மீனா அதே பகுதியில் உள்ள உறவினர் யுவராஜ் என்பவர் வீட்டிற்கு சென்றார். அங்கு யாரும் இல்லை.

யுவராஜ் வீட்டிற்குள் சென்ற புதுப்பெண் மீனா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தேடி குடும்பத்தினர் வந்து பார்த்தபோது, தூக்கில் மீனா பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். வாணியம்பாடி டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார், விரைந்து வந்து புதுப்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப்பதிவு செய்து, திருமணமான ஒரே நாளில் மீனா தற்கொலை செய்து கொண்டது ஏன்? இந்த திருமணத்தில் அவருக்கு விருப்பம் இல்லையா? காதல் பிரச்சனையா? என பல கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
Tags:    

Similar News