search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new bride suicide"

    சேத்துப்பட்டு அருகே திருமணமான 4 நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து செய்யாறு உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த ஊத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகள் காயத்திரி (வயது 22). இவர் 10-ம் வகுப்பு வரை படித்து இருந்தார்.

    காயத்திரிக்கும், சின்னசந்தவாசல் கிராமத்தை சேர்ந்த அன்பழகன் என்பவரது மகன் ராஜேஷ் (25) என்பவருக்கும் கடந்த 10-ந் தேதி திருமணம் நடந்தது. மணமக்கள் இருவரும் காயத்திரி வீட்டில் இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலையில் மணமகன் வீட்டில் இருந்து 5 பேர் ராஜமாணிக்கம் வீட்டுக்கு ராஜேசையும், காயத்திரியையும் அழைத்து செல்ல வந்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த காயத்திரி குளித்துவிட்டு வருகிறேன் என கூறிவிட்டு சென்றவர். வீட்டில் இருந்த மாட்டு கொட்டகைக்கு சென்று மாடு கட்டும் கயிற்றில் தூக்கிட்டார்.

    இதைகண்ட உறவினர்கள் காயத்திரியை மீட்டு தேவிகாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், காயத்திரி இறந்துவிட்டதாக கூறினார்.

    இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தற்கொலை செய்துகொண்ட காயத்திரிக்கு திருமணமாகி 4 நாட்களே ஆவதால் செய்யாறு உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
    திருப்பூரில் கணவருக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    திருப்பூர்:

    திருப்பூர் செட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் சூர்யா (19). இவர் முதலிப்பாளையம் சிட்கோவில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    அதே நிறுவனத்தில் நவீன் குமார் (26) என்பவரும் வேலை பார்த்து வந்தார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 4 மாதங்களாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்தது.

    அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதையும் மீறி நவீன்குமார் - சூர்யா கடந்த மாதம் 5-ந்தேதி நண்பர்கள் முன்னிலையில் செங்கப்பள்ளி அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் நல்லூர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனு அளித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் இரு குடும்பத்தினரையும் அழைத்து சமரசம் செய்து வைத்தனர்.

    பின்னர் நவீன் குமார்- சூர்யா தனிக்குடித்தனம் சென்றனர். அவர்களுடன் நவீன் குமார் தாய் காளீஸ்வரியும் குடியிருந்து வந்தார். சூர்யாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. திருமணமான ஒரு மாதத்தில் 3 முறை ஆஸ்பத்திரிக்கு சென்று வந்துள்ளார்.

    இதனால் கணவன்-மனைவிக்கிடையே மனக்கசப்பு இருந்து வந்துள்ளது. வாய் தகராறும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    நேற்று நவீன் குமார் வெளியில் சென்று விட்டார். வீட்டில் இருந்த சூர்யா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்று வீடு திரும்பிய நவீன் குமார் மனைவி தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து நல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

    தற்கொலை செய்து கொண்ட சூர்யா தனது இடது கையில் கணவருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்து இருந்தார். அதில் உன்னை விட்டு தனியாக பிரிந்து செல்ல மனமில்லை. நீயும் என்னுடன் வந்து விடு என எழுதப்பட்டு இருந்தது.

    சூர்யா தனது வங்கி பாஸ்புத்தகத்தில் மற்றொரு கடிதம் எழுதி இருந்தார். அதில் நவி மாமா. நீ பேசிய அந்த ஒரு வார்த்தையை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. நான் செல்கிறேன். என்னுடன் வந்து விடு என எழுதி உள்ளார்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான ஒரு மாதத்தில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.
    தேனி அருகே சகோதரனுடன் ஏற்பட்ட காதலால் திருமணமான 2-ம் நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    தேனி:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள புலிக்குத்தி பகுதியைச் சேர்ந்த பாண்டியன் மகள் ரம்யா (வயது 21). இவருக்கும் பெரியகுளம் சருத்துப்பட்டியைச் சேர்ந்த ரங்கராஜ் என்பவருக்கும் கடந்த 11-ந் தேதி திருமணம் நடந்தது.

    திருமணம் முடிந்ததும் விருந்துக்காக புதுமணத் தம்பதிகள் புலிக்குத்தி கிராமத்துக்கு வந்தனர். அப்போது திருப்பூரில் வேலை பார்த்து வரும் ரம்யாவின் சித்தப்பா மகன் முத்துகிருஷ்ணன் (27) என்பவரும் புதுமண ஜோடியை பார்க்க வந்தார்.

    விருந்து நடந்து கொண்டு இருந்தபோது அருகில் இருந்த ஒரு வீட்டில் புதுப்பெண் ரம்யாவும், முத்து கிருஷ்ணனும் வி‌ஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தனர்.

    இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு போடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே ரம்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

    முத்துகிருஷ்ணன் தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இது குறித்து போலீசார் தெரிவிக்கையில் முத்துகிருஷ்ணனும், தங்கை உறவு முறை உள்ள ரம்யாவும் காதலித்து வந்துள்ளனர். இதனை பெற்றோர்கள் பல முறை எடுத்துச் சொல்லி அவர்களை பிரிக்க பார்த்தனர்.

    ஆனால் அவர்கள் தொடர்ந்து காதலித்து வந்ததால் ரம்யாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இதனால் வேதனையடைந்த ரம்யாவும், முத்துகிருஷ்ணனும் வி‌ஷம் குடித்துள்ளனர் என்று தெரிவித்தனர்.
    தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே திருமணத்தை ஒரு ஆண்டு தள்ளி வைத்ததால் மனமுடைந்த புதுப்பெண் தற்கொலை செய்துகொண்டார்.
    அய்யம்பேட்டை:

    அய்யம்பேட்டை அருகே மேல வழுத்தூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி வசந்தா. இவர்களது மகள் ஈஸ்வரி. இவருக்கும், உறவினர் மகனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஈஸ்வரியின் பெற்றோர் திருமணத்தை ஒருவருடத்துக்கு பின் நடத்த முடிவு செய்தனர். இதனால் மனமுடைந்த ஈஸ்வரி வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டின் கதவை பூட்டிக் கொண்டு தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தீயை அணைத்தனர். ஆனால் உடல் முழுவதும் பலத்த தீக்காயம் அடைந்த ஈஸ்வரி வீட்டிலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்த அய்யம்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஈஸ்வரியின் தாயார் வசந்தா கொடுத்த புகாரின் பேரில் அய்யம்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகேசன், சப் இன்ஸ்பெக்டர் சசிகுமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தனிக்குடித்தனம் வர கணவர் மறுத்ததால் மனவேதனையில் இருந்த புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    புவனகிரி:

    கடலூர் மாவட்டம் புவனகிரி சுண்ணாம் புக்கரை தெருவைச் சேர்ந்தவர் சீனுவாசன். இவரது மகள் மாலதி(வயது 32). இவருக்கும் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த ரவிசங்கர்(35) என்பவருக்கும் இடையே கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இதையடுத்து மாலதி தனது கணவருடன் மாமனார், மாமியாருடன் சென்னையில் வசித்து வந்தார்.

    தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று மாலதி தன் கணவரிடம் வலியுறுத்தினார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதனால் மாலதி தனது கணவருடன் கோபித்துவிட்டு புவனகிரியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். அங்கு மாலதி மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார்.

    தனது கணவர் தனிக்குடித்தனம் வர மறுக்கிறார் என எண்ணி மனவேதனை அடைந்தார். நேற்று இரவு மாலதி தாய் வெளியே சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த மாலதி திடீரென மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வீட்டுக்கு வந்த தாய் தனது மகள் மாலதி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து புவனகிரி போலீசில் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மாலதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுபற்றிய புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 5 மாதத்தில் மாலதி தற்கொலை செய்து கொண்டதால் கோட்டாட்சியரும் இதுகுறித்து விசாரித்து வருகிறார்.

    இந்தசம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ×