என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அய்யம்பேட்டை அருகே திருமணத்தை ஒரு ஆண்டு தள்ளி வைத்ததால் புதுப்பெண் தற்கொலை
Byமாலை மலர்27 Sep 2018 11:06 AM GMT (Updated: 27 Sep 2018 11:06 AM GMT)
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே திருமணத்தை ஒரு ஆண்டு தள்ளி வைத்ததால் மனமுடைந்த புதுப்பெண் தற்கொலை செய்துகொண்டார்.
அய்யம்பேட்டை:
அய்யம்பேட்டை அருகே மேல வழுத்தூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி வசந்தா. இவர்களது மகள் ஈஸ்வரி. இவருக்கும், உறவினர் மகனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஈஸ்வரியின் பெற்றோர் திருமணத்தை ஒருவருடத்துக்கு பின் நடத்த முடிவு செய்தனர். இதனால் மனமுடைந்த ஈஸ்வரி வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டின் கதவை பூட்டிக் கொண்டு தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தீயை அணைத்தனர். ஆனால் உடல் முழுவதும் பலத்த தீக்காயம் அடைந்த ஈஸ்வரி வீட்டிலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த அய்யம்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஈஸ்வரியின் தாயார் வசந்தா கொடுத்த புகாரின் பேரில் அய்யம்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகேசன், சப் இன்ஸ்பெக்டர் சசிகுமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அய்யம்பேட்டை அருகே மேல வழுத்தூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி வசந்தா. இவர்களது மகள் ஈஸ்வரி. இவருக்கும், உறவினர் மகனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஈஸ்வரியின் பெற்றோர் திருமணத்தை ஒருவருடத்துக்கு பின் நடத்த முடிவு செய்தனர். இதனால் மனமுடைந்த ஈஸ்வரி வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டின் கதவை பூட்டிக் கொண்டு தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தீயை அணைத்தனர். ஆனால் உடல் முழுவதும் பலத்த தீக்காயம் அடைந்த ஈஸ்வரி வீட்டிலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த அய்யம்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஈஸ்வரியின் தாயார் வசந்தா கொடுத்த புகாரின் பேரில் அய்யம்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகேசன், சப் இன்ஸ்பெக்டர் சசிகுமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X