என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தனிக்குடித்தனம் வர கணவர் மறுத்ததால் புவனகிரியில் புதுப்பெண் தற்கொலை
Byமாலை மலர்4 Sep 2018 5:22 AM GMT (Updated: 4 Sep 2018 5:22 AM GMT)
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தனிக்குடித்தனம் வர கணவர் மறுத்ததால் மனவேதனையில் இருந்த புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
புவனகிரி:
கடலூர் மாவட்டம் புவனகிரி சுண்ணாம் புக்கரை தெருவைச் சேர்ந்தவர் சீனுவாசன். இவரது மகள் மாலதி(வயது 32). இவருக்கும் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த ரவிசங்கர்(35) என்பவருக்கும் இடையே கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து மாலதி தனது கணவருடன் மாமனார், மாமியாருடன் சென்னையில் வசித்து வந்தார்.
தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று மாலதி தன் கணவரிடம் வலியுறுத்தினார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதனால் மாலதி தனது கணவருடன் கோபித்துவிட்டு புவனகிரியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். அங்கு மாலதி மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார்.
தனது கணவர் தனிக்குடித்தனம் வர மறுக்கிறார் என எண்ணி மனவேதனை அடைந்தார். நேற்று இரவு மாலதி தாய் வெளியே சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த மாலதி திடீரென மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வீட்டுக்கு வந்த தாய் தனது மகள் மாலதி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து புவனகிரி போலீசில் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மாலதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றிய புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 5 மாதத்தில் மாலதி தற்கொலை செய்து கொண்டதால் கோட்டாட்சியரும் இதுகுறித்து விசாரித்து வருகிறார்.
இந்தசம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் புவனகிரி சுண்ணாம் புக்கரை தெருவைச் சேர்ந்தவர் சீனுவாசன். இவரது மகள் மாலதி(வயது 32). இவருக்கும் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த ரவிசங்கர்(35) என்பவருக்கும் இடையே கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து மாலதி தனது கணவருடன் மாமனார், மாமியாருடன் சென்னையில் வசித்து வந்தார்.
தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று மாலதி தன் கணவரிடம் வலியுறுத்தினார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதனால் மாலதி தனது கணவருடன் கோபித்துவிட்டு புவனகிரியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். அங்கு மாலதி மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார்.
தனது கணவர் தனிக்குடித்தனம் வர மறுக்கிறார் என எண்ணி மனவேதனை அடைந்தார். நேற்று இரவு மாலதி தாய் வெளியே சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த மாலதி திடீரென மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வீட்டுக்கு வந்த தாய் தனது மகள் மாலதி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து புவனகிரி போலீசில் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மாலதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றிய புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 5 மாதத்தில் மாலதி தற்கொலை செய்து கொண்டதால் கோட்டாட்சியரும் இதுகுறித்து விசாரித்து வருகிறார்.
இந்தசம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X