செய்திகள்

பெரியார் கொள்கையை கடைபிடித்தவர் ஜெயலலிதா- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

Published On 2018-03-18 12:53 GMT   |   Update On 2018-03-18 12:53 GMT
பெரியார் கொண்டு வந்த கொள்கையை பின் பற்றியவர் ஜெயலலிதா என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

தேனி:

தேனியில் மானிய விலையில் அம்மா ஸ்கூட்டி வழங்கும் விழா இன்று நடந்தது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று பயனாளிகளுக்கு ஸ்கூட்டிகளை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

மறைந்த முதல்வர் பெண்கள் உரிமைக்காக போராடியவர். அவர் பெண்களுக்காக பல திட்டங்களை கொண்டு வந்தார். பெண் சிசு கொலை தடுப்பதற்காக தொட்டில் குழந்தை திட்டத்தை அறிமுகப்படுத்தி பெண்களின் வாழ்வில் ஒளியேற்றியவர். தொட்டில் குழந்தை திட்டம் மூலம் தற்போது 5 ஆயிரம் குழந்தைகள் காப்பாற்றப்பட்டு நல்ல நிலையில் உள்ளனர்.

தந்தை பெரியார் கொண்டு வந்த திராவிட கொள்கைகளை அப்படியே பின்பற்றி நடந்தவர் ஜெயலலிதா. அதனால்தான் பல்வேறு நல்ல திட்டங்களை மக்களுக்காக செயலாற்றினார்.

ஆரம்ப காலத்தில் வாகனங்களில் பெண்கள் தங்களது சகோதரர்களின் பின்னால் அமர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. தற்போது பெண்களின் பின்னால் சகோதரர்கள் அமரும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு வழி வகுத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. தற்போது துணிச்சலாக இன்று பெண்கள் வாகனங்களை ஓட்டி செல்கின்றனர். இதனை பார்க்கும் போது பெருமையாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News