தமிழ்நாடு

ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ பாஸ் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Published On 2024-04-29 13:09 GMT   |   Update On 2024-04-29 13:09 GMT
  • இபாஸ் நடைமுறைகள் குறித்து இந்திய அளவில் விரிவான விளம்பரங்கள் கொடுக்க வேண்டும்
  • கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 முதல் ஜூன் 30ம் தேதி வரை இ-பாஸ் வழங்கும் முறையை அமல்படுத்த வேண்டும் என நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கான தொழில்நுட்ப உதவிகளை தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், உள்ளூர் மக்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் இ-பாஸ் நடைமுறைகள் குறித்து இந்திய அளவில் விரிவான விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News