துணை வேந்தர்களை நியமிக்கும் சட்டத்துக்கு தடை நீங்கியது- உச்ச நீதிமன்றம் அதிரடி
- ஆளுநர் தன்னிச்சையாக துணைவேந்தர்களை நியமிப்பதாக அரசு குற்றம்சாட்டியது.
- மாநில அரசின் சட்டம் UGC விதிகளுக்கு முரணாக இருப்பதாகவும் கூறி இந்தத் தடை விதிக்கப்பட்டது.
தமிழக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க அதிகாரம் வழங்கும் சட்டத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம் விதித்திருந்த இடைக்காலத் தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இந்த விவகாரம் மாநில அரசின் உரிமை மற்றும் ஆளுநரின் அதிகாரம் ஆகியவற்றுக்கு இடையேயான நீண்ட காலப் போராட்டத்தின் முக்கிய மைல்கல்லாகும். கடந்தாண்டு மே மாதம் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், (லட்சுமி நாராயணன் அமர்வு அரசின் சட்டத்திற்கு தடை விதித்திருந்தனர்.
தமிழ்நாடு அரசு 2022-2024 காலகட்டத்தில் பல்வேறு பல்கலைக்கழக சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வந்தது. அதில், துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்து நீக்கப்பட்டு, மாநில அரசுக்கே வழங்கப்பட்டது.
ஆளுநர் தன்னிச்சையாக துணைவேந்தர்களை நியமிப்பதாக அரசு குற்றம்சாட்டியது. மாநில அரசின் கொள்கைகளுக்கு இணக்கமான மற்றும் கல்விசார் தகுதியுள்ளவர்களை நியமிக்க இந்த அதிகாரம் அவசியம் என அரசு வாதிட்டது.
கடந்த ஆண்டு இந்த சட்டத்திருத்தங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வு, இதற்கு இடைக்காலத் தடை விதித்தது.
பல்கலைக்கழக மானியக் குழு (UGC) விதிகளின்படி, துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்குப் பங்கு இருக்க வேண்டும் என்றும், மாநில அரசின் சட்டம் UGC விதிகளுக்கு முரணாக இருப்பதாகவும் கூறி இந்தத் தடை விதிக்கப்பட்டது.
உயர் நீதிமன்றத்தின் தடையை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பல்வேறு காரணங்களுக்காக உயர் நீதிமன்றத் தடையை நீக்கியது:
பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், நிர்வாகச் சிக்கல்களைத் தவிர்க்க இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருவது அவசியம் எனக் கருதப்பட்டது.
தமிழக பல்கலைக் கழகங்களுக்கான துணைவேந்தர்களை முதல்வரே நியமிக்கும் சட்டத்துக்கு எதிரான உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம் இதனால் முதல்வரே துணை வேந்தர்களை நியமிக்கும் சட்டத்துக்கு தடை நீங்கியது.