செய்திகள்

அ.தி.மு.க. ஒரே அணியாக செயல்பட வேண்டும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

Published On 2017-08-12 10:27 GMT   |   Update On 2017-08-12 10:27 GMT
திருமங்கலம் தொகுதி கள்ளிக்குடியில் சிறப்பு அம்மா திட்ட முகாம் நடந்தது. இதில் பேசிய அமைச்சர் உதயகுமார் அ.தி.மு.க. ஒரே அணியாக செயல்பட வேண்டும் என்று கூறினார்.

பேரையூர்:

திருமங்கலம் தொகுதி கள்ளிக்குடியில் சிறப்பு அம்மா திட்ட முகாம் நடந்தது. இதில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தமிழக அரசின் புகைப்பட கண்காட்சியினை திறந்து வைத்தார்.

மேலும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மரக்கன்றுகள் நடுவிழாவில் கலந்து கொண்டு மரங்களை நட்டார். பின்னர் நடைபெற்ற நலதிட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதியோர் உதவிதொகை, ஆதரவற்ற பெண்களுக்கு தையல் எந்திரம், விவசாயிகளுக்கு மரக்கன்று, உரங்கள் உள்ளிட்ட பல்வேறு நல திட்ட உதவிகளை 770 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 9 லட்சம் மதிப்பீட்டில் நலதிட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கலெக்டர் வீரராகவராவ் வழங்கினர்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் உதயகுமார் கூறியதாவது:-

அம்மா திட்டம் புதிய வடிவில் தொடங்குவதற்காக கள்ளிக்குடியில் தமிழகத்தில் முன்னோடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அம்மா திட்டத்தில் மட்டும் 60 லட்சம் பயனாளிகள் மனு கொடுத்து அதற்கு தீர்வு காணப்பட்டது.1 5 வகையான சான்றுகளையும் தமிழக அரசு ஆன்லைன் மூலமாக தருகிறோம்.

குடியரசு தலைவர் தேர்தலில் புரட்சி தலைவி அம்மா அணி என ஓரணியிலேயே இருந்து வாக்களித்தோம். அதேபோல துணை குடியரசு தலைவர் தேர்தலிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓரணியிலிருந்து வாக்களித்துள்ளனர். வரும் காலங்களிலும் ஒரே அணியிலிருந்து செயல்பட வேண்டும் என்பது மக்களின் விருப்பம், தொண்டர்களின் விருப்பம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயராமன், துணை மாவட்ட செயலாளர் அய்யப்பன், முன்னாள் யூனியன் சேர்மன் தமிழழகன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், மகாலிங்கம், ராமசாமி, முன்னாள் தொகுதி செயலாளர் ஆண்டிச்சாமி, நகர செயலாளர் விஜயன், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்செல்வம், இலக்கிய அணி செயலாளர் திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News