search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்மா திட்ட முகாம்"

    தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 18ந் தேதி அம்மா திட்ட முகாம்கள் நடைபெற உள்ளதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;-

    தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் உள்ள அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு அம்மா திட்ட முகாமை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 18ந் தேதி (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம்கள் நடக்க உள்ளன.

    தூத்துக்குடி தாலுகாதெற்குசிலுக்கன்பட்டி, செந்திலாம்பண்ணை, ஸ்ரீவைகுண்டம் தாலுகாதெய்வச் செயல்புரம், செட்டிமல்லன்பட்டி, திருச்செந்தூர் தாலுகா அம்மன்புரம், சாத்தான்குளம் தாலுகா புதுக்குளம், கோவில் பட்டி தாலுகா வடக்குப்பட்டி, விளாத்திகுளம் தாலுகாஎம்.சுப்பிரமணியபுரம், மாதராஜபுரம், எட்டயபுரம் தாலுகாமஞ்சநாயக்கன்பட்டி, ஓட்டப்பிடாரம் தாலுகாகொடியன்குளம், கயத்தாறு தாலுகாஓணமாக்குளம், ஏரல் தாலுகாஇருவப்பபுரம் ஆகிய பகுதிகளில் அந்தந்த தாசில்தார்கள் தலைமையில் முகாம்கள் நடக்க உள்ளது.

    இந்த முகாம்களில் மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்புஇறப்பு சான்றிதழ்கள், சாதிச்சான்றுகள், வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் கொடுக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    அரியலூரில் அம்மா திட்ட முகாம் நாளை 4-ந் தேதி அன்று வட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் 6-வது கட்டமாக அரியலூர் மற்றும் உடையார்பாளையம் வட்டங்களில், வட்டத்திற்கு இரண்டு கிராமத்திலும் மற்றும் ஆண்டிமடம் வட்டத்தில் ஒரு கிராமத்திலும் அம்மா திட்ட முகாம் நாளை 4-ந் தேதி அன்று வட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

    அரியலூர் வட்டத்தில் ஏலாக்குறிச்சி, சன்னாவூர் (தெ) ஆகிய கிராமங்களிலும், உடையார்பாளையம் வட்டத்தில்    சூரியமணல், வாழைக்குறிச்சி ஆகியகிராமங்களிலும், ஆண்டி மடம் வட்டத்தில் அய்யூர் கிராமத்திலும் நடைபெறுகிறது.
    இம்முகாமில் வருவாய்த்துறையின் சமூகப்பாதுகாப்புத் திட்டங்கள், இலவச வீட்டுமனைப்பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதிசான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும். இத்தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். #tamilnews
    அரியலூர் மாவட்டத்தில் உடையார் பாளையம், செந்துறை, ஆண்டிமடம் உள்ளிட்ட வட்டங்களில் உள்ள கிராமங்களில் நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் ஆறாவது கட்டமாக அரியலூர் மற்றும் உடையார்பாளையம் வட்டங்களில், வட்டத்திற்கு இரண்டு கிராமத்திலும், செந்துறை மற்றும் ஆண்டிமடம் வட்டத்தில் ஒரு கிராமத்திலும் அம்மா திட்ட முகாம் நாளை 09.11.2018 அன்று வட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

    அரியலூர் வட்டத்தில் பெரிய திருக்கோணம், மேலப்பழூர் ஆகிய கிராமங்களிலும், உடையார்பாளையம் வட்டத்தில் கோடங்குடி (தெ), காட்டகரம்(தெ) ஆகிய கிராமங்களிலும், செந்துறை வட்டத்தில் செந்துறையிலும், ஆண்டிமடம் வட்டத்தில் இடையக்குறிச்சி கிராமத்திலும் நடைபெறுகிறது.

    இம்முகாமில் வருவாய்த் துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும். எனவே   பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி  கொள்ளுமாறு  மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
    தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்களை கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.
    தூத்துக்குடி:

    அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசு சார்பில் அம்மா திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அந்தந்த தாசில்தார் தலைமையில் நடத்தப்படுகிறது. இந்த வாரத்துக்கான முகாம் நாளை (9-ந் தேதி) நடக்கிறது.

    இந்த முகாம் தூத்துக்குடி தாலுகா மீளவிட்டான் பகுதி1, ஸ்ரீவைகுண்டம் தாலுகா ஆழ்வார்கற்குளம், திருச்செந்தூர் தாலுகா மணப்பாடு, சாத்தான்குளம் தாலுகா பள்ளக்குறிச்சி, கோவில்பட்டி தாலுகா பிச்சைத்தலைவன்பட்டி, விளாத்திகுளம் தாலுகா நடுகாட்டூர், எட்டயபுரம் தாலுகா சிந்தலக்கரை, ஓட்டப்பிடாரம் தாலுகா மேலஅரசடி, கயத்தாறு தாலுகா காலாங்கரைபட்டி, ஏரல் தாலுகா சிவகளையில் நடக்கிறது.

    இந்த முகாமில் மக்களின் குறைகளை தீர்க்கும் வண்ணம் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளன.

    எனவே பொதுமக்கள் இந்த முகாம்களில் மனுக்களை அளித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இந்த தகவலை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
    தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அம்மா திட்டத்தின் கீழ் மக்களின் குறைகளை தீர்க்கும் வண்ணம் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு- இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து தீர்வு காணப்படும்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி வட்டம் கோரம்பள்ளம் பகுதி - 2 , ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு, கோவில்பத்து, திருச்செந்தூர் வட்டம் சேர்ந்த மங்கலம், சாத்தான்குளம் வட்டம் கருங்கடல், கோவில்பட்டி வட்டம் தோணுகால்,

    விளாத்திகுளம் வட்டம் சங்கரலிங்கபுரம், எட்டயபுரம் வட்டம் ராஜாப்பட்டி, ஓட்டப்பிடாரம் வட்டம் ஜெகவீரபாண்டியாபுரம், கயத்தார் வட்டம் காமநாயக்கன்பட்டி, ஏரல் வட்டம் கீழ்பிடாகை கஸ்பா கிராமங்களில் நாளை (7-ந் தேதி) வட்டாட்சியர்கள் தலைமையில் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளது.

    முகாம்களில் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக பொது மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளது. எனவே இந்த முகாம்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 24-ந் தேதி நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்களை கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு சார்பில் அம்மா திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 24-ந் தேதி நாளை அம்மா திட்ட முகாம் நடக்க உள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி தாலுகாவில் பேரூரணி கிராமத்திலும், திருச்செந்தூர் தாலுகாவில் மூலக்கரை கிராமத்திலும், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் விட்டிலாபுரம், கோவில்பத்து கிராமத்திலும், சாத்தான் குளம் தாலுகாவில் மீரான் குளம் பகுதி 2 கிராமத்திலும், கோவில்பட்டி தாலுகாவில் ஜமீன்தேவர்குளம் கிராமத்திலும், விளாத்தி குளம் தாலுகாவில் சின்னூர், மாவிலோடை கிராமங்களிலும், எட்டயபுரம் தாலுகாவில் ஈராச்சி கிராமத்திலும், ஓட்டப்பிடாரம் தாலுகாவில் கீழமுடிமண் கிராமத்திலும், கயத்தாறு தாலுகாவில் தொட்டன்பட்டி கிராமத்திலும், ஏரல் தாலுகாவில் இருவப்ப புரம் பகுதி1 கிராமத்திலும் அந்தந்த தாசில்தார்கள் தலைமையில் அம்மா திட்ட முகாம் நடக்க உள்ளது.

    இந்த முகாமில் மக்கள் குறைகளை தீர்க்கும் வகையில் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், சாதிச் சான்றுகள் மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த முகாம்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக் களை கொடுக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    நெல்லை மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்களை கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று ஒரு தாலுகாவிற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்த முகாமில் பொதுமக்கள் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை மற்றும் நிறுத்தம் செய்யப்பட்ட முதியோர் உதவித்தொகை மறுபரிசீலனை விண்ணப்பம் உள்பட சமூக பாதுகாப்பு திட்டங்கள் குறித்தும், உழவர் பாதுகாப்பு அட்டை குறித்தும், நிலத்தாவாக்கள், சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் மனு கொடுக்கலாம். இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    நெல்லை மாவட்டத்தில் நாளை (10-ந்தேதி) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அம்மா திட்ட முகாம் நடக்கிறது. அதன்படி, நெல்லை தாலுகா பழவூர், பாளையங்கோட்டை தாலுகா முத்தூர், சங்கரன்கோவில் தாலுகா வாழவந்தாபுரம், தென்காசி தாலுகா பாட்டாக்குறிச்சி, செங்கோட்டை தாலுகா குன்னக்குடி, சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூர், வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல், ஆலங்குளம் தாலுகா கடங்கநேரி, அம்பை தாலுகா ஆலடியூர் பகுதி1, நாங்குநேரி தாலுகா கீழகருவேலங்குளம், ராதாபுரம் தாலுகா ராதாபுரம், கடையநல்லூர் தாலுகா சிந்தாமணி, திருவேங்கடம் தாலுகா சத்திரங்கொண்டான், மானூர் தாலுகா தென்கலம், சேரன்மாதேவி தாலுகா வடக்கு கபாலிபாறை ஆகிய கிராமங்களில் நடக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    ஆனைகட்டி மலை கிராமத்தில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் 128 பேருக்கு ஜாதி சான்றிதழை ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. வழங்கினார்.
    கவுண்டம்பாளையம்:

    கோவை மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களான ஆனைக்கட்டி மலை கிராமத்தில் உள்ள ஜம்புகண்டி கே.கே.நகரில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இதற்கு கோவை வடக்கு சப்-கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். வடக்கு தாசில்தார் சிவகுமார் வரவேற்றார். அம்மா திட்ட முகாமில் ஆனைக்கட்டி, பெரிய ஜம்புகண்டி, சின்ன ஜம்புகண்டி, ஆலமரமேடு, கொண்டனூர், கொண்டனூர்புதூர், தூமனூர், சேம்புகரை உள்ளிட்ட ஆதிவாசி கிராங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட ஆதிவாசி மக்கள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக கவுண்டம்பாளையம் தொகுதி வி.சி.ஆறுக்குட்டி எம்.எல்.ஏ., கலந்துகொண்டு 128 பேருக்கு இருளர் ஜாதி சான்றிதழ், 18 பேருக்கு முதியோர் உதவித்தொகை சான்றிதழ் வழங்கினார். மற்றவர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    முகாமில் வருவாய்த்துறை, சமூக நலத்துறை, ஆரம்ப சுகாதார துறை, கால்நடை பராமரிப்பு துறை, வனத்துறை, காவல்துறை சார்பாக அதிகாரிகள் கலந்து கொண்டு ஆதிவாசி மக்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்தனர். இதில் ஓ.ஏ.பி தாசில்தார் சகுந்தலாமணி, பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய முன்னாள் சேர்மன் கோவனூர் துரைசாமி, கிராம நிர்வாக அதிகாரி ஆனந்தன், அதிமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×