search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anaikatti"

    • மானின் தலை, கொம்பு மற்றும் மானைப் பிடிக்க பயன்படுத்தப்பட்ட சுருக்குவலை மீட்டனர்.
    • வன ஆர்வலர்கள் வேதனை அடைந்து உள்ளனர்.

    கோவை :

    கோவை ஆனைகட்டி பகுதியில் யானை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் ஏராளமாக உள்ளன. இந்நிலையில் துவைப்பதி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் மான் இறைச்சி விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    அதனடிப்படையில் வனத்துறையினர் அந்த வீட்டில் சோதனை செய்தபோது, மான் இறைச்சி சமைக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டறிந்தனர். அருகில் இருந்த மற்றொரு வீட்டில் சோதனை செய்தபோது, முருகன் (வயது 49) என்பவர் துரைசாமி (65) என்பவருக்கு மான் இறைச்சியை விற்பனை செய்தது தெரியவந்தது. விசார ணையில், அவர்கள் இருவரும் சேர்ந்து ஆனைகட்டியைச் சேர்ந்த கருப்பராயன் (39), ஜெயக்குமார் (31), ஜெகநாதன்(39) ஆகியோருக்கு மான் இறைச்சியை விற்பனை செய்ததும் தெரியவந்தது.

    இந்நிலையில், முருகனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கொடுத்த தகவலின்படி துவைப்பதியில் இருந்த ஒரு தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மானின் தலை, கொம்பு மற்றும் மானைப் பிடிக்க பயன்படுத்தப்பட்ட சுருக்குவலை, கொடுவாள் ஆகியவற்றை மீட்டனர்.

    இதையடுத்து, மானைக் கொன்ற முருகனுக்கு ரூ.25 ஆயிரமும், மற்றவர்களுக்கு தலா ரூ.20 ஆயிரமும் அபராதம் விதித்து வசூலித்தனர். மேலும் மூங்கில்பள்ளம் அருகே உள்ள ஒரு வீட்டில் மான் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் அங்குசென்ற வனத்துறையி னர் ரங்கசாமி (65) என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் தனது வளர்ப்பு நாயை விட்டு மான்களை கொன்று இறைச்சிகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    அவர் அதே பகுதியைச் சேர்ந்த பாபு (40), சுப்பிரமணி (45), ராமு (30), சிவதாஸ் (37), கந்தசாமி (40) ஆகியோருக்கு மான் இறைச்சியை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து மான் இறைச்சிகளை மீட்டனர்.அவர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

    ஆனைகட்டி பகுதியில் தொடர்ந்து மான்கள் வேட்டையாடுவது தொடர் கதையாகி வருகிறது. இதனால் வன ஆர்வலர்கள் வேதனை அடைந்து உள்ளனர். இதைத்தடுத்து நிறுத்த வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வன ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ஆனைகட்டி மலை கிராமத்தில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் 128 பேருக்கு ஜாதி சான்றிதழை ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. வழங்கினார்.
    கவுண்டம்பாளையம்:

    கோவை மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களான ஆனைக்கட்டி மலை கிராமத்தில் உள்ள ஜம்புகண்டி கே.கே.நகரில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இதற்கு கோவை வடக்கு சப்-கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். வடக்கு தாசில்தார் சிவகுமார் வரவேற்றார். அம்மா திட்ட முகாமில் ஆனைக்கட்டி, பெரிய ஜம்புகண்டி, சின்ன ஜம்புகண்டி, ஆலமரமேடு, கொண்டனூர், கொண்டனூர்புதூர், தூமனூர், சேம்புகரை உள்ளிட்ட ஆதிவாசி கிராங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட ஆதிவாசி மக்கள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக கவுண்டம்பாளையம் தொகுதி வி.சி.ஆறுக்குட்டி எம்.எல்.ஏ., கலந்துகொண்டு 128 பேருக்கு இருளர் ஜாதி சான்றிதழ், 18 பேருக்கு முதியோர் உதவித்தொகை சான்றிதழ் வழங்கினார். மற்றவர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    முகாமில் வருவாய்த்துறை, சமூக நலத்துறை, ஆரம்ப சுகாதார துறை, கால்நடை பராமரிப்பு துறை, வனத்துறை, காவல்துறை சார்பாக அதிகாரிகள் கலந்து கொண்டு ஆதிவாசி மக்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்தனர். இதில் ஓ.ஏ.பி தாசில்தார் சகுந்தலாமணி, பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய முன்னாள் சேர்மன் கோவனூர் துரைசாமி, கிராம நிர்வாக அதிகாரி ஆனந்தன், அதிமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×