அரக்கோணம் அருகே குழந்தையுடன் தாய் தற்கொலை
அரக்கோணம் அருகே வரதட்சணை கொடுமையால் குழந்தையுடன் தாய் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கும்பகோணம் அருகே ரூ.2 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள்-கார் பறிமுதல்
கும்பகோணம் அருகே ரூ.2 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுற்றுசுவர் இடிந்து 17 பேர் பலி எதிரொலி - அபாயமாக உள்ள கட்டிடங்களை அகற்றாவிட்டால் குற்றவியல் நடவடிக்கை
அபாயகரமாக உள்ள கட்டிடங்களை 15 நாட்களுக்குள் இடித்து அகற்றாவிட்டால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவையில் மூளைச்சாவடைந்த பெண் - 7 பேருக்கு மறுவாழ்வு அளித்தார்
கோவையில் ரத்த அழுத்தம் அதிகமாகி மூளைச்சாவடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானமாக வழங்கப்பட்டது.
கள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரம் - தொழிலாளியை கொன்று 600 அடி பள்ளத்தில் வீசிய கும்பல்
கொடைக்கானல் அருகே கள்ளக்காதலை கண்டித்த தொழிலாளியை கொன்று 600 அடி பள்ளத்தில் வீசிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
50 மாநகர புதிய பஸ்களில் பஸ்நிறுத்தம் அறிவிப்பு - பயணிகள் வசதிக்காக அறிமுகம்
சென்னை மாநகர புதிய பஸ்களில் அடுத்து வரும் பஸ் நிறுத்தம் குறித்த தகவல் அறிவிக்கும் வசதி பயணிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நாகர்கோவில் மார்க்கெட்டுகளில் வெங்காயம் பதுக்கலா? போலீசார் அதிரடி சோதனை
நாகர்கோவில் மார்க்கெட்டுகளில் வெங்காயம் பதுக்கப்பட்டதாக வந்த தகவலையடுத்து போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருமணமான 4-வது நாளில் கணவருக்கு அதிர்ச்சி கொடுத்த புதுப்பெண்
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் திருமணமான 4-வது நாளில் புதுப்பெண் செய்த செயலால் கணவர் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.
திருச்சி அருகே மாயமான சிறுவன் அடித்துக்கொலை- நண்பர்கள் வெறிச்செயல்
திருச்சி அருகே கடந்த சில நாட்களாக மாயமான சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்
எகிப்து வெங்காயம் கருமை நிறத்தில் காணப்படுவதால் இந்த வெங்காயத்தை வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
வெங்காயம் பதுக்கலை தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் சோதனை
கோவை மண்டலத்தில் வெங்காயம் பதுக்கலை தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
வாணியம்பாடி அருகே ஓடும் பஸ்சில் இளம்பெண்ணுக்கு தாலிகட்ட முயற்சி
வாணியம்பாடி அருகே இன்று காலை ஓடும் பஸ்சில் இளம்பெண்ணுக்கு தாலிகட்ட முயன்ற வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே 7 மாத பெண் குழந்தை குப்பை தொட்டியில் வீச்சு
ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே இன்று அதிகாலை குப்பை தொட்டியில் வீசப்பட்ட 7 மாத பெண் குழந்தை மீட்கப்பட்டது.
திருவள்ளூர் அருகே 10 டன் வெங்காயம் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்தது
திருவள்ளூர் அருகே 10 டன் வெங்காயம் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சிதறிய வெங்காயத்தை பொது மக்கள் எடுக்காமல் இருக்க போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
பி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்
பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர்கள் இனி டெட் எனும் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி ஆசிரியர் ஆகலாம் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
வேலூர் அண்ணாசாலையில் திருவண்ணாமலை பஸ்சில் திடீர் தீ
வேலூர் அண்ணா சாலையில் இன்று காலை திருவண்ணாமலை பஸ்சில் திடீரென தீப்பிடித்ததால் பயணிகள் அலறியடித்து ஓடினர்.
தமிழக மக்களின் ஆதரவும், அன்பும் ரஜினிக்கு எப்போதும் உண்டு- சகோதரர் சத்யநாராயண ராவ் பேட்டி
தமிழக மக்களின் ஆதரவும், அன்பும் ரஜினிக்கு எப்போதும் உண்டு என்று ஓசூரில் அவரது சகோதரர் சத்யநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் வெங்காய குடோன்களில் போலீசார் சோதனை
குடோன்களில் வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததை அடுத்து போலீசார் அப்பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக புகார் - மார்க்கெட் குடோன்களில் போலீசார் சோதனை
திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்ட மார்க்கெட் குடோன்களில் வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதையடுத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேப்பூர் அருகே இன்று காலை விபத்து- என்.எல்.சி. அதிகாரி பலி
வேப்பூர் அருகே இன்று காலை விபத்தில் என்.எல்.சி. அதிகாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை சிறையில் இருந்து நிர்மலாதேவி இன்று ஜாமீனில் விடுதலை
நிர்மலா தேவிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து இன்று காலை மதுரை மத்திய சிறையில் இருந்து விடுதலை ஆனார்.