செய்திகள்

பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்: நடந்து விட்டதால் திருப்தி- டெல்லி கேப்டன்

Published On 2019-04-29 11:45 GMT   |   Update On 2019-04-29 11:45 GMT
ஐபிஎல் தொடர் தொடங்கும்போது பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்று விரும்பினோம். தற்போது அது நடந்து விட்டதால் திருப்தி என டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் தெரிவித்துள்ளார். #IPL2019
ஐபிஎல் தொடரில் கடந்த 2012-ம் ஆண்டுக்குப் பிறகு டெல்லி அணி பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது கிடையாது. அந்த அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததால், புள்ளிகள் பட்டியலில் பின்தங்கியே இருந்தது.

இந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 8-ல் வெற்றி பெற்று 2-வது அணியாக பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 6 வருடம் கழித்து அந்த அணி பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.



நேற்று ஆர்சிபி-க்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று பிளே-ஆப்ஸ் சுற்றை உறுதி செய்தது. பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது குறித்து அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் ‘‘ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன் நாங்கள் பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்று விரும்பினோம். தற்போது அது நடந்துள்ளதால் மிகவும் திருப்தியாக உள்ளோம்.

பந்து வீச்சாளர்கள் அவர்களின் வேலைகளை சிறப்பாக செய்தது முக்கியமானது. அவர்களுக்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படுத்தவில்லை. அதேபோல் பேட்ஸ்மேன்களும் எந்தவிட இடர்பாடு இல்லாமல் அவர்களது ஆட்டத்தை வெளிப்படுத்தினர்’’ என்றார்.
Tags:    

Similar News