search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "delhi capitals"

    • 2016-ம் ஆண்டு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் அறிமுகம் ஆனார்.
    • 2018 சீசனில் 14 போட்டிகளில் 684 ரன்கள் குவித்தார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். இவர் கடந்த 2016-ம் ஆண்டு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் அறிமுகம் ஆனார். இன்று ராஜஸ்தான் ராயல்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற இருக்கிறது.

    இதில் ரிஷப் பண்ட் விளையாட இருக்கிறார். இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 100-வது போட்டியில் விளையாட இருக்கிறார். மேலும், டெல்லி அணிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் என்ற சாதனையையும் படைக்க உள்ளார்.

    ரிஷப் பண்ட் 99 போட்டிகளில் விளையாடி 2,856 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 34.40 ஆகும். ஸ்டிரைக் ரேட் 147.90 ஆகும். 99 இன்னிங்சில் 15 அரைசதம், ஒரு சதம் விளாசியுள்ளார். ஆட்டமிழக்காமல் 128 ரன்கள் அடித்தது அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

    டேவிட் வார்னர் டெல்லி அணிக்காக 2,433 ரன்கள் அடித்துள்ளார். சேவாக் 2,382 ரன்கள் அடித்துள்ளார்.

    2016-ல் 10 போட்டிகளில் 198 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். 2017-ல் 14 போட்டிகளில் 366 ரன்கள் அடித்துள்ளார். 2018 சீசன் அவருக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது. அதில் 14 போட்டிகளில் 684 ரன்கள் குவித்தார். சராசரி 52.62 ஆகும். ஸ்டிரைக் ரேட் 173.6 ஆகும்.

    • ரிஷப் பண்ட் உடற்தகுதி பெற்று விட்டதாக பிசிசிஐ கடந்த வாரம் அறிவித்திருந்தது.
    • டெல்லி அணியில் விளையாடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், கேப்டனாக நியமனம்.

    இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். 26 வயதான இவர் கார் விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப்பின் உயிர் பிழைத்து சுமார் 14 மாதங்களுக்குப் பின் போட்டி கிரிக்கெட்டுக்கு திரும்பியுள்ளார்.

    இந்திய கிரிக்கெட் போர்டின் தேசிய அகாடமியில், காயத்தில் இருந்து மீண்டு உடற்திறன் சார்ந்த பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். கடந்த வாரம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட தகுதி பெற்று விட்டதாக பிசிசிஐ தெரிவித்தது.

    இதனால் ரிஷப் பண்ட் ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடுவது உறுதியானது. இந்த நிலையில் 2024 ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவார் என அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ரிஷப் பண்ட் காயம் காரணமாக 2023 சீசன் முழுவதும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இது தொடர்பாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சேர்மனும், இணை-உரிமையாளருமான பார்த் ஜிண்டால் கூறுகையில் "ரிஷப் பண்ட்-ஐ எங்கள் அணியின் கேப்டனாக வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். புதிய ஆர்வத்தொடு, உற்சாகத்துடன் 2024 சீசனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர் எங்கள் அணியுடன் வருவதை பார்க்க காத்திருக்க முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.

    • லீக் சுற்று முடிவில் முதலிடம் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
    • மகளிர் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் டெல்லி அணியிடம் பெங்களூரு தோல்வியை சந்தித்துள்ளது.

    புதுடெல்லி:

    இரண்டாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கியது. லீக் சுற்று முடிவில் முதலிடம் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    3-வது இடம் பெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி எலிமினேட்டர் சுற்றில், 2-வது இடம் பெற்ற நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்சை விரட்டி முதல்முறையாக இறுதிப்போட்டியை எட்டியது.

    இந்நிலையில், கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    மகளிர் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் டெல்லி அணியிடம் பெங்களூரு தோல்வியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இறுதி போட்டிக்கு வந்ததற்காக 2 அணிகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கிறேன்.
    • நீங்கள் விளையாடும் ஒவ்வொரு பந்தையும் நான் பார்த்துக் கொண்டிருப்பேன்.

    மகளிர் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. மகளிர் ஐபிஎல் தொடரில் இம்முறை புதிய சாம்பியனாக சாதனை படைக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்த இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்லுமாறு மகளிர் ஆர்சிபி அணிக்கு ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இன்று நடைபெறும் மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் 2 பவரான அணிகள் மோதுகின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணியும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.

    அதைப் பார்ப்பதற்காக என்னால் காத்திருக்க முடியவில்லை. இறுதி போட்டிக்கு வந்ததற்காக 2 அணிகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கிறேன். தனி நபராகவும் அணியாகவும் சேர்ந்து இத்தொடரில் அசத்திய இந்த இரண்டு அணிகளும் இறுதிபோட்டிக்கு வருவதற்கு தகுதியானவர்கள்.

    ஆர்சிபி அணிக்காக ஒரு சிறப்பு ஆதரவு தருகிறேன். உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். கோப்பையை வீட்டுக்கு கொண்டு வந்து இந்த மாதத்தின் பிற்பகுதியில் துவங்கும் ஐபிஎல் தொடரில் ஆடவர் ஆர்சிபி அணிக்கு உத்வேகத்தை கொடுங்கள்.

    வாழ்த்துக்கள் நண்பர்களே. நீங்கள் விளையாடும் ஒவ்வொரு பந்தையும் நான் பார்த்துக் கொண்டிருப்பேன்.

    என்று டிவில்லியர்ஸ் கூறினார்.

    முன்னதாக மகளிர் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் டெல்லி அணியிடம் பெங்களூரு தோல்வியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கோப்பையை வசப்படுத்த இரு அணிகளும் வரிந்து கட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
    • இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 6 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும்.

    புதுடெல்லி:

    இரண்டாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கியது. லீக் சுற்று முடிவில் முதலிடம் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    3-வது இடம் பெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி எலிமினேட்டர் சுற்றில், 2-வது இடம் பெற்ற நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்சை விரட்டி முதல்முறையாக இறுதிப்போட்டியை எட்டியது.

    இந்நிலையில், கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.

    மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி லீக் சுற்றில் 8 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 2 தோல்வியுடன் 12 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது.

    அந்த அணியில் பேட்டிங்கில் மெக் லானிங் (4 அரைசதம் உள்பட 308 ரன்கள்), ஷபாலி வர்மா (265 ரன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (235 ரன்), அலிஸ் கேப்சியும் (230 ரன்), பந்து வீச்சில் ஆல்-ரவுண்டர் மரிஜானா காப் (11 விக்கெட்), சுழற்பந்து வீச்சாளர்கள் ஜெஸ் ஜோசசென் (11 விக்கெட்), ராதா யாதவ் (10 விக்கெட்), வேகப்பந்து வீச்சாளர்கள் அருந்ததி ரெட்டி, ஷிகா பாண்டேவும் (தலா 8 விக்கெட்) அசத்தி வருகிறார்கள்.

    ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணி 8 புள்ளிகளுடன் (4 வெற்றி, 4 தோல்வி) 3-வது இடம் பிடித்தது. எலிமினேட்டர் சுற்றில் 5 ரன் வித்தியாத்தில் மும்பைக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    பெங்களூரு அணியில் பேட்டிங்கில் நடப்பு தொடரில் அதிக ரன் குவித்தவரான ஆல்-ரவுண்டர் எலிஸ் பெர்ரி (2 அரைசதத்துடன் 312 ரன்கள்) ஜொலித்து வருகிறார். கேப்டன் மந்தனா (269 ரன்), ரிச்சா கோஷ் (240 ரன்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் ஆஷா சோபனா (10 விக்கெட்), ஸ்ரேயங்கா பட்டீல், சோபி மோலினெக்ஸ் (தலா 9 விக்கெட்) வலுசேர்க்கிறார்கள்.

    கோப்பையை வசப்படுத்த இரு அணிகளும் வரிந்து கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.6 கோடி பரிசாக வழங்கப்படும். 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.3 கோடி பரிசாக கிடைக்கும்.

    • முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியால் 126 ரன்களே அடிக்க முடிந்தது.
    • டெல்லி அணியின் ஷபாலி வர்மா அபாரமாக விளையாடி 37 பந்தில் ஏழு பவுண்டரி, 5 சிக்சருடன் 71 ரன்கள் விளாசினார்.

    பெண்கள் பிரீமியர் லீக் கடைசி லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயன்ட்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் வீராங்கனைகளின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் மட்டுமே அடித்தது. முதல் மூன்று வீராங்கனைகளான வோல்வார்த் (7), மூனி (0), ஹேமலதா (4) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.

    6-வது பேட்டராக களம் இறங்கிய பாரதி ஃபுல்மாலி 36 பந்தில் 42 ரன்கள் அடித்தார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சார்பில் மரிஜான்னே காப், ஷிகா பாண்டே, மினு மானி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    பின்னர் 127 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீராங்கனைகள் களம் இறங்கினர். அந்த அணியின் தொடக்க வீராங்கனை மெக் லேனிங் 18 பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அலிஸ் கேப்சி ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

    ஆனால் மற்றொரு தொடக்க வீராங்கனையாக ஷபாலி வர்மா அபாரமாக விளையாடி 37 பந்தில் ஏழு பவுண்டரி, 5 சிக்சருடன் 71 ரன்கள் விளாசினார். ரோட்ரிக்ஸ் 28 பந்தில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் 13.1 ஓவரில் இலக்கை எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    லீக் போட்டிகள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

    மும்பை இந்தியன்ஸ் 5 வெற்றிகளுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது. ஆர்சிபி 3-வது இடத்தை பிடித்தது. முதல் மூன்று இடங்களையும் பிடித்த இந்த மூன்று அணிகளும பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறின.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நாளை நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ்- ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தும்.

    • ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வரும் மார்ச் 22-ம் தேதி தொடங்கவுள்ளது.
    • 2023 ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஹாரி ப்ரூக்கை 13.25 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

    ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வரும் மார்ச் 22-ம் தேதி தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடருக்கான முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    இந்நிலையில், ஐபிஎல் தொடரில் இருந்து இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் தனிப்பட்ட காரணங்களுக்காக டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    2023 ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஹாரி ப்ரூக்கை 13.25 கோடி ரூபாய்க்கு வாங்கியது. ஆனால் அந்த தொடரில் அவர் வெறும் 190 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனை அடுத்து ஹாரி ப்ரூக்கை அந்த அணி கழட்டி விட்டது. பின்னர் 2024 தொடரில் ரூ.4 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி ஏலம் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • டெல்லி அணியின் ரோட்ரிக்ஸ் 36 பந்தில் 58 ரன்களும், அலிஸ் கேப்சி 32 பந்தில் 48 ரன்களும் விளாசினர்.
    • ரிச்சா கோஷ் 51 ரன்கள் அடித்தும் கடைசி பந்தில் ரன் எடுக்க முடியாததால் ஆர்சிபி தோல்வியை சந்தித்தது.

    பெண்கள் பிரீமியர் லீக்கில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- ஆர்சிபி அணிகள் மோதின. முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது.

    ரோட்ரிக்ஸ் 36 பந்தில் 58 ரன்களும், அலிஸ் கேப்சி 32 பந்தில் 48 ரன்களும் விளாசினர். ஆர்சிபி அணி சார்பில் ஷ்ரேயங்கா பாட்டில் 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் சாய்த்தார்.

    பின்னர் 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி அணி வீராங்கனைகள் களம் இறங்கினர். தொடங்க வீராங்கனை ஸ்மிரி மந்தனா 5 ரன்னிலும், ஷோபனி மோலினக்ஸ் 33 ரன்னிலும் வெளியேறினர்.

    எலிஸ் பெர்ரி அதிரடியாக விளையாடி 32 பந்தில் 49 ரன்கள் அடித்தார். விக்கெட் கீபப்ர் ரிச்சா கோஷ் அதிரடியாக விளையாடினார். இதனால் அணி வெற்றியை நெருங்கிச் சென்றது.

    கடைசி ஓவரில் ஆர்சிபி அணிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் ரிச்சா கோஷ் சிக்ஸ் அடித்தார். 2-வது பந்தில் ரன்ஏதும் வரவில்லை. 3-வது பந்தில் 2 ரன்களுக்கு ஓடும்போது எதிர் வீராங்கனை திஷா கசத் ரன்அவுட் ஆனார். இதனால் கடைசி 3 பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்டது. 4-வது பந்தில் 2 ரன்கள் அடித்தார்.

    ரோட்ரிக்ஸ்-கேப்சி

    இதனால் கடைசி 2 பந்தில் 8 ரன்கள் தேவைப்பட்டது. 5-வது பந்தை ரிச்சா கோஷ் சிக்சருக்கு பறக்க விட்டார். இதனா் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது.

    ரிச்சா அந்த பந்தை தூக்கி அடிக்க முயன்றார். ஆனால் பவுன்சராக வீசப்பட்ட பந்து சரியாக பேட்டில் படவில்லை. பீல்டர் கைக்குள் பந்து சென்றாலும் ரிச்சா கோஷ் ஒரு ரன் எடுத்து போட்டியை "டை"யில் முடிக்க முயற்சித்தார். ஆனால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீராங்கனைகள் சிறப்பாக பீல்டிங் செய்து ரன்அவுட் ஆக்கினார்கள். இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

    ரிச்சா கோஷ் 29 பந்தில் 51 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் அணியை வெற்றி பெற வைக்க முடியாத கவலையுடன் வெளியேறினார். இந்த வெற்றியின் மூலம் ஏழு போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

    • டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரரான ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்பட உள்ளார்.
    • ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்யமாட்டார் என்று டெல்லி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணி விக்கெட் கீப்பரும், அதிரடி பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட், கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார்.

    இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர் காயத்தில் இருந்து குணமடைந்தார். அதன்பின் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். தற்போது முழுமையாக குணம் அடைந்துள்ள ரிஷப் பண்ட் கிரிக்கெட் களத்துக்கு திரும்ப தயாராக உள்ளார்.

    இம்மாதம் தொடங்க உள்ள ஐ.பி.எல். போட்டியில் அவர் விளையாட உள்ளார். டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரரான ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்பட உள்ளார். இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்யமாட்டார் என்று டெல்லி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மார்ச் 22-ம் தேதி ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சிறுவர்களுடன் கோலி குண்டு விளையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. 

    • ரிஷப் பண்ட் இந்தாண்டு நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • இந்த ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் மட்டுமே ரிஷப் பண்ட் கவனம் செலுத்துவார்

    கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சாலை விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் இந்தாண்டு நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவார் என்றும். இந்த ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் மட்டுமே ரிஷப் பண்ட் கவனம் செலுத்துவார் என்றும், விக்கெட் கீப்பிங் செய்வதற்கு வேறு ஒரு வீரருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

    • 17-வது ஐ.பி.எல். டி20 போட்டி போட்டி மார்ச் 22-ந்தேதி முதல் மே 26-ந்தேதி வரை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
    • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

    ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆண்டுதோறும் இந்தப் போட்டி மார்ச் முதல் மே மாதம் வரை நடத்தப்படுகிறது.

    17-வது ஐ.பி.எல். டி20 போட்டி போட்டி மார்ச் 22-ந்தேதி முதல் மே 26-ந்தேதி வரை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பாராளுமன்ற தேர்தல் நடக்கும் தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் இருப்பதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

    இந்த நிலையில் இந்த ஐபிஎல் சீசனில் ரிஷப் பண்ட் விளையாடுவார் என டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த ஐபிஎல் சீசனில் உறுதியாக விளையாடுவேன் என ரிஷப் பண்ட் கூறினார். ஆனால் அவரால் தொடர் முழுவதும் கீப்பிங் செய்ய முடியுமா? அணியை வழிநடந்துவரா என்பது சந்தேகம்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மகளிர் ஐ.பி.எல். எனப்படும் பெண்கள் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் ஆனது.
    • ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் கோப்பை வென்றது.

    மும்பை:

    மகளிர் ஐ.பி.எல். எனப்படும் பெண்கள் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் ஆனது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன.

    முதலாவது மகளிர் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் கோப்பையை வென்றது.

    இந்நிலையில், இந்த ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் வரும் பிப்ரவரி 23-ம் தேதி தொடங்க உள்ளதாகவும், இந்த முறை தொடர் பெங்களூரு, டெல்லியில் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


     பிப்ரவரி 23-ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த சீசனைப் போல இந்த சீசனிலும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 2-வது மற்றும் 3-வது இடம் பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் ஆட்டத்தில் மோதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மகளிர் ஐ.பி.எல். தொடர் பிப்ரவரி 23-ம் தேதி முதல் மார்ச் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. மார்ச் 15-ம் தேதி எலிமினேட்டர் ஆட்டமும், மார்ச் 17-ம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறுகிறது. எலிமினேட்டர் மற்றும் இறுதிப்போட்டி ஆட்டங்கள் டெல்லியில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.

    ×