செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து பும்ரா, வாஷிங்டன் சுந்தருக்கு ஓய்வு

Published On 2018-06-30 21:21 GMT   |   Update On 2018-06-30 21:21 GMT
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு காயம் காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. #JaspritBumrah #WashingtonSundar #BCCI #INDvENG #ENGvIND

லண்டன்:

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி அந்நாட்டுடன் ஐந்து டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, அதற்கு முன்னதாக அயர்லாந்து அணியுடன் இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. அதில் இந்திய அணி 2-0 என எளிதாக வெற்றி பெற்றது.

இந்நிலையில், அந்த தொடரின்போது இந்திய அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

பும்ராவுக்கு அயர்லாந்து அணியுடனான இரண்டாவது போட்டியின்போது இடதுகை கட்டைவிரலில் காயம் ஏற்பட்டது. வாஷிங்டன் சுந்தருக்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு பதிலாக தீபக் சஹார், சர்துல் தாகூர் ஆகியோர் அணியில் சேர்க்கப்படலாம் என கூறப்படுகிறது. #JaspritBumrah #WashingtonSundar #BCCI #INDvENG #ENGvIND
Tags:    

Similar News