search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India"

    • இந்தியா இப்போது வளர்ந்து வரும் பொருளாதார ஜாம்பவான்களில் ஒன்றாக உள்ளது.
    • பல வருடங்களாக இலங்கை, விடுமுறையை கழிப்பதற்கு ஏற்ற இடமாக இருந்து வருகிறது என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

    கொழும்பு:

    நமது அண்டை நாடான இலங்கையில் கடந்த 2022-ம் ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

    இதனை சமாளிக்க இந்தியா இலங்கைக்கு கடனுதவிகளை வழங்கியதுடன், இலங்கையில் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்யும் எனவும் உறுதியளித்தது.

    அந்த வகையில் இந்தியாவின் பிரபல ஐடிசி குழுமம் இலங்கை தலைநகர் கொழும்புவில் பல ஆயிரம் கோடி செலவில் பிரமாண்டமான சொகுசு ஓட்டலை அமைத்துள்ளது. இந்த ஓட்டலை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நேற்று திறந்து வைத்தார். அதன் பின்னர் நடைபெற்ற விழாவில் ரணில் விக்ரமசிங்கே பேசியதாவது:-

    இந்தியா இப்போது வளர்ந்து வரும் பொருளாதார ஜாம்பவான்களில் ஒன்றாக உள்ளது.

    இதன் மூலம் இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது. குறிப்பாக சுற்றுலாத் துறையை முன்னிலைப்படுத்தி இந்தியாவுடன் அதிக பொருளாதார ஒத்துழைப்பை விரைவுபடுத்த விரும்புகிறோம். அதிக ஒத்துழைப்பால் இரு நாடுகளும் ஆதாயம் அடையும்.

    இந்த ஓட்டல் இலங்கைக்கு குறிப்பாக இந்தியாவில் இருந்து சுற்றுலாவை அதிகரிக்க உதவும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

    நமது பொருளாதாரத்தை எப்படி ஒருங்கிணைத்து நாம் நெருங்கி வருகிறோம் என்பது குறித்து கடந்த ஆண்டு நானும், பிரதமர் மோடியும் கையெழுத்திட்ட தொலைநோக்கு அறிக்கையின் ஒரு பகுதியாக இவை உள்ளன.

    பல வருடங்களாக இலங்கை, விடுமுறையை கழிப்பதற்கு ஏற்ற இடமாக இருந்து வருகிறது என்பதில் எனக்கு சந்தேகமில்லை. எதிர்காலத்தில் பெங்களூரு, சென்னை அல்லது ஐதராபாத்தில் உள்ள ஒருவர் இந்தியாவின் வடபகுதிக்கு செல்வதை விட விமானத்தில் ஏறி இங்கு (இலங்கை) வருவது எளிதாக இருக்கும்.

    இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே பேசினார். 

    • 2025-ம் ஆண்டுக்கான ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
    • 2024 முதல் 2031-ம் ஆண்டுவரையிலான கால கட்டத்தில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. போட்டி விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்தது.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒருநாள் போட்டி உலகக் கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 போட்டிகளை நடத்துகிறது.

    2024 முதல் 2031-ம் ஆண்டுவரையிலான கால கட்டத்தில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. போட்டி விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்தது. அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.சி.சி.யின் பெரிய போட்டியை அந்த நாடு நடத்துகிறது.

    கடைசியாக 1996-ம் ஆண்டு ஒருநாள் போட்டி உலகக் கோப்பையை இந்தியா, இலங்கையுடன் இணைந்து பாகிஸ்தான் நடத்தி இருந்தது.

    இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானுக்கு சென்று விளையாட இந்தியா மறுத்து வருகிறது. சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பையில் இந்தியா மோதிய ஆட்டங்கள் இலங்கையில் நடத்தப்பட்டன.

    மேலும் இந்திய அணி மோதும் போட்டி மட்டும் வேறு ஒரு இடங்களில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா அணி விளையாடும் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு தொடரில் விளையாட வேண்டும் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விருப்பம் தெரிவித்திருந்தார். பாகிஸ்தானுடன் இரு தரப்பு தொடரை மறந்து விடுங்கள் எனவும் பிசிசிஐ தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

    • நிஜ்ஜார் கொலை குறித்த செய்தி, எல்லை மீறிய செயல் என கூறி, எனது விசா நீட்டிக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்தது
    • ஜனநாயகத்தின் தாய் என பிரதமர் மோடி அழைக்கும், தேசிய தேர்தலின் முதல் நாள் ஓட்டுப்பதிவு குறித்த செய்திகளை சேகரிக்க முடியவில்லை

    ஏ.பி.சி. எனப்படும் ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனத்தை சேர்ந்த செய்தியாளர் அவனி தியாஸ், கடந்த இரண்டரை ஆண்டுகளாக அந்நிறுவனத்துக்காக டெல்லியில் பணியாற்றி வருகிறார்.

    காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்த சர்ச்சைக்குரிய செய்தி ஒன்றை அவனி தியாஸ் சமீபத்தில் வெளியிட்டார்.

    ஏ.பி.சி., நிறுவனத்தின் யுடியூப் சேனலில் வெளியான நிஜ்ஜார் கொலை குறித்த இந்த வீடியோ இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

    இந்நிலையில் இதை எல்லை மீறிய செயல் என கூறி, எனது விசாவை வெளியுறவு அமைச்சகம் ரத்து செய்துள்ளது என்று அவனி தியாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அவனி தியாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "கடந்த வாரம் நான் திடீரென இந்தியாவை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. நிஜ்ஜார் கொலை குறித்த செய்தி, எல்லை மீறிய செயல் என கூறி, விசா நீட்டிக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்தது. பாராளுமன்ற தேர்தல் குறித்த செய்தி சேகரிக்கும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை.

    இதனால், ஜனநாயகத்தின் தாய் என பிரதமர் மோடி அழைக்கும், தேசிய தேர்தலின் முதல் நாள் ஓட்டுப்பதிவு குறித்த செய்திகளை சேகரிக்க முடியவில்லை. பின், ஆஸ்திரேலிய அரசு தலையிட்டதன் காரணமாக, இரண்டு மாதங்களுக்கு விசா நீட்டிக்கப்பட்டது என்று அவர் கூறியுள்ளார்.

    ஆனால், "ஆஸ்திரேலியாவில் அவருக்கு வேறொரு வேலை கிடைத்தது. அதற்காக தான் அவர் இந்தியாவை விட்டு வெளியேறினார். விசா வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் அவர் வெளியேறவில்லை, தனிப்பட்ட காரணங்களுக்காக தான் அவர் வெளியேறினார்" என்று பெயர் தெரிவிக்க விரும்பாத அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளது.
    • ஜூன் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் நடக்கிறது.

    புதுடெல்லி:

    ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

    இதற்கிடையே, டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் வரும் 27-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இதில் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், பும்ரா, ரவீந்திர ஜடேஜா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோரின் தேர்வு உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் புரோமோ இன்று வெளியிடப்பட்டது. இந்த புரோமோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இந்நிலையில் தற்போது 65,960 இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர்.
    • அமெரிக்க குடியுரிமை பெற்ற 2- வது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது

    அமெரிக்க நாட்டில் வசிக்க உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் விரும்பி வருகிறார்கள்.மேலும் வேலை மற்றும் படிப்புக்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏராளமான மக்கள் அமெரிக்கா சென்று வருகிறார்கள்.

    அமெரிக்காவின் வாழ்க்கை ,வசதிகள் பிடித்த காரணத்தால் அந்நாட்டில் வசிப்பதற்கு குடியுரிமை பெற தினந்தோறும் ஏராளமான பேர் விண்ணப்பித்து வருகின்றனர்.





    2022 -ம் ஆண்டின் கணக்கெடுப்பு படி 46 மில்லியன் வெளிநாட்டில் பிறந்த மக்கள் அமெரிக்காவில் வசிக்கின்றனர் .இது அமெரிக்க நாட்டின் மொத்த மக்கள் தொகையான 333 மில்லியனில் 14 சதவீதம் ஆகும்.

    மெக்ஸிகோவில் பிறந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் தற்போது அமெரிக்காவில் வசிக்கின்றனர். அதைத் தொடர்ந்து இந்தியா, பிலிப்பைன்ஸ், கியூபா மற்றும் டொமினிகன் குடியரசு நாடுகளை சேர்ந்தவர்கள் வசிக்கிறார்கள் என சமீபத்திய கணக்கெடுப்பு ஆய்வு தெரிவித்துள்ளது.




    2022 -ல் 128,878 மெக்சிகன் மக்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றனர். அதை தொடர்ந்து, இந்தியாவை சேர்ந்தவர்கள் 65,960 பேர் குடியுரிமை பெற்றுள்ளனர். பிலிப்பைன்ஸ் 53,413, கியூபா 46,913, டொமினிகன் குடியரசு 34,525, வியட்நாம் 33,246 பேர் குடியுரிமை பெற்றனர்.




    இந்நிலையில் தற்போது 65,960 இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர். மெக்சிகோவிற்கு அடுத்தபடியாக அமெரிக்க குடியுரிமை பெற்ற 2- வது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது

    • கடந்த மார்ச் 3-ம் தேதி டெல் அவிவ் நகருக்கு ஏர் இந்தியா விமான சேவையை மீண்டும் தொடங்கியது.
    • டெல் அவிவ் நகருக்கான விமான சேவை வரும் 30-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    புதுடெல்லி:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலை அடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதியில் இருந்து டெல் அவிவ் நகருக்கு ஏர் இந்தியா தனது விமான சேவையை நிறுத்தியது. 5 மாத இடைவெளிக்கு பிறகு கடந்த மார்ச் 3-ம் தேதி டெல் அவிவ் நகருக்கு ஏர் இந்தியா மீண்டும் விமான சேவையை தொடங்கி இருந்தது.

    இந்நிலையில், இஸ்ரேல்-ஈரான் இடையில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்தியாவில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் செல்லும் விமானங்கள் மற்றும் டெல் அவிவ் நகரில் இருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்கள் அனைத்தும் வரும் 30-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது என ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், மத்திய கிழக்கில் நிலவிவரும் சூழலை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்குள்ள நிலவரத்தை கண்காணித்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

    ஈரான், இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கும் இந்தியர்கள் யாரும் செல்லவேண்டாம் என இந்திய வெளியுறவுத்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இவ்விரு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சந்தித்து 17 ஆண்டுகள் உருண்டோடி விட்டது.
    • ஐ.சி.சி. தொடர்களை தவிர்த்து இந்தியா- பாகிஸ்தான் இடையே இரு நாட்டு போட்டிகளும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று விரும்புகிறேன்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் ஆகியோருடன் யூடியூப் விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவரிடம் முன்வைக்கப்பட்ட சில கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதில் அளித்தார்.

    இந்திய அணி, பரம போட்டியாளரான பாகிஸ்தானுடன் 2012-13-ம் ஆண்டுக்கு பிறகு நேரடி கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை. ஐ.சி.சி. உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பை போட்டிகளில் மட்டும் பாகிஸ்தானுடன் இந்திய அணி மோதுகிறது. மற்றபடி இரு நாட்டு தொடருக்கு பாதுகாப்பு பிரச்சினையை காரணம் காட்டி மத்திய அரசு அனுமதி மறுக்கிறது.

    நேரடி தொடர் என்று பார்த்தால் பாகிஸ்தான் அணி கடைசியாக 2012-13-ம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்து ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. அதே சமயம் இவ்விரு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சந்தித்து 17 ஆண்டுகள் உருண்டோடி விட்டது.

    இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ரோகித் சர்மா, 'ஐ.சி.சி. தொடர்களை தவிர்த்து இந்தியா- பாகிஸ்தான் இடையே இரு நாட்டு போட்டிகளும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்விரு அணிகளும் பொதுவான இடத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடினால் அது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும், இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

    பாகிஸ்தான் சிறந்த வீரர்களை கொண்டுள்ள அணி. குறிப்பாக பந்து வீச்சு வலுவாக உள்ளது. அவர்களுடன் வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் போட்டியில் மோதினால் நிச்சயம் அது ஆகச்சிறந்த போட்டியாக இருக்கும். அற்புதமான ஒரு தொடராக அமையும். முழுக்க முழுக்க கிரிக்கெட் அடிப்படையில் இதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். மற்ற விஷயங்களில் எனக்கு ஆர்வம் கிடையாது' என்றார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 'இம்பேக்ட்' விதிப்படி ஒவ்வொரு அணியும் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் அல்லது பந்து வீச்சாளரை மாற்று வீரராக சேர்க்க முடிகிறது. இந்த புதுமையான விதி குறித்து ரோகித் கூறுகையில், 'இம்பேக்ட் விதிமுறையால் ஆல்-ரவுண்டர்களின் திறமை மேம்படுவது தடுக்கப்படுவதாக நினைக்கிறேன். ஏனெனில் கிரிக்கெட் என்பது 11 பேர் விளையாட்டே தவிர, 12 பேர் அல்ல. எனவே இம்பேக்ட் விதி என்னை பெரிய அளவில் ஈர்க்கவில்லை. இது ரசிகர்களுக்கு வேண்டுமென்றால் இன்னும் அதிகமாக பொழுதுபோக்கை கொடுக்கலாம். ஆனால் கிரிக்கெட்டை வைத்து பாருங்கள். உதாரணமாக வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே போன்ற ஆல்-ரவுண்டர்கள் இம்பேக்ட் விதியால் பந்து வீசும் வாய்ப்பை பெறவில்லை. இது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல.

    மேலும், 2008-ம் ஆண்டு முதல் 2023-ம்ஆண்டு வரை ஐ.பி.எல்.-ல் இரண்டு முறை மட்டுமே 250 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டிருந்தன. ஆனால் நடப்பு ஐ.பி.எல்-ல் இப்போதே 4 தடவை 250 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டு விட்டன என்றால், இந்தி விதிமுறையின் தாக்கத்தை கவனியுங்கள். அது மட்டுமின்றி கூடுதலாக ஒரு முன்னணி பேட்ஸ்மேன் இறங்கும் போது, உங்களது வழக்கமான 6-வது அல்லது 7-வது வரிசை பேட்ஸ்மேன்கள் 7-8 பந்துகளை சந்திக்க மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது' என்றார்.

    மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த ரோகித் சர்மா, 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் அணித் தேர்வு தொடர்பாக தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோருடன் நான் ஆலோசனை நடத்தியதாக வெளியான தகவல் உண்மை இல்லை என்றும் கூறினார்.

    • மகளிர் கிரிக்கெட் தொடர்பான கதையம்சம் கொண்டிருந்தது.
    • ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் இம்மாத இறுதியில் துவங்குகிறது.

    சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கிய திரைப்படம் கனா. ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த இந்த படம் மகளிர் கிரிக்கெட் தொடர்பான கதையம்சம் கொண்டிருந்தது.

    மாபெரும் வெற்றி பெற்ற இந்த படத்தில் கிரிக்கெட் வீராங்கனைகள் சிலரும் நடித்து இருந்தனர். அந்த வகையில், கனா படத்தில் நடித்த கிரிக்கெட் வீராங்கனை சஜனா சஜீவன் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார்.

    வங்காளதேசம் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் சஞ்சனா சஜீவன் இந்திய அணிக்காக களமிறங்க உள்ளார். வங்காளதேசம் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஏப்ரல் 28 ஆம் தேதி துவங்க இருக்கிறது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
    • நாம் வாழும் 21-ம் நூற்றாண்டின் உலகத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பாதுகாப்பு கவுன்சில் உட்பட ஐ.நா. அமைப்புக்கான சீர்திருத்தங்களை நாங்கள் நிச்சயமாக ஆதரிக்கிறோம்.

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் 15 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது. இதில் வீட்டோ அதிகாரம் கொண்ட 5 நிரந்தர உறுப்பினர்கள் (அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா) மற்றும் 2 ஆண்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 10 நிரந்தரமற்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று இந்தியா கோரி உள்ளது.

    இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க அமெரிக்கா மீண்டும் ஆதரவு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறும்போது, நாம் வாழும் 21-ம் நூற்றாண்டின் உலகத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பாதுகாப்பு கவுன்சில் உட்பட ஐ.நா. அமைப்புக்கான சீர்திருத்தங்களை நாங்கள் நிச்சயமாக ஆதரிக்கிறோம். அது என்ன என்பது குறித்து என்னிடம் எந்த விவரமும் இல்லை, ஆனால் நிச்சயமாக நாங்கள் அதை அங்கீகரிக்கிறோம் என்றார்.

    • உலகக் கோப்பை தொடர் துவங்க உள்ளது.
    • அணி வீரர்கள் பட்டியலை வழங்க ஐ.சி.சி. உத்தரவு.

    ஐ.சி.சி. நடத்தும் டி20 உலகக் கோப்பை தொடர் இந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். டி20 தொடர் முடிந்ததும் உலகக் கோப்பை தொடர் துவங்க உள்ளது.

    மே 1 ஆம் தேதிக்குள் 15 பேர் அடங்கிய அணி வீரர்கள் பட்டியலை வழங்க ஐ.சி.சி. உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், டி20 தொடருக்கான இந்திய அணியில் 20 பேர் அடங்கிய வீரர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.

    அதன்படி இந்திய அணியின் பேட்டிங் பிரிவில்- ரோகித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங் ஆகியோர் இடம்பெறுவர் என கூறப்படுகிறது. ஆல் ரவுண்டர்கள் பிரிவில்- ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, சிவம் தூபே மற்றும் அக்சர் பட்டேல் இடம்பெறுவர் என தெரிகிறது.

    ஸ்பின்னர்கள் பிரிவில்- குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய் ஆகியோரும், விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பந்த், கே.எல். ராகுல் மற்றும் சஞ்சு சாம்சன் இடம்பெறுவர் என்று தெரிகிறது. வேகப் பந்துவீச்சாளர் பிரிவில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அர்தீப் சிங் மற்றும் ஆவேஷ் கான் இடம்பெறுவர் என்று கூறப்படுகிறது. 

    • 17 இந்தியர்கள் உட்பட 25 மாலுமிகள் உள்ளனர்.
    • சரக்கு கப்பலை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தல்.

    இஸ்ரேல்- ஈரான் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை நடத்தியது. இதற்கிடையே நேற்று அரபிக்கடலில் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்தது.

    இந்த கப்பல் இஸ்ரேலை சேர்ந்த தொழிலதிபருக்கு தொடர்புடையது. ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து இந்தியா நோக்கி சென்று கொண்டிருந்த கப்பலுக்குள் ஹெலிகாப்டர் மூலம் ஆயுதங்களுடன் இறங்கிய ஈரான் கடற்படை கமாண்டோக்கள் கப்பலை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் 17 இந்தியர்கள் உட்பட 25 மாலுமிகள் உள்ளனர். அவர்களை ஈரான் கடற்படை சிறை பிடித்துள்ளது.

    கப்பலில் உள்ள இந்தியர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதற்காக பேச்சுவார்த்தை நடத்த ஈரானுடன் இந்தியா தொடர்பில் உள்ளது. இந்தியர்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் முன்கூட்டியே விடுதலை ஆகியவற்றை உறுதி செய்வதற்காக, ஈரான் மற்றும் புதுடெல்லியில் உள்ள தூதரகங்கள் மூலம் ஈரான் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 

    இந்தியாவின் கோரிக்கையை ஏற்று இந்திய மாலுமிகள் 17 பேரை ஈரான் விடுவிக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே சரக்கு கப்பலை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் கூறும்போது, "சர்வதேச கடற்பகுதியில் கப்பலை ஈரான் கைப்பற்றியதை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். கப்பலின் குழுவில் இந்தியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், ரஷ்யா, எஸ்டோனிய நாட்டவர்கள் உள்ளனர். கப்பலையும் அதன் சர்வதேச பணியாளர்களையும் உடனடியாக விடுவிக்க ஈரானுக்கு அழைப்பு விடுக்கிறோம் என்றார்.

    • அமெரிக்கா-இந்தியா உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுவாகி உள்ளது.
    • அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வா்த்தகம் அதிகரித்துள்ளது.

    வாஷிங்டன்:

    ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த அமெரிக்க பாராளுமன்றத்தின் வெளியுறவுக் குழு மூத்த உறுப்பினரான பிராட் சொ்மன், இந்தியா-அமெரிக்கா உறவின் மேம்பாட்டுக்காக கடந்த 28 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறாா்.

    இந்நிலையில், 'பிடிஐ' செய்தி நிறுவனத்துக்கு அவா் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    'பிரதமா் மோடி இந்தியாவின் முகமாகிவிட்டாா். அவரது ஆட்சியில் இந்தியாவில் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்தைக் காண்கிறோம்.

    ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒவ்வொரு தலைவருக்கும் அவா்களுக்கென சவால்கள் உள்ளன. ஒரு நாட்டின் வெற்றி ஒரு தலைவரை மட்டும் பொறுத்ததில்லை. இந்தியாவில் 130 கோடி மக்கள் உள்ளனா். அவா்கள் அனைவரும் இணைந்து இந்தியாவை மிகவும் வெற்றிகரமான நாடாக மாற்ற முயற்சிக்கின்றனா்.

    அமெரிக்கா-இந்தியா உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுவாகி உள்ளது. ராணுவ உளவுப் பகிா்வு மற்றும் இந்தோ-பசிபிக் பகுதியை சுதந்திரமாகவும் அமைதியாகவும் வைத்திருக்க முயற்சி செய்வதில் கவனம் செலுத்துவதன் மூலம் மிகப்பெரிய கூட்டு நடவடிக்கைகள் மற்றும் பயிற்சிகளுடன் பாதுகாப்பு துறையில் நமது உறவு வலுவாகியிருப்பது தெளிவாக தெரிகிறது. அதேசமயம், ரஷியாவுடன் இந்தியா பாதுகாப்பு உறவைத் தொடர்கிறது. இது அமெரிக்கா-இந்தியா உறவில் சவாலாக இருக்கிறது.

    அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வா்த்தகம் அதிகரித்துள்ளது. ஜனநாயகம் மற்றும் சட்ட ஆட்சி நிறுவப்படாத நாடுகளை விட வணிகம் செய்வதற்கான சிறந்த இடமாக இந்தியா உள்ளது குறித்து துறை சாா்ந்த பலரிடம் நான் கேட்டறிந்துள்ளேன்.

    நியாயமான மற்றும் நோ்மையான நீதிமன்ற அமைப்பை அணுகுவது வணிகத்தின் வெற்றிக்கு முக்கியமானதாகும். அதுமட்டுமின்றி, வேறு சில நாடுகள் வழங்காத சலுகைகளை இந்தியா வழங்குகிறது. நமது இருதரப்பு வா்த்தக உறவை மேலும் விரிவுபடுத்த வேண்டும்.

    அமெரிக்காவில் தொழில்முனைவோா்கள் நிறைந்த லாஸ் ஏஞ்சல்சில் இந்திய துணைத் தூதரகம் அமைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.

    இந்திய வம்சாவளி அமெரிக்கா்கள் சிறந்த கல்வியறிவு பெற்றவா்கள். அமெரிக்காவில் வசிக்கும் மற்றவா்களைவிட அதிக வருமானம் பெறுபவா்களாக விளங்குகின்றனா்.

    இவ்வாறு பிராட்செர்மன் கூறினார்.

    ×