என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது " India"

    • சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜேமிசன் பந்தில் 93 ரன்களில் கோலி ஆட்டமிழந்தார்.
    • நேற்றைய போட்டியில் ஆட்ட நாயகன் விருதை கோலி வென்றார்.

    இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று வதோதராவில் நடைபெற்றது.

    போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வுசெய்தார். இதன்படி நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்கள் குவித்து, இந்தியாவிற்கு வெற்றி இலக்காக 301 ரன்களை நிர்ணயித்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 306 ரன்கள் குவித்தது. இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிப் பெற்றது. இதன்மூலம் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் உள்ளது.

    இப்போட்டியில் ரோகித் அவுட்டாகி வெளியேறிய சமயத்தில் கோலி களமிறங்கிய போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர்.

    போட்டி முடிந்த பின்பு இதுகுறித்து பேசிய கோலி, "ஒருவர் அவுட் ஆகி வெளியே செல்லும்போது, களத்திற்குள் வரும் எனக்கு அதிக ஆர்ப்பரிப்பு எழுவது எனக்கு பிடிக்கவில்லைதான். இதே போல தோனிக்கும் அடிக்கடி நடக்கிறது. ரசிகர்களின் உற்சாகத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதே நேரத்தில், அவுட்டாகி வெளியேறுபவர் இதை பெரிதும் விரும்ப மாட்டார் என நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.

    • சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த 2வது வீரர் என்ற சாதனையை படைத்தார் இந்திய வீரர் விராட் கோலி
    • நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று வதோதராவில் நடைபெற்றது.

    போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வுசெய்தார். இதன்படி நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்கள் குவித்து, இந்தியாவிற்கு வெற்றி இலக்காக 301 ரன்களை நிர்ணயித்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 306 ரன்கள் குவித்தது. இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிப் பெற்றது. இதன்மூலம் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் உள்ளது.

    இந்திய தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 93 ரன்களும், சுப்மன் கில் 56 ரன்களும், ஸ்ரேயாஸ் 49 ரன்களும் குவித்தனர். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜேமிசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2வது போட்டி நாளை மறுநாள் ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. 

    • எட்டு போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அந்த நேரத்தில் நான் தலையிட்டுப் போரை நிறுத்தினேன்.
    • சர்வதேச விதிகள் எனக்குப் பொருந்தாது.

    இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதலைத் தான் தடுத்து நிறுத்தியுள்ளதாகவும், வரலாற்றில் தன்னை விட நோபல் அமைதிப் பரிசுக்குத் தகுதியானவர் யாரும் இல்லை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.

    நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பெரிய போர் வெடிக்கும் சூழல் இருந்தது.

    எட்டு போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அந்த நேரத்தில் நான் தலையிட்டுப் போரை நிறுத்தினேன்.

    வரலாற்றில் நோபல் அமைதிப் பரிசுக்கு என்னைப் போல தகுதியானவர்கள் வேறு யாரும் இல்லை. ஆனால், ஒபாமா எந்த ஒரு பணியும் செய்யாமலே நோபல் பரிசைப் பெற்றுக்கொண்டார்.

    இதுவரை சுமார் 8 பெரிய போர்களைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைத்துள்ளேன். அவற்றில் சில 25 முதல் 36 ஆண்டுகள் வரை நீடித்தவை" என்று தெரிவித்தார்.

    அதேநேரம், சர்வதேச விதிகள் எனக்குப் பொருந்தாது என்று கூறியுள்ள டிரம்ப் , வெனிசுலா மற்றும் ஈரான் விவகாரங்களிலும் தான் தலையிடுவேன் என்று தெரிவித்தார்.

    வெனிசுலா அதிபரைக் கடத்தியதற்கு மத்தியில் டிரம்ப் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கேட்பது பேசுபொருளாகி வருகிறது. 

    • ரஷியாவிடம் சில நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தும்படி வலியுறுத்த வேண்டும்.
    • புதினின் போர் எந்திரத்துக்கு தீனி போடும் நாடுகளை தண்டிக்க இம்மசோதாவை கொண்டுவருவது காலத்தின் அவசியம்.

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது.

    இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதாக உறுதியளித்து இருந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பதவிக்கு வந்தவுடனே அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    இதற்காக ஒரு அமைதி திட்டத்தை உருவாக்கி உள்ள டிரம்ப், அதுகுறித்து ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளுடன் பேச ஸ்டீவ் விட்காப், தனது மருமகன் ஜேர்டு குஸ்னர் ஆகியோரை சிறப்பு தூதர்களாக நியமித்து உள்ளார்.

    ஒருபுறம் அமைதி திட்டத்தை முன்வைத்து வரும் டிரம்ப், மறுபுறம் போரை நிறுத்த மறுக்கும் ரஷியாவை வழிக்கு கொண்டு வர மறைமுக அழுத்தமும் கொடுத்து வருகிறார்.

    இதில் முக்கியமாக, உக்ரைனுடன் போரிட ரஷியாவிடம் பணம் இல்லாவிட்டால் போர் நின்றுவிடும் என்று அவர் கருதுகிறார். எனவே ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளை தண்டிக்க அவர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    அதன்படி ரஷியாவிடம் இருந்து இந்தியா மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதை தடுப்பதற்காக இந்திய பொருட்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரி விதித்தார்.

    இதன் தொடர்ச்சியாக, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் கைவிடுவதற்காக, அந்நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

    இது தொடர்பாக புதிய மசோதா ஒன்றை அமெரிக்க செனட் உறுப்பினர் லிண்ட்சே கிரஹாம் மற்றொரு உறுப்பினர் புளுமெந்தாருடன் இணைந்து உருவாக்கி இருக்கிறார்.

    ரஷியா பொருளாதார தடை மசோதா எனப்படும் இந்த மசோதாவுக்கு டிரம்ப் தற்போது ஒப்புதல் அளித்து உள்ளார். இது விரைவில் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இது குறித்து லிண்ட்சே கிரஹாம் தனது 'எக்ஸ்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    7-ந் தேதி, ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசினேன். பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசித்தோம். அதைத்தொடர்ந்து, ரஷிய பொருளாதார தடை மசோதாவுக்கு டிரம்ப் பச்சைக்கொடி காட்டினார்.

    அந்த மசோதா மீது மற்றொரு செனட் உறுப்பினர் புளுமெந்தார் உள்ளிட்டோருடன் நான் பல மாதங்களாக பணியாற்றினேன்.

    ரஷியாவிடம் சில நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தும்படி வலியுறுத்த வேண்டும். அதற்கு ஜனாதிபதி டிரம்ப் சம்மட்டி அடியாக அந்த நாடுகள் மீது அதிக வரி விதிக்க திட்டமிட்டுள்ளார்.

    இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்க டிரம்புக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.

    இந்த நாடுகள் ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால்தான் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷியாவுக்கு பணம் கிடைக்கிறது. எனவே, போரை நிறுத்துவதற்காக இம்மசோதா கொண்டுவரப்படுகிறது.

    அடுத்த வார தொடக்கத்தில் மசோதா மீது வாக்கெடுப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

    அமைதியை ஏற்படுத்த உக்ரைன் சலுகை அளிக்கிறது. ஆனால், ரஷிய அதிபர் புதின் நிறைய பேசுகிறார். அப்பாவிகளை கொன்று வருகிறார். எனவே, புதினின் போர் எந்திரத்துக்கு தீனி போடும் நாடுகளை தண்டிக்க இம்மசோதாவை கொண்டுவருவது காலத்தின் அவசியம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    முன்னதாக ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்து விட்டதாக அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் குவாத்ரா தன்னிடம் தெரிவித்ததாக கடந்த வாரம் லிண்ட்சே கிரஹாம் கூறியிருந்தார். அதனால், வரியை குறைக்கும்படி டிரம்பிடம் கூறுமாறு கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அபராதமாக இந்திய பொருட்கள் மீது ஏற்கனவே டிரம்ப் விதித்த 25 சதவீத வரியால் இந்திய ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

    தற்போது 500 சதவீத வரி விதிப்புக்கு டிரம்ப் ஒப்புதல் அளித்திருப்பதன் மூலம் இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

    • தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து அங்கு வன்முறை தீவிரமடைந்தது.
    • வங்கதேசத்தில் கடந்த ஒரு மாதத்தில் 10-க்கு மேற்பட்ட இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    டாக்கா:

    வங்கதேசத்தில் சமீப காலமாக இந்துக்கள் மீது தாக்குதல் அதிகரித்து வருகிறது. மாணவர் இயக்க தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து வெடித்த வன்முறையில் இந்துக்களை குறிவைத்து தாக்கினர்.

    இதில் இந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் அடித்துக் கொல்லப்பட்டார். அதன்பின், ராஜ்பாரி பகுதியைச் சேர்ந்த அம்ரித் மண்டல், மைமன்சிங் பகுதியைச் சேர்ந்த பிஜேந்திர பிஸ்வாஸ், கெர்பங்கா பகுதியைச் சேர்ந்த கோகோன் தாஸ் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்காக ஒப்பந்தமாகி இருந்த வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரகுமான் நீக்கப்பட்டார்.

    இதனால் அதிருப்தி அடைந்த வங்கதேசம் டி 20 உலகக் கோப்பை போட்டியில் விளையாட இந்தியாவுக்கு வர முடியாது என அறிவித்தது.

    இதற்கிடையே, வங்கதேசத்தில் இந்து இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் அதற்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற போராட்டங்களால் இரு நாடுகளுக்கும் இடையே தூதரக ரீதியான பதற்றம் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் டெல்லி, கொல்கத்தா, அகர்தலா ஆகிய தூதரக அலுவலகங்களில் விசா சேவையை நிறுத்தி வைப்பதாக வங்கதேச அரசு அறிவித்தது.

    இதுதொடர்பாக, அந்நாட்டின் வெளியுறவுத்துறை ஆலோசகர் தவுஹித் ஹொசைன் கூறுகையில், பாதுகாப்பு பிரச்சனையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வர்த்தகம், வேலைவாய்ப்பு தொடர்பான விசாக்களுக்கு தடையில்லை என தெரிவித்தார்.

    • வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்குப் பிறகு அமைந்துள்ள இடைக்கால அரசு அமைந்தது
    • வங்கதேச இடைக்கால அரசு பாகிஸ்தானுடன் உறவை வலுப்படுத்தி வருகிறது.

    பாகிஸ்தானிடம் JF-17 Thunder ரக போர் விமானங்களை வாங்குவது குறித்து பேச்சுவார்த்தையை வங்கதேசம் தொடங்கியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

    போர் விமானங்கள் மட்டுமின்றி, Super Mushshak பயிற்சி விமானங்களை விரைவாக வழங்கவும், வங்கதேச விமானிகளுக்கு பயிற்சிகளை அளிக்கவும் பாகிஸ்தானிடம் வங்கதேசம் கேட்டுள்ளது.

    வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்குப் பிறகு அமைந்துள்ள இடைக்கால அரசு, பாகிஸ்தானுடன் உறவை வலுப்படுத்தி வருகிறது.

    குறிப்பாக வங்கதேசம் தலைநகர் டாக்காவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு வங்கதேச அரசு நேரடி விமான சேவையை வருகிற 29-ந்தேதியில் இருந்து தொடங்க இருக்கிறது. கடந்த 2012-ம் ஆண்டுக்கு பிறகு இரு நகரங்களுக்கு இடையே நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • எனக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே மிகச் சிறந்த உறவு உள்ளது என்று டிரம்ப் தெரிவித்தார்
    • அமெரிக்காவின் வரிக் கொள்கைகள் காரணமாக நாம் பணக்காரர்களாகி வருகிறோம்.

    ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணை வாங்குவதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இவ்விவகாரத்தில் இந்திய பொருட்கள் மீதான வரியை 50 சதவீதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உயர்த்தினார். இதை இந்தியா கடுமையாக எதிர்த்த நிலையில் இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    இதற்கிடையே நேற்று முன்தினம் ரஷிய கச்சா எண்ணை விவகாரத்தில் இந்தியா மீதான வரியை மேலும் உயர்த்த என்னால் முடியும் என்று டிரம்ப் தெரிவித்தார். மேலும் நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது பிரதமர் மோடிக்கு தெரியும் என்றும் தெரிவித்தார்.

    இந்த நிலையில் அமெரிக்காவின் வரி விதிப்புகளால் பிரதமர் மோடி மகிழ்ச்சியாக இல்லை என்று டிரம்ப் தெரிவித்து உள்ளார். குடியரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் டிரம்ப் பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-

    எனக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே மிகச் சிறந்த உறவு உள்ளது. ஆனால் இந்தியா அதிக வரி செலுத்துவதால் அவர் என் மீது மகிழ்ச்சியாக இல்லை. அமெரிக்காவின் வரி விதிப்புகளால் என் மீது வருத்தத்தில் இருக்கிறார். ஆனால் இப்போது இந்தியா ரஷியாவிடமிருந்து எண்ணை வாங்குவதை கணிசமாகக் குறைத்துள்ளது.

    அமெரிக்காவின் வரிக் கொள்கைகள் காரணமாக நாம் பணக்காரர்களாகி வருகிறோம். இதை அனைவரும் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். இந்த வரி விதிப்புகளால் அமெரிக்கா முன்பை விட பொருளாதார ரீதியாகவும், தேசிய பாதுகாப்பு ரீதியாகவும், வலிமையானதாகவும், மரியாதைக்குரிய நாடாகவும் மாறியுள்ளது.

    இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.

    • பிரதமர் மோடி மிகவும் நல்லவர். என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கவே விரும்புகிறார்.
    • நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது பிரதமர் மோடிக்கு தெரியும்.

    மேற்கத்திய தடைகளை பொருட்படுத்தாமல் இந்தியா ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு நிதியளிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.

    இதற்கு அபராதமாக இந்திய பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் வரியை அவர் விதித்திருந்தார். வர்த்தக பதட்டங்களை தவிர்க்க இரு நாடுகளின் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் ரஷியா விடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் இந்திய இறக்குமதிகள் மீதான வரிகளை மேலும் அதிகரிப் போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து பேசிய டிரம்ப், "பிரதமர் மோடி ரஷியாவிடம் இருந்து எண்ணை வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று எனக்கு உறுதியளித்தார். இந்திய இறக்குமதிகள் மீதான 50 சதவீத வரிகள் அமலுக்கு வந்த சில வாரங்களுக்குப் பிறகு கடந்த அக்டோபர் மாதம் ரஷியாவிடம் இருந்து எண்ணை வாங்க மாட்டோம் என்று என்னிடம் மோடி கூறினார். ஆனால் இந்தியா தொடர்ந்து எண்ணை வாங்கிக் கொண்டு தான் இருக்கிறது. ரஷியாவின் எண்ணெய் பிரச்சினையில் உதவா விட்டால், இந்தியா மீது நாங்கள் மேலும் வரிகளை உயர்த்து வோம்" என்று கூறினார்.

    மேலும், "பிரதமர் மோடி மிகவும் நல்லவர். என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கவே விரும்புகிறார். நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது பிரதமர் மோடிக்கு தெரியும், இந்தியா என்னை மகிழ்ச்சியடைய செய்வது முக்கியம்" என மிரட்டும் தொனியில் டிரம்ப் பேசியுள்ளார்.

    ரஷியாவிடமிருந்து எண்ணை வாங்க மாட்டோம் என்று பிரதமர் மோடி டிரம்பிடம் கூறவில்லை என்றும் டிரம்ப்புக்கும் பிரதமர் மோடிக்கும் இடையில் அத்தகைய உரையாடல் எதுவும் நடக்கவில்லை என்றும் இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது.

    இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சு வார்த்தை நடந்து வரும் நிலையில் டிரம்ப்பின் இந்த பேச்சு இரு நாடுகளுக்கும் இடையே மேலும் விரிசலை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை இந்திய அணி 9 போட்டிகள் விளையாடி உள்ளது
    • WTC புள்ளிப்பட்டியலில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான பந்தயத்தில் இந்தியா நீடிக்க வேண்டும் என்றால் அடுத்து வரும் 9 போட்டிகளில் குறைந்த பட்சம் 7 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை இந்திய அணி 9 போட்டிகள் விளையாடி உள்ளது. இதில் ஒரு போட்டி டிரா, 4 வெற்றி, 4 தோல்வியடைந்துள்ளது. இதன் வெற்றி சதவீதத்தின் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது.

    இன்னும் இந்திய அணிக்கு 9 போட்டிகள் உள்ளது. இதில் குறைந்த பட்சம் 7 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

    இந்திய அணி இந்த 9 போட்டிகளில் ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது.

    இலங்கையில் 2 போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது. அதனை தொடர்ந்து நியூசிலாந்திலும் 2 போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது. கடைசியாக சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

    நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கு எதிராக முடிந்த அளவுக்கு இந்தியா போராடி வெற்றி பெற்றாலும் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா வெற்றி பெறுமா என்பது சந்தேகமாக உள்ளது.

    இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்வதற்கு புதிய திட்டம் ஒன்றை டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் வகுத்துள்ளார். ஒரு டெஸ்ட் தொடரில் களமிறங்குவதற்கு முன்பு இந்திய அணி வீரர்களுக்கு சிறந்த பயிற்சி தேவை. ஆகவே ஒவ்வொரு டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பாக வீரர்களுக்கு 15 நாள் முகாம் நடத்தவேண்டும் என்று பிசிசிஐயிடம் கில் கோரிக்கை வைத்துள்ளார். 

    • அமைதியான பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்
    • காரகாஸில் உள்ள இந்தியத் தூதரகம் இந்தியச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பில் உள்ளது மற்றும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்கும்

    வெனிசுலா நாட்டின்மீது திடீர் தாக்குதல் நடத்தி, அந்நாட்டு அதிபர் மற்றும் அவரது மனைவியை அமெரிக்கா சிறைபிடித்துள்ளது. மேலும் வெனிசுலாவின் எண்ணெய் இருப்பை இனி தாங்கள்தான் நிர்வகிப்போம் எனவும் அறிவித்துள்ளது.

    மறுபுறம் வெனிசுலாவில் பதற்றமான சூழல் நிலவுவதால், அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த அதிகாரமீறலுக்கு உலகின் பலநாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவும் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,

    "வெனிசுலாவில் அரங்கேறிவரும் சமீபத்திய நிகழ்வுகள் ஆழ்ந்த கவலையளிக்கின்றன. வெனிசுலாவில் மாறிவரும் ஒவ்வொரு நிலையையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். வெனிசுலா நாட்டு மக்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பிற்கான தனது ஆதரவை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது. அமைதியான பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், இதன் மூலம் அப்பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த முடியும்.

    காரகாஸில் உள்ள இந்தியத் தூதரகம் இந்தியச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பில் உள்ளது மற்றும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்கும்." என தெரிவித்துள்ளது. 

    • கராகஸ் நகரில் சுமார் 7 இடங்களில் அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.
    • இதனால் வெனிசுலாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாகவும், இதற்கு வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வந்தார்.

    வெனிசுலா தலைநகர் கராகஸ் நகரில் நேற்று சுமார் 7 இடங்களில் அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனால் அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, வெனிசுலா அதிபரும், அவரது மனைவியும் நாடு கடத்தப்பட்டதாகவும், வெனிசுலா நாட்டை அமெரிக்கா நிர்வாகம் செய்யும் என அதிபர் டிரம்ப் அறிவித்தார். அமெரிக்காவின் இந்த அடாவடி நடவடிக்கையால் சர்வதேச அரசியலில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெனிசுலாவில் சமீபத்திய அரசியல் பதட்டங்கள் மற்றும் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளால் இந்தியர்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கும்படி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

    வெனிசுலாவில் உள்ள இந்தியர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும், கராகஸில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் தொடர்பில் இருக்கவும், அவசரத் தொடர்பு எண்களைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளது.

    • உலகளவில் சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு தனிநபர் 79 கிலோ அளவுக்கு உணவுக் கழிவுகளை ஏற்படுத்துவதாக சொல்லப்பட்டு இருக்கிறது.
    • ரஷியாவில் ஒரு நபர் ஆண்டுக்கு 33 கிலோ உணவுக் கழிவுகளை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (யு.என்.இ.பி.) சமீபத்திய அறிக்கையில், உலகில் தனிமனிதர்களால் ஓராண்டில் ஏற்படுத்தப்படும் உணவுக் கழிவுகள் எந்தெந்த நாடுகளில் எவ்வளவு இருக்கின்றன? என்ற புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளவில் சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு தனிநபர் 79 கிலோ அளவுக்கு உணவுக் கழிவுகளை ஏற்படுத்துவதாக சொல்லப்பட்டு இருக்கிறது.

    இது இந்தியாவில் ஓராண்டில் மட்டும் தனிநபர் மூலம் 55 கிலோ உணவுக் கழிவுகள் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இவை சமைத்த உணவு, காய்கறித் தோல்கள் மற்றும் கெட்டுப்போன உணவுகளை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்ட அறிக்கை ஆகும். இந்த பட்டியலில் குறைந்த அளவில் உணவுக் கழிவுகளை ஏற்படுத்தும் நாடுகளில், ரஷியா இருக்கிறது. ரஷியாவில் ஒரு நபர் ஆண்டுக்கு 33 கிலோ உணவுக் கழிவுகளை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த பட்டியலில், தனிநபர் அதிகமாக ஓராண்டில் உணவுக் கழிவுகளை ஏற்படுத்தும் நாடுகளில், மாலத்தீவு (தனிநபர் 207 கிலோ) உள்ளது. அதற்கடுத்தபடியாக, எகிப்து (163 கி.கி.), ஈராக் (143 கிலோ), பாகிஸ்தான் (130 கிலோ), மெக்சிகோ (105 கிலோ), சவுதிஅரேபியா (105 கிலோ), ஆஸ்திரேலியா (98 கிலோ), தென்கொரியா (95 கிலோ), பிரேசில் (94 கிலோ) உள்ளிட்ட நாடுகள் வருகின்றன.

    ஐ.நா. உருவாக்கியிருக்கும் இந்த புள்ளி விவரங்களில் வெறும் உணவுக் கழிவுகள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. இது இல்லாமல், காகிதம், பிளாஸ்டிக், துணிகள் மற்றும் பிற கழிவுகளையும் சேர்த்தால், இந்த அளவு இன்னும் அதிகரிக்கும் என்றே சொல்லப்படுகிறது. அதன்படி, பார்க்கும் போது, இந்தியாவில் ஒரு நாளைக்கு சராசரியாக 0.35 கிலோ முதல் 0.6 கிலோ வரை என எடுத்துக் கொண்டால், ஆண்டுக்கு சுமார் 125 கிலோ முதல் 200 கிலோ வரை மொத்த கழிவுகள் உருவாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பழைய செல்போன், வயர்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் என ஆண்டுக்கு சுமார் 2 கிலோ வரை மின் கழிவுகளை உருவாக்குகின்றனர் என்ற மற்றொரு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

    உணவுக்கழிவோ, எலெக்ட்ரானிக் கழிவோ எதுவாக இருந்தாலும் அவற்றை மறுசுழற்சி செய்தால் மனித குலத்துக்கு பயன் தரும்.

    ×