search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jasprit Bumrah"

    • ரன் சேசிங்கில் ரோகித், இஷான் கிஷன் பேட்டிங் செய்த விதம், ஆட்டத்தை முன் கூட்டியே முடிப்பது எங்களுக்கு முக்கியமானதாக இருந்தது.
    • மும்பை அணியில் பும்ரா இருப்பது எனது அதிர்ஷ்டம். நான் அவரிடம் கேட்கும் ஒவ்வொரு முறையும் அவர் விக்கெட்டுகளைப் எடுத்து தருகிறார்.

    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று மும்பையில் நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் தோற்கடித்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்தது. கேப்டன் டு பிளிசிஸ் 61 ரன்னும், படிதார் 50 ரன்னும், தினேஷ் கார்த்திக் 53 ரன்னும் எடுத்தனர். மும்பை தரப்பில் பும்ரா 5 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் விளையாடிய மும்பை, 15.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்து வென்றது. தொடர்ந்து இஷான் கிஷன் 69 ரன்னும், ரோகித் சர்மா 38 ரன்னும், சூர்ய குமார் யாதவ் 52 ரன்னும் எடுத்தனர்.

    வெற்றி குறித்து மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-

    வெற்றி பெறுவது எப்போதும் அற்புதமானது. நாங்கள் வெற்றி பெற்ற விதம் சிறப்பாக இருந்தது. இம்பாக்ட் பிளேயர் விதியால் கூடுதல் பந்து வீச்சாளரைப் பயன்படுத்த முடிகிறது. இது எனக்கு கூடுதல் பயனை அளித்தது. ரன் சேசிங்கில் ரோகித் சர்மா, இஷான் கிஷன் பேட்டிங் செய்த விதம், ஆட்டத்தை முன் கூட்டியே முடிப்பது எங்களுக்கு முக்கியமானதாக இருந்தது.

    இந்த ஆடுகளத்தில் இலக்கு குறைவாக இருந்ததால், ரன் ரேட்டை உயர்த்த நினைத்தோம். மும்பை அணியில் பும்ரா இருப்பது எனது அதிர்ஷ்டம். நான் அவரிடம் கேட்கும் ஒவ்வொரு முறையும் அவர் விக்கெட்டுகளைப் எடுத்து தருகிறார். அவருக்கு அனுபவமும் நம்பிக்கையும் அதிகம். பெங்களூரு கேப்டன் டு பிளிசிஸ் சில இடங்களில் பந்தை அடித்தார். அது போன்று வேறு வீரர்கள் அடித்து நான் பார்த்ததில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பெங்களூரு கேப்டன் டு பிபெலிசிஸ் கூறும்போது, ஆட்டத்தில் பனி ஒரு பெரிய பங்கை வகிக்கும் என்று எங்களுக்குத் தெரியும். எங்களுக்கு 215-220 ரன்கள் தேவைப்பட்டது. 190 ரன் போதுமானதாக இல்லை. பனி படிந்தவுடன் மிகவும் கடினமாக இருந்தது. பந்தை பலமுறை மாற்றினோம். மும்பை அணி வீரர்கள் எங்கள் பந்துவீச்சாளர்களை நிறைய தவறுகளைச் செய்ய வைத்தார்கள். முக்கியமான கட்டங்களில் முக்கிய விக்கெட்டுகளை இழந்தோம். பும்ரா சிறப்பாக பந்து வீசினார். மலிங்கா போன்ற ஒருவர் 20 ஓவர் கிரிக்கெட டில் சிறந்த பந்துவீச்சாளராக இருந்தார். அதை தற்போது பும்ரா வைத்துள்ளார் என்றார்.

    மும்பை அணி 2-வது வெற்றியை பெற்றது. பெங்களூரு 5-வது தோல்வியை சந்தித்தது.

    • பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • மும்பை தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 4 ஓவர்களில் 21 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

    மும்பை:

    10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 196 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 53 ரன்களுடன் (23 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 4 ஓவர்களில் 21 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

    இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி அதிரடியாக விளையாடி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 69 ரன்கள் எடுத்தார்.

    இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் பும்ரா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். பெங்களூருவுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை கபளீகரம் செய்த முதல் பவுலர் என்ற பெருமையை பும்ரா பெற்றார். பும்ரா 21 ரன் வழங்கி 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

    • 2015-ல் பும்ராவை மும்பை விடுவிக்க விரும்பிய போது அதை ரோகித் நிராகரித்தார்.
    • இதேபோல 2016-ல் பாண்ட்யாவை மும்பை விடுவிக்க விரும்பிய போது அதையும் ரோகித் நிராகரித்தார்.

    மும்பை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 16 சீசன்கள் முடிந்துவிட்டன. 17-வது ஐ.பி.எல். போட்டி வருகிற 22-ந் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.

    இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஐ.பி.எல். கோப்பையை அதிகபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், தலா 5 தடவை கைப்பற்றியுள்ளன. சென்னை அணிக்கு டோனியும், மும்பை அணிக்கு ரோகித் சர்மாவும் 5 முறை கோப்பையை பெற்றுக் கொடுத்தனர்.

    இந்த ஐ.பி.எல் . சீசனில் மும்பை அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக இல்லை. அவரை நீக்கிவிட்டு ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் கேப்டனாக நியமித்துள்ளது.

    இந்த நிலையில் ரோகித் சர்மா குறித்து மும்பை இந்தியன்ஸ் ஆகியவை அணிக்காக ஆடிய விக்கெட் கீப்பர் பார்தீவ் படேல் மனம் திறந்து உள்ளார்.

    பும்ரா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோரை மும்பை அணி விடுவிக்க விரும்பிய போது அவர்களுக்கு ஆதரவாக ரோகித் சர்மா இருந்தார் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பார்த்தீவ் படேல் கூறியதாவது:- 

    ரோகித் சர்மா எப்போதுமே வீரர்களுக்கு ஆதரவாக இருப்பார். அதற்கு மிகப்பெரிய உதாரணம், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா ஆவார்கள். பும்ரா 2014-ம் ஆண்டு முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்தார். 2015-ல் அவர் முதல் சீசனை விளையாடிய போது சிறப்பாக அமையவில்லை.

    இதனால் அவரை விடுவிக்க மும்பை அணி நிர்வாகம் விரும்பியது. ஆனால் அந்த வீரர் பிரகாசிப்பார். இதனால் அவரை அணியில் தொடர்ந்து வைத்து இருக்க வேண்டும் என்று பும்ராவுக்கு ஆதரவாக ரோகித் சர்மா தெரிவித்தார். அதற்கான பலனை நாங்கள் அடுத்த சீசனில் பார்த்தோம். பும்ரா அபாரமாக பந்து வீசினார்.

    இதே நிலைதான் ஹர்திக் பாண்ட்யாவுக்கும் இருந்தது. 2015-ல் இணைந்தார். 2016-ல் அவருக்கு மோசமாக இருந்தது. அவரை நீக்க மும்பை அணி விரும்பியது. அப்போது ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஆதரவாக ரோகித்சர்மா செயல்பட்டார்.

    இவ்வாறு பார்த்தீவ் படேல் கூறியுள்ளார்.

    குஜராத் டைட்டன்ஸ் அணி ஐ.பி.எல்லில் அறிமுகமானபோது ஹர்திக் பாண்ட்யா மும்பை அணியில் இருந்தது. குஜராத்துக்கு கேப்டன் ஆனார். குஜராத் அணி முதல் சீசனிலேயே கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார். கடந்த சீசனில் இறுதிப் போட்டி வரை நுழைந்தது. தற்போது இந்த சீசனில் அங்கிருந்து மீண்டும் மும்பை அணிக்கு மாற்றமாகி கேப்டனாக பணியாற்ற உள்ளார்.

    • இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7-ந் தேதி தொடங்குகிறது.
    • ஒரு பேட்டர் மற்றும் ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு ஓய்வு வழங்கப்படவுள்ளது.

    இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 4 போட்டிகள் முடிவடைந்தன. இதன் முடிவில் 3-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

    இந்த தொடரில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும் அடுத்து நடந்த 3 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற மார்ச் 7-ந் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் 5-வது போட்டிக்கான இந்திய அணியில் இருந்து 2 முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஒரு பேட்டர் மற்றும் ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு ஓய்வு வழங்கப்படவுள்ளது.

    அந்த வகையில் கேஎல் ராகுல், பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.ஏற்கனவே இருவரும் 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.
    • முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்தியா 2- 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்தியா 2- 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, கே.எல். ராகுல் ஆகியோர் விலகியுள்ளதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

    பணிச்சுமை கருதி பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளதாகவும், காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால் கே.எல்.ராகுல் விலகியுள்ளதாகவும் பி.சி.சி.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பும்ராவுக்கு பதிலாக முகேஷ் குமார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இவர்கள் இருவரும் விலகிய நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விவரம் பின்வருமாறு;-

    ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரஜத் படிதார், சர்பராஸ் கான், துருவ் ஜூரேல், கே.எஸ்.பாரத், படிக்கல், அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், அகாஷ் தீப்.

    • இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலை.
    • பும்ரா விளையாட மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை மூன்று போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கிறது.

    இதனிடையே இரு அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (பிப்ரவரி 23-ம் தேதி) துவங்குகிறது. அந்த வகையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    இதே போன்று கே.எல். ராகுல் நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாடுவாரா என்பது அவரின் உடல்நிலையை பொருத்தே முடிவு செய்யப்படும் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

    மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விடுவிக்கப்பட்ட முகேஷ் குமார் நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக களமிறங்கவுள்ளார். முன்னதாக முகமது சிராஜ் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது விடுவிக்கப்பட்டு, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.

    நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன்:

    ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ராஜத் படிதர், சர்பராஸ் கான், துருவ் ஜூரெல், கே.எஸ். பரத் (விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ரவிசந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார் மற்றும் ஆகாஷ் தீப்.

    • இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி வரும் 23-ம் தேதி ராஞ்சியில் நடைபெற உள்ளது.
    • பணிச்சுமை காரணமாக அவருக்கு ஏற்கனவே 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

    ராஞ்சி:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முடிவடைந்துள்ள 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி வரும் 23-ம் தேதி ராஞ்சியில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியிலிருந்து ஜஸ்பிரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணிச்சுமை காரணமாக அவருக்கு ஏற்கனவே 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இருப்பினும் அந்த போட்டியிலிருந்து மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

    இதனால் 4-வது டெஸ்ட் போட்டியிலிருந்து பும்ராவிற்கு ஓய்வு அளிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 4-வது போட்டியின் முடிவை பொறுத்தே அவர் கடைசி போட்டியில் இடம்பெறுவாரா இல்லையா என்பது தெரிய வரும் என தகவல் வெளியாகியுள்ளது. 

    • 2021-ம் ஆண்டு பும்ரா- சஞ்சனா இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
    • கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் பும்ரா - சஞ்சனா கணேசன் தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, தொலைக்காட்சி தொகுப்பாளரும் மாடலுமான சஞ்சனா கணேசனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2021-ம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் பும்ரா - சஞ்சனா கணேசன் தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    அதன்பின் குழந்தையுடன் நேரம் செலவிடும் புகைப்படங்கள் பும்ரா அவ்வப்போது வெளியிட்டு வந்தார். ஆனால் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை அதிகளவில் பதிவிடவில்லை.

    இந்நிலையில் பும்ரா - சஞ்சனா கணேசன் ஜோடி இணைந்து காதலர் தினத்தை முன்னிட்டு விளம்பர வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டனர். அந்த வீடியோவுக்கு ரசிகர் ஒருவர் அண்ணியின் உடல் கொஞ்சம் குண்டாக உள்ளது என்று உருவக் கேலி செய்தார்.

     

    அந்த கமெண்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சஞ்சனா கணேசன், "உன் பள்ளியில் கொடுக்கப்படும் அறிவியல் புத்தகத்தில் உள்ள பாடத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாது. ஆனால் ஒரு பெண்ணின் உடல் வடிவம் பற்றி இங்கு கருத்து கூறுகிறாய்.. ஒழுங்காக இங்கிருந்து ஓடிவிடு" என்று பதில் அளித்துள்ளார். இந்த பதில் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

    2014-ம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்ட சஞ்சனா கணேசன் இறுதிச்சுற்று வரை சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 253 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • பும்ரா 34 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    விசாகப்பட்டினம்:

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 396 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

    இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விரைவில் ஆட்டமிழந்தனர். அதிலும் குறிப்பாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை விரைவாக கைப்பற்றி அசத்தினார்.

    இதனால் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 253 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும், அக்சர் படேல் 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் பும்ரா புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் குறைந்த பந்துகளில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற மாபெரும் வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார்.

    அந்த பட்டியல்;

    1. ஜஸ்பிரித் பும்ரா - 6781 பந்துகள்

    2.உமேஷ் யாதவ் - 7661 பந்துகள்

    3.முகமது ஷமி - 7755 பந்துகள்

    4. கபில் தேவ் - 8378 பந்துகள்

    5. அஸ்வின் - 8380 பந்துகள்

    இதே போல ஆசிய வேகப்பந்து வீச்சாளர்களில் குறைந்த போட்டிகளில் 150 விக்கெட்டுகள் எடுத்து பாகிஸ்தான் வீரர்கள் அக்தர் - இம்ரான் கானை (இருவரும் 37 போட்டிகளில்) பின்னுக்கு தள்ளி 2-வது இடத்தை பும்ரா (34 போட்டிகளில்) பிடித்துள்ளார்.

    முதல் இடத்தில் வக்கார் யூனிஸ் உள்ளார். அவர் 27 டெஸ்ட் போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    • இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • பும்ராவின் செயலுக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதற்கான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலையில் உள்ளது.

    இந்த போட்டியின் போது பும்ரா விதியை மீறலில் ஈடுபட்டதாக அவர் மீது ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.

    இந்த போட்டியில் 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து பேட்டிங் செய்த போது ஆட்டத்தின் 81-வது ஓவரை பும்ரா வீசினார். அப்போது 1 ரன் எடுப்பதற்கு ஓடி வந்த ஆலி போப்பை வேண்டுமென்றே பும்ரா தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளார். இதற்கு ஐசிசி கணடனம் தெரிவித்துள்ளது.

    இந்த செயல் வீரர்கள் மற்றும் வீரர் ஆதரவு பணியாளர்களுக்கான ஐசிசி நடத்தை விதி 2.12ஐ மீறியதாக கருதப்படுகிறது. இந்த சம்பவத்தில் பும்ராவுக்கு எந்த அபராதமும் விதிக்கவில்லை. கடந்த 24 மாதங்களில் முதல் முறையாக அவர் குற்றத்தில் ஈடுபட்டிருப்பதால் அபராதம் விதிக்கப்படவில்லை. ஆனால் அவரது நன்னடத்தை குறைபாட்டுக்கான புள்ளி சேர்க்கப்பட்டது. அடுத்த 1 ஆண்டிற்குள் மேலும் 3 புள்ளிகளை பெற்றால் 1 போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும்.

    கள நடுவர்கள் பால் ரீஃபெல் மற்றும் கிறிஸ் கஃபேனி, மூன்றாவது நடுவர் மரைஸ் எராஸ்மஸ் மற்றும் நான்காவது நடுவர் ரோஹன் பண்டிட் ஆகியோரால் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதையடுத்து, பும்ரா மீது கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பும்ராவின் குற்றத்துக்கு முறையான விசாரணை தேவையில்லை, அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் எனவும், பும்ரா மீது விதிக்கப்பட்ட கண்டனத்தை ஐசிசி எலைட் பேனல் ஆஃப் மேட்ச் ரெஃப்ரிகளின் ரிச்சி ரிச்சர்ட்சன் ஏற்றுக்கொண்டார்.

    • கேப்டனாக அணியை வழிநடத்துவது மிகவும் சிறந்த ஒன்று.
    • ஆஸ்திரேலியாவில் பேட் கம்மின்ஸ் வேகப்பந்துவீச்சாளராக இருந்து கொண்டு அணியை சிறப்பாக வழி நடத்துகிறார்.

    இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை ஐதராபாத்தில் தொடங்குகிறது.

    இந்நிலையில் தனக்கு கொடுக்கப்பட்ட கேப்டன் பதவி குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக பும்ரா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது எப்போதுமே சிறந்த ஒன்று. அதிலும் கேப்டனாக அணியை வழிநடத்துவது மிகவும் சிறந்த ஒன்று. அந்தப் போட்டியில் நாங்கள் தோல்வியை தழுவினாலும் எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை நினைத்து நான் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் எல்லா முடிவுகளிலும் ஈடுபடுவதை நான் மிகவும் விரும்பினேன். கேப்டன்ஷிப் வாய்ப்பு கிடைத்தால் யார்தான் செய்ய மாட்டார்கள்.

    ஆஸ்திரேலியாவில் பேட் கம்மின்ஸ் வேகப்பந்துவீச்சாளராக இருந்து கொண்டு அணியை சிறப்பாக வழி நடத்துகிறார். வேகப்பந்துவீச்சாளர்கள் புத்திசாலித்தனமான வீரர்கள். அவர்கள் கடினமான வேலையை பார்க்கிறார்கள். போட்டியில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு நிச்சயம் தெரியும்.

    என்று பும்ரா கூறியுள்ளார்.

    மார்ச் 2022-ல் திட்டமிடப்பட்ட எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் பும்ரா இந்தியாவின் கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.
    • பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் விராட் கோலி 6-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

    துபாய்:

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. மேலும் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என ஆஸ்திரேலியா அணி முழுமையாக கைப்பற்றியது.

    இந்நிலையில் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் விராட் கோலி 6-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இதேபோல் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 10-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய வீரர் பும்ரா 4-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

    டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் 10 இடங்களில் கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஸ்சாக்னே, டேரில் மிட்செல், விராட் கோலி, ஹாரி புரூக், பாபர் அசாம், உஸ்மான் கவாஜா, ரோகித் சர்மா ஆகியோர் உள்ளனர்.

    டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ரவிச்சந்திரன் அஷ்வின் முதல் இடத்திலும், பேட் கம்மின்ஸ், ககிசோ ரபாடா, பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் 2 முதல் 5 இடங்களிலும் உள்ளனர். டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

    ×