செய்திகள்

குல்தீப்பின் செயல்பாட்டுக்கு கும்ப்ளே தான் காரணம்: ரெய்னா

Published On 2017-10-13 10:08 GMT   |   Update On 2017-10-13 10:08 GMT
குல்தீப்பின் செயல்பாட்டுக்கு கும்ப்ளே தான் காரணம் என இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா சொல்கிறார்.

மும்பை:

மும்பையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியதாவது:-

நான் கடுமையாக உழைத்து வருகிறேன். நீங்கள் உங்களுடைய கிரிக்கெட்டை அனுபவித்து விளையாடி வந்தால் வாழ்க்கையில் கடினம் என்று எதுவும் கிடையாது. அதை நான் எப்போதும் செய்து வருகிறேன்.

இந்திய அணியில் இடம் பெறாமல் இருப்பது பற்றி சிந்திக்கவில்லை. எனது ஆட்டத்தை அனுபவித்து (உள்ளூர் போட்டி) விளையாடி வருகிறேன். நேரம் வரும்போது வாய்ப்பு கிடைக்கும்.

சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதற்கு காரணம் கும்ப்ளே தான். அவருடன் இணைந்து குல்தீப் யாதவ் கடிமையாக உழைத்தார். ஐ.பி.எல். போட்டியின் போது குல்தீப் யாதவிடம் பேசி இருக்கிறேன்.

அப்போது அவர், அனில் கும்ப்ளேவின் யோசனைகளை தான் பயன்படுத்திய தாக கூறினார். குல்தீப்யாதவ் கும்ப்ளேவின் தயாரிப்பு. அவர் ஆஸ்திரேலியா வீரர் பிரட் ஹாக் போல் சிறப்பாக பந்துவீசுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, கிரிக்கெட் வாரியம் நடத்திய உடல் தகுதி தேர்வில் தோற்றது குறித்து ரெய்னாவிடம் கேட்டபோது, ‘அதுபற்றி கிரிக்கெட் வாரியத்திடம் பேசுவேன்’ என்றார்.

Tags:    

Similar News