செய்திகள்

நமது பெண்கள் சிறப்பாக விளையாடி தோற்றார்கள்: பிரதமர் மோடி

Published On 2017-07-24 01:12 GMT   |   Update On 2017-07-24 01:12 GMT
நமது பெண்கள் சிறப்பாக விளையாடினார்கள் என்று மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தோல்வி குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற பெண்கள் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்தியா 9 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது.

பின்னர் தோல்வி குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, “நம்முடைய பெண் கிரிக்கெட் வீரர்கள் இன்று மிகவும் சிறப்பாக விளையாடினர்கள். உலகக் கோப்பையில் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்திய பெண்கள் அணியை நினைத்து பெருமை கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.

இதேபோல், பல்வேறு தரப்பினரும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் மற்றும் சேவாக் பாராட்டி உள்ளனர்.

இந்திய பெண்கள் சிறப்பாக விளையாடியதாக கூறிய விளையாட்டுத் துறை மந்திரி விஜய் கோயல், தாயகம் திரும்பும் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் என்றார்.



உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்மன் ப்ரீட் கவுருக்கு பாஞ்சாப் அரசு மாநில போலீஸ் பிரிவில் அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
Tags:    

Similar News