செய்திகள்

முகமது ஷமியுடன் தகராறு செய்த வாலிபர்கள் கைது

Published On 2017-07-19 06:46 GMT   |   Update On 2017-07-19 06:46 GMT
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியுடன் தகராறில் ஈடுபட்டதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கொல்கத்தாவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். தனது காரை குடியிருப்பில் நிறுத்த முயன்ற போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் இடையூறு செய்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த வாலிபருக்கு ஆதரவாக மேலும் 2 பேர் வந்ததால் கைகலப்பானது. இது குறித்து முகமது ஷமி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஷமியுடன் தகராறு செய்த 3 வாலிபர்களையும் கைது செய்தனர். இவர்கள் அங்கு சலூன்கடை நடத்தி வருவது விசாரணையில் தெரிய வந்தது. 
Tags:    

Similar News