செய்திகள்

பழைய நிலைக்கு திரும்பி, சிறப்பாக பந்து வீசக்கூடிய வலுவான வீரர் மலிங்கா: ஜெயசூர்யா

Published On 2017-05-19 15:05 GMT   |   Update On 2017-05-19 15:05 GMT
பழைய நிலைக்கு திரும்பி சிறப்பான வகையில் பந்து வீசக் கூடிய வலுவான வீரர் மலிங்கா என்று சனத் ஜெயசூர்யா கூறியுள்ளார்.
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. யார்க்கர் பந்து வீச்சில் வல்லவரான இவர், ஐ.பி.எல். தொடருக்கு முன் நீண்ட காலமாக காயத்தால் ஓய்வில் இருந்தார். இதனால் தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் சிறப்பான முறையில் பந்து வீச்சை வெளிப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில் 35 வயதாகும் மலிங்கா மீண்டும் பாஃர்முக்கு திரும்பி, சிறந்த வகையில் பந்து வீசுவதற்கு போதுமான வலுவான வீரர் என்று சனத் ஜெயசூர்யா கூறியுள்ளார்.

இதுகுறித்து ஜெயசூர்யா கூறுகையில் ‘‘பாஃர்ம் இழந்து தவிப்பது கிரிக்கெட்டில் ஒரு அங்கம்தான். என்னுடைய 17-18 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் தொடர்ந்து பாஃர்மில் இருந்த வீரரை நான் பார்த்ததில்லை.

மலிங்கா கொஞ்சம் பாஃர்ம் இல்லாமல் தவிக்கிறார். ஆனால் அதில் இருந்து மீண்டு சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்துவதற்கான வலுவான வீரர் மலிங்கா. இன்றைய போட்டியில், மும்பை அணி இறுதிப் போட்டிக்கு நுழைந்தால், அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பார்’’ என்றார்.
Tags:    

Similar News