search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மும்பை இந்தியன்ஸ்"

    • காயத்திலிருந்து குணமடைந்து பயிற்சி மேற்கொண்டு வரும் அவர் ஏற்கனவே 2 போட்டிகளை தவறவிட்டார்.
    • அந்த 2 போட்டியிலும் மும்பை அணி தோல்வியை தழுவியுள்ளது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், டி20 தரவரிசையில் நம்பர் 1 பேட்ஸ்மேனுமான சூர்யகுமார் யாதவ் ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார்.

    காயத்திலிருந்து குணமடைந்து பயிற்சி மேற்கொண்டு வரும் அவர் ஏற்கனவே 2 போட்டிகளை தவறவிட்டார். அந்த 2 போட்டியிலும் மும்பை அணி தோல்வியை தழுவியுள்ளது. இதனால் மும்பை ரசிகர்கள் அவர் எப்போது களத்திற்கு திரும்புவார் என்று ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

    சூர்யகுமார் யாதவ் சமீபத்தில் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அவர் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவர் போட்டிக்கான முழு உடல் தகுதியை எட்டாததால் மேலும் சில ஐ.பி.எல். ஆட்டங்களை தவறவிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • ஐதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
    • ஹென்சிர்ச் கிளாசன் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 8 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ரன்களை குவித்தது.

    இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன்களை குவித்த அணி என்ற பெருமையை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பெற்றது. முன்னதாக ஆர்.சி.பி. அணி 263 ரன்களை குவித்தது ஐ.பி.எல். வரலாற்றில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக இது இருந்தது. நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் டிராவில் ஹெட், அபிஷேக் சர்மா மற்றும் ஹென்சிர்ச் கிளாசன் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.


     

    டிராவில் ஹெட் 24 பந்துகளில் 62 ரன்களையும், அபிஷேக் சர்மா 23 பந்துகளில் 63 ரன்களையும், கிளாசன் 34 பந்துகளில் 80 ரன்களையும் குவித்தனர். இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன்களை குவித்த அணி என்ற பெருமையை பெற்றதை அடுத்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம், அதிரடியாக ஆடிய வீரர்களுக்கு டிரெசிங் ரூமில் சிறப்பு பரிசுகளை வழங்கியது. அதன்படி ஹென்ரிச் கிளாசனுக்கு அதிக கனமுள்ள சங்கிலி அணிவிக்கப்பட்டது.

    அளவில் பெரிதாக காட்சியளிக்கும் சங்கிலி தங்கத்தால் செய்யப்பட்டதாகவே இருக்கும் என்றும் அதன் விலை ரூ. 80 லட்சம் வரை இருக்கும் என்றும் நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.


    • ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் (277 ரன்கள்) என்ற சாதனையை ஹைதராபாத் படைத்தது
    • 49 ரங்களுக்கு ஆல் அவுட்டான பெங்களூரு அணியின் சாதனை இன்னமும் முறியடிக்கப்படாமலே உள்ளது

    ஐபிஎல் 2024 சீசனில் நேற்று ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் குவித்தது.

    பின்னர் 278 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் அடித்து 31 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    இந்த போட்டியில் ஏராளமான சாதனைகள் படைக்கப்பட்டன. குறிப்பாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் (277 ரன்கள்) என்ற சாதனையை ஹைதராபாத் படைத்தது. இதற்கு முன்பு பெங்களூரு அணி 263 ரன்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது.

    சொன்னபோனால் இந்த போட்டிக்கு முன்பு வரை ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் மற்றும் குறைந்தபட்ச ஸ்கோர் என்ற 2 சாதனையையும் பெங்களூரு அணி தான் வைத்திருந்ததது. 49 ரன்களுக்கு ஆல் அவுட்டான பெங்களூரு அணியின் சாதனை இன்னமும் முறியடிக்கப்படாமலே உள்ளது.

    இந்நிலையில், நேற்றைய போட்டிக்கு பிறகு, பெங்களூருவில் அதிகபட்ச ஸ்கோர் சாதனை முறியடிக்கப்பட்டிருக்கலாம், ஆனால் பெங்களூருவில் குறைந்த பட்ச ஸ்கோர் சாதனையை முறியடிக்கவே முடியாது என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.

    அதே போல், ஐபிஎல் வரலாற்றில், இதுவரை ஒருமுறை கூட கோப்பையை பெங்களூரு அணி வென்றதில்லை. ஆனால் பெண்கள் பிரிமியர் லீக் ஆரம்பித்த 2-வது வருடத்திலேயே பெங்களூரு அணி கோப்பையை தட்டி தூக்கியது. அந்நேரமும் பெங்களூரு அணியை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பவுண்டரி மற்றும் சிக்ஸ் அடிக்கப்பட்ட போட்டிகள் பட்டியலில் சிஎஸ்கே-ஆர்ஆர் போட்டியுடன் முதல் இடம் (69).
    • ஆண்களுக்கான டி20 போட்டிகளில் அதிக சிக்ஸ் அடிக்கப்பட்ட போட்டி இதுதான்.

    ஐபிஎல் 2024 சீசனில் நேற்று ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் குவித்தது.

    பின்னர் 278 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் அடித்து 31 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    இந்த போட்டியில் ஏராளமான சாதனைகள் படைக்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

    1. ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும் (277-3).

    2. பவுண்டரி மற்றும் சிக்ஸ் அடிக்கப்பட்ட போட்டிகள் பட்டியலில் சிஎஸ்கே-ஆர்ஆர் போட்டியுடன் முதல் இடம் (69).

    3. ஒரு இன்னிங்சில அதிக சிக்ஸ் அடித்ததில் மும்பை இந்தியன்ஸ் 20 உடன் 2-வது இடம். ஆர்சிபி 21 சிக்ஸ் உடன் முதல் இடத்தில் உள்ளது. மேலும் ஆர்சிபி, டெக்கான் சார்ஜர்ஸ் ஆகிய அணிகள் 20 சிக்ஸ் அடித்துள்ளன.

    4. ஆண்களுக்கான டி20 போட்டிகளில் அதிக சிக்ஸ் அடிக்கப்பட்ட போட்டி இதுதான். இரண்டு அணிகளும் சேர்த்து 38 சிக்ஸ் அடித்துள்ளன.

    5. ஐபிஎல் போட்டியில் அதிக சிக்ஸ் அடிக்கப்பட்ட போட்டி இதுதான். இரண்டு அணிகளும் சேர்ந்த 38 சிக்ஸ் அடித்துள்ளன. இதற்கு முன்னதாக 2018-ல் ஆர்சிபி-சிஎஸ்கே அணிகள், 2020-ல் ஆர்ஆர்-சிஎஸ்கே அணிகள், 2023-ல் ஆர்சிபி- சிஎஸ்கே அணிகள் விளையாடிய போட்டிகளில் 33 சிக்ஸ் அடிக்கப்பட்டுள்ளது.

    6. இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். மொத்தம் 523 (277+246) ரன் அடிக்கப்பட்டுள்ளது.

    7. ஆண்கள் டி20 போட்டிகளில் அதிகபட்சமாக அடிக்கப்பட்ட ரன்னும் இதுவாகும். இதற்கு முன் தென்ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 517 ரன் அடிக்கப்பட்டிருந்தது.

    8. ஐபிஎல் கிரிக்கெட்டில் 2-வது பேட்டிங் செய்த அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்னதாக 2020-ல் பஞ்சாப் அணிக்கெதிராக ஆர்ஆர் 226 ரன் அடித்து வெற்றி பெற்றுள்ளது.

    9. மும்பை இந்தியன்ஸ் அணியின் டாப் 6 பேட்ஸ்மேன்கள் தலா 20 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர். ஐபிஎல் வரலாற்றில் இவ்வாறு அடிப்பது இதுதான் முதல் முறையாகும்.

    10. இரு அணிகளிலும் நான்கு பந்து வீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டது இதுதான் முதல்முறை.

    11. முதல் 10 ஓவரில் ஐதராபாத் அணி 148 ரன்கள் குவித்தது. இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் 10 ஓவரில் அதிக ரன் அடித்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் 141 ரன் அடித்து 2-வது இடத்தில் உள்ளது.

    • மந்தமாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா 20 பந்துகளில் 24 ரன்களில் வெளியேறினார்
    • அதிரடியாக விளையாடிய திலக் வர்மா 64 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல் தொடரின் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஐதராபாத் அணி மும்பை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டனர்.

    ஹெட், அபிஷேக் சர்மா, கிளாசென் ஆகியோரின் அரைசதத்தால் இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் கிளாசென் 80 ரன், அபிஷேக் சர்மா 63 ரன், ஹெட் 62 ரன் எடுத்தனர்.

    இதையடுத்து 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் மும்பை அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் -இஷான் கிஷன் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி காட்டினர். இதனால் 3 ஓவரில் மும்பை 50 ரன்களை கடந்தது.

    அதிரடியாக விளையாடி இஷான் 34 ரன்னிலும் ரோகித் 26 ரன்னிலும் அவுட் ஆகினர். இதனையடுத்து நமன் மற்றும் திலக் வர்மா ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 14 பந்தில் 30 ரன்கள் குவித்த நமன் அவுட் ஆனார். அதிரடியாக விளையாடிய திலக் வர்மா 64 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    மந்தமாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா 20 பந்துகளில் 24 ரன்களில் வெளியேறினார். இறுதி கட்டத்தில் ரொமாரியோ ஷெப்பர்ட்- டிம் டேவிட் முடிந்த அளவுக்கு வெற்றிக்கு போராடினர். இறுதியில் ஐதராபாத் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • 2021-ல் அபு தாபியில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 131 ரன்கள் அடித்திருந்தது.
    • 2014-ல் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ஐதராபாத் அணிக்கெதிராக 131 ரன்கள் அடித்திருந்தது.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத்- மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதல் 2 ஓவரில் 18 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் ருத்ர தாண்டவம் ஆடியது. அறிமுக வீரரான மபாகா 3-வது ஓவரை வீசினார். இந்த ஓவரில் டிராவிட் ஹெட் இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரி விளாசினார். இந்த ஓவரில் ஐதராபாத் அணிக்கு 22 ரன்கள் கிடைத்தது.

    4-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 5-வது ஓவரின் முதல் பந்தில் மயங்க் அகர்வால் 13 பந்தில் 11 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்த ஓவரில் டிராவிஸ் ஹெட் 3 பவுண்டரிகள் விளாசினார். ஒரு விக்கெட்டை இழந்தாலும் 13 ரன்கள் எடுத்தது.

    5-வது ஓவரை கோட்சி வீசினார். இந்த ஓவரில் அபிஷேக் சர்மா ஒரு சிக்ஸ், டிராவிஸ் ஹெட் ஒரு சிக்ஸ் மற்றும் இரண்டு பவுண்டரி அடிக்க 23 ரன்கள் கிடைத்தது. இதன்மூலம் பவர்பிளேயில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 1 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் குவித்தது.

    7-வது ஓவரை சாவ்லா வீசினார். இந்த ஓவரில் அபிஷேக் சர்மா 3 சிக்ஸ் விளாசினார். இதனால் இந்த ஓவரில் 21 ரன்கள் கிடைத்தது. ஸ்கோர் 100 ரன்னைத் தாண்டியது. 8-வது ஓவரை கோட்சி வீசினார். இந்த ஓவரில் டிராவிஸ் ஹெட் 24 பந்தில் 62 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இந்த ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு பைஸ் பவுண்டரியுடன் 15 ரன்கள் கிடைத்தது. 9-வது ஓவரை ஹர்திப் பாண்ட்யா வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ் உடன் 11 ரன்கள் கிடைத்தது. 10-வது ஓவரை மபாகா வீசினார். இந்த ஓவரில் அபிஷேக் சர்மா இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரி விளாசினார். இதனால் 20 ரன்கள் கிடைத்தது. மொத்தமாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் 10 ஓவரில் 148 ரன்கள் குவித்தது.

    இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் வரலாற்றில் முதல் 10 ஓவரில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் இதற்கு முன் 2021-ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக 131 ரன்கள் குவித்துள்ளது. 2014-ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக பஞ்சாப் கிங்ஸ் 131 ரன்கள் எடுத்துள்ளது.

    2008-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக டெக்கான் சார்ஜர்ஸ் 130 ரன்கள் எடுத்துள்ளது. 2016-ல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிராக ஆர்சிபி 129 ரன்கள் எடுத்துள்ளது.

    • இந்த போட்டியில் ஐதராபாத்தில் உள்ள ராஜூவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது.
    • ஐதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த வனிந்து ஹசரங்கா காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடவில்லை.

    ஐபிஎல் தொடரின் 8-வது லீக் போட்டியில் ஐதராபாத் மற்றும் மும்பை அணிகள் இன்று மோதுகிறது. இந்த போட்டியில் ஐதராபாத்தில் உள்ள ராஜூவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    முதல் போட்டியில் இரு அணிகளும் தோல்வியடைந்த நிலையில் முதல் வெற்றியை எதிர் நோக்கி இரு அணிகளும் களமிறங்குகிறது.

    ஐதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த வனிந்து ஹசரங்கா காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடவில்லை. மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவரும் இந்த போட்டியில் களமிறங்கவில்லை.

    • மும்பை மோதிய முதல் போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • இன்றைய போட்டி தொடங்குவதற்கு முன்பு இருந்தே ஹர்திக் பாண்ட்யாவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பை தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர்.

    ஐபிஎல் தொடரின் 8-வது லீக் போட்டியில் ஐதராபாத் மற்றும் மும்பை அணிகள் இன்று மோதுகிறது. இந்த போட்டியில் ஐதராபாத்தில் உள்ள ராஜூவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் இரு அணிகளும் தோல்வியடைந்த நிலையில் முதல் வெற்றியை எதிர் நோக்கி இரு அணிகளும் களமிறங்குகிறது.

    இந்நிலையில் இந்த போட்டி இன்னும் சிறிது நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில் ரசிகர்கள் மும்பை கா ராஜா ரோகித் சர்மா என முழக்கமிட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் இன்றைய போட்டி தொடங்குவதற்கு முன்பு இருந்தே எதிர்ப்பை தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர்.

    மும்பை இந்தியன்ஸ் அணி முதல் போட்டியில் குஜராத் அணியிடம் மோதியது. இந்த போட்டி அகமதாபாத்தில் நடந்தது. இந்த போட்டியில் ரோகித் சர்மாவுக்கு ஆதரவு ரசிகர்கள் மும்பை கா ராஜா ரோகித் சர்மா என முழக்கமிட்டனர். அதேபோல இந்த போட்டியிலும் முழக்கமிட்டு வருகின்றனர்.

    • மோகித் சர்மா, ரஷித் கான் 16, 17-வது ஓவர்களில் முறையே 4 மற்றும் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தனர்.
    • மும்பை அணிக்கு கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை என்ற நிலையில் 12 ரன்களே அடிக்க முடிந்தது.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது.

    மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு கட்டத்தில் 15 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்திருந்தது. டெவால்டு பிரேவிஸ் 37 பந்தில் 46 ரன்களும், திலக் வர்மா 10 பந்தில் 15 ரன்கள் எடுத்தும் களத்தில் இருந்தனர்.

    மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு கடைசி 5 ஓவரில், அதாவது கடைசி 30 பந்தில் 43 ரன்கள் தேவைப்பட்டது. இது எளிதான இலக்குதான். மேலும் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் குஜராத் பந்து வீச்சாளரக்ள் துல்லியமாக பந்து வீச இயலாது என கருதப்பட்டது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 11 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் போட்டியில் வெற்றி பெற்றிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் 16-வது ஓவரில் மோகித் சர்மா 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து பிரேவிஸ்-ஐ அவுட்டாக்கினார். அடுத்து டிம் டேவிட் களம் இறங்கினார். அந்த நேரத்தில் 25 பந்தில் 40 ரன்கள் தேவைப்பட்டது. அதிரடியாக களம் இறங்கி ஹர்திக் பாண்ட்யா சிக்ஸ், பவுண்டரி பறக்க விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், டிம் டேவிட் களம் இறக்கப்பட்டார். 17-வது ஓவரை ரஷித் கான் வீசினார். இந்த ஓவரில் ரஷித் கான் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இந்த ஓவரில் அவர் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்ததன் காரணமாகவே மும்பை அணிக்கு நெருக்கடி அதிகமானது.

    அதன்பின் 3 ஓவரில் மும்பைக்கு அணிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரில் மோகித் சர்மா 9 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். 27 ரன் தேவை என்ற நிலையில் 19-வது ஓவரில் ஜான்சன் 8 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

    19 ரன்கள் தேவை என்ற நிலையில் கடைசி ஓவரில் உமேஷ் யாதவ் 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். மும்பை இந்தியன்ஸ் அணி 6 ரன்னில் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தது.

    இந்த நிலையில் மும்பை அணி தோல்விக்கு ஹர்திக் பாண்ட்யா எடுத்த முடிவுதான் காரணம் என இர்பான் பதவி விமர்சனம் செய்துள்ளார்.

    டிம் டேவிட்டிற்குப் பதிலாக ஹர்திக் பாண்ட்யா களம் இறங்கியிருக்க வேண்டும். ஆனால், ரஷித் கான் பந்தை எதிர்கொள்ள ஹர்திக் பாண்ட்யா விரும்பவில்லை. இதனால் டிம் டேவிட்டை களம் இறக்கினார். இது மும்பை அணியின் தோல்விக்கு வழி வகுத்தது. இது மோசமான கேப்டன்சி என விமர்சித்துள்ளார்.

    18-வது ஓவரின் கடைசி பந்தில் டிம் டேவிட் (10 பந்தில் 11 ரன்) ஆட்டமிழந்ததும் ஹர்திக் பாண்ட்யா களம் இறங்கினார். இவர் கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்து ஆட்டமிழந்தார்.

    • அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது
    • குஜராத் அணிக்கு கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யா, இந்த முறை மும்பை அணி கேப்டனாக களமிறங்குகிறார்

    17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளது. அதன்படி, 2-வது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று இரவு 7.30 மணிக்கு மோதுகினறன.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது.

    கடந்த இரண்டு சீசன்களாக குஜராத் அணிக்கு கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யா, இந்த முறை மும்பை அணி கேப்டனாக களமிறங்குகிறார். அதேநேரம், குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இன்று முதல்முறையாக களமிறங்க உள்ளது. இதனால், இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    அகமதாபாத் மைதானம் கடந்த தொடரில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்ததால், பல போட்டிகளில் ரன் மழை பொழிந்தது. இன்றைய போட்டியிலும் ஆடுகளம் அதேநிலையில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற மும்பை ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்குகிறது.

    • ஹர்திக் பாண்ட்யா அந்த அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.
    • ஹர்திக் பாண்ட்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    2024 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று (மார்ச் 22) துவங்கியது. பிரமாண்ட துவக்க விழாவை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இந்த சீசனின் முதல் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.

    இந்த நிலையில், ஐ.பி.எல். தொடர் துவங்கும் முன்பு பல அணிகளின் கேப்டன்கள் மாற்றப்பட்டனர். எனினும், மும்பை மற்றும் சென்னை அணிகளின் கேப்டன்கள் மாற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ரோகித் சர்மா நீக்கப்பட்டு, ஹர்திக் பாண்ட்யா அந்த அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

     

    மும்பை அணியின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. கேப்டன் மாற்றப்பட்ட காரணத்தால், மும்பை இந்தியன்ஸ் அணியின் சமூக வலைதள அக்கவுண்ட்களின் ஃபாளோவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.

    அந்த வகையில் ஐ.பி.எல். போட்டிகள் துவங்கும் முன்பு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், "ஐ.பி.எல். எனக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளது. ஐ.பி.எல். எனக்கு அடையாளத்தை கொடுத்துள்ளது. ஐ.பி.எல். இல்லையெனில் நான் பரோடாவில் இருந்திருப்பேன். ஆனால் இந்த நிலையில் இருந்திருக்க மாட்டேன். அங்கு வேறொரு ஹர்திக் இருந்திருப்பார்," என்று தெரிவித்துள்ளார்.



    இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்பட உள்ளார்.
    • சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் செயல்பட உள்ளார்.

    ஐபிஎல் தொடர் 2008-ம் ஆண்டு முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அதிக முறை கோப்பையை வென்றவர்கள் பட்டியலில் மும்பை (5 முறை)மற்றும் சென்னை அணிகள் உள்ளன. நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை சென்னை சேப்பாக்கத்தில் தொடங்க உள்ளது. முதல் லீக் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகிறது.

    இந்நிலையில் இன்று சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ருதுராஜ் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சென்னை ரசிகர்கள் மட்டுமன்றி அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக இருந்தது.

    ஐபிஎல் தொடரில் கேப்டன்களாக செயல்பட்ட டோனி, ரோகித், விராட் ஆகியோர் இல்லாமல் இருப்பது இதுவே முதல் முறையாகும். விராட் கோலி ஆர்சிபி கேப்டன் பதவியில் 2021-ம் ஆண்டு விலகினார். அவர் விலகினாலும் ஆர்சிபி எந்த நிகழ்ச்சி வைத்தாலும் அதில் விராட் முக்கிய வீரராக கலந்து கொள்வார். அவருக்கான மரியாதையை ஆர்சிபி நிர்வாகம் விராட்டுக்கு அளித்து வருகிறது. இதனை தொடர்ந்து நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் நீக்கப்பட்டு பாண்ட்யா நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து டோனி கேப்டன் பதவியில் இருந்து நீங்கி ருதுராஜ் கேப்டனாக செயல்பட உள்ளார்.

    ஐபிஎல் தொடரில் கேப்டன்களாக வலம் வந்த இந்த மூவரும் சாதாரண வீரர்களாக களமிறங்குவது வேதனையாக உள்ளது என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் சில ஐபிஎல் 2024 கேப்டன்கள் போட்டோஷூட்டில் டோனி இல்லாததை பார்க்க முடியவில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர் அவர் அணியில் இருந்தால் போதும் என கூறி வருகின்றனர்

    கடந்த ஆண்டு ஐபிஎல் கேப்டன்கள் போட்டோஷுட்டில் ரோகித் சர்மா இல்லாமல் நடந்தது. ஆனால் அந்த முறை கேப்டனாக ரோகித் செயல்பட்டார். ஆனால் இந்த முறை அவர் சாதாரண வீரராக மட்டுமே செயல்படுவார் என்பது மும்பை ரசிகர்களுக்கும் சோகமான ஒன்றுதான்.

    ×