இந்தியா
கள்ளச்சாரய மாபியாக்களுக்கு ஆளும் கட்சி பாதுகாப்பு- ராகுல்காந்தி குற்றச்சாட்டு
- குஜராத்தில் கள்ளச்சாராயத்தால் பல குடும்பங்கள் மோசமான நிலைமைக்கு ஆளாகி உள்ளன.
- பல பில்லியன் மதிப்புள்ள போதை பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
குஜராத் மாநிலம் அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டத்தில் கடந்த 25-ந்தேதி கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் பலியானார்கள். 97 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
குஜராத்தில் கள்ளச்சாராயத்தால் பல குடும்பங்கள் மோசமான நிலைமைக்கு ஆளாகி உள்ளன. அங்கு பல பில்லியன் மதிப்புள்ள போதை பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. குஜராத்தில் கள்ளச்சாராய மாபியாக்களுக்கு ஆளும் கட்சி பாதுகாப்பு அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.