செய்திகள்
மத்திய மந்திரி அனுராக் தாகூர், பாஜக எம்.பி பர்வேஷ் வர்மா பிரசாரம் செய்ய தடை - தேர்தல் ஆணையம்
டெல்லி சட்டசபைத் தேர்தலில் மத்திய மந்திரி அனுராக் தாகூர் 72 மணி நேரத்துக்கும், பாஜக எம்பி பர்வேஷ் வர்மா 96 மணி நேரத்துக்கும் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் பிப்ரவரி 8-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளன. மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது.
பா.ஜ.க.வின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து மத்திய மந்திரி அனுராக் தாக்கூர், பர்வேஷ் சாகிப் சிங் வர்மா எம்.பி. ஆகியோரின் பெயர்களை நீக்கும்படி தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது.
டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டம் குறித்து இரு தலைவர்களும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நிலையில் தேர்தல் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
இந்நிலையில், டெல்லி சட்டசபைத் தேர்தலில் மத்திய மந்திரி அனுராக் தாகூர் 72 மணி நேரத்துக்கும், பாஜக எம்பி பர்வேஷ் வர்மா 96 மணி நேரத்துக்கும் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி சட்டசபைத் தேர்தலில் மத்திய மந்திரி அனுராக் தாகூர் 72 மணி நேரத்துக்கும், பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா 96 மணி நேரத்துக்கும் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது,