இந்தியா

5 - ஆம் கட்ட மக்களவை தேர்தல் தொடங்கியது

Published On 2024-05-20 01:53 GMT   |   Update On 2024-05-20 01:53 GMT
  • நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.
  • ஐந்தாம் கட்ட மக்களவை தேர்தலில் 6 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 49 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.

அதன்படி, 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19-ந் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26-ந் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ந் தேதி 3-ம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த 13-ந் தேதி 4-ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது. இதனிடையே, இன்று 5-ம் கட்ட தேர்தல் தொடங்கியது.

ஐந்தாம் கட்ட மக்களவை தேர்தலில் 6 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 49 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. இதுவரை 23 மாநிலங்களில் நான்கு கட்டங்களாக 379 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குபதிவு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

உத்திரபிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 7, பீகார், ஒடிசாவில் தலா 5 தொகுதிகளில் வாக்குபதிவு நடை பெறுகிறது. ராகுல்காந்தி போட்டியிடும் ரேபரேலி, ராஜ்னாத் சிங் போட்டியிடும் லக்னோ தொகுதிகளில் வாக்குபதிவு நடைப்பெறுகிறது. வடக்கு மும்பை - பியூஷ்கோயல், லக்னோ - ராஜ்நாத், அமேதி - ஸ்மிருதி தொகுதியிலும் தேர்தல்.

ஐந்தாம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெறும் 49 தொகுதிகளில் மொத்தம் 695 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இன்று மாலை 6 மணி வரை வாக்குபதிவு நடைப்பெறுகிறது.

Tags:    

Similar News