6 மாதத்திற்குப் பிறகு கேதர்நாத் கோவில் ஏப்ரல் 22-ந்தேதி திறப்பு
- குளிர்காலம் என்பதால் கேதர்நாத் கோவில் மூடப்பட்டுள்ளது.
- மகா சிவராத்திரியான தினமான இன்று கோவில் திறக்கப்படும் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரகாண்டில் உள்ள கேதர்நாத் கோவில் குளிர்காலத்தை முன்னிட்டு சுமார் 6 மாத காலம் மூடப்படும். தற்போது வட மாநிலங்களில் கடுங்குளிர் நிலவி வருவதால் கோவில் மூடப்பட்டுள்ளது. குளிர் காலம் முடிவடைந்த பின்னர் ஏப்ரல் 22-ந்தேதி மீண்டும் கோவில் திறக்கப்படும் ஸ்ரீ பத்ரிநாத்- கேதர்நாத் கோவில் கமிட்டியின் மக்கள் தொடர்பு அதிகாரி ஹரிஷ் கவுர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் கோவில் திறப்பதற்கான மங்களகரமான தேதி மற்றும் நேரம் மகா சிவராத்திரி தினமான இன்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
கேதர்நாத்தில் உள்ள ஓம்கரேஷ்வர் 12 ஜோதிர்லிங்கத்தில் ஒன்றாகும். 9.5 குவிண்டால் மலர்களுடன் கோவில் அலங்கரிக்கப்பட்டு, தலைமை பூசாரி, கேதர்நாத் எம்.எல்.ஏ, கோவில் கமிட்டி தலைவர், மதத் தலைவர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடை திறக்கப்படும்.
பத்ரிநாத் கோவில் ஏப்ரல் 23-ந்தேதியும், கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்கள் ஏப்ரல் 19-ந்தேதி திறக்கப்படுகிறது.