செய்திகள்
டெல்லி காங்கிரஸ் தலைவராக சுபாஷ் சோப்ராவை நியமித்தார் சோனியா காந்தி
காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைவராக சுபாஷ் சோப்ரா என்பவரை கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி நியமனம் செய்துள்ளார்.
புதுடெல்லி:
காலியாக உள்ள டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தலைவரை காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி காங்கிரஸ் தலைவராக சுபாஷ் சோப்ரா என்பவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
மேலும், டெல்லி தேர்தல் குழு தலைவராக கீர்த்தி ஆசாத் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான ஒப்புதலை காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அளித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.