செய்திகள்
அரியானா சட்டசபை தேர்தல் - சிரோமணி அகாலி தளம் தனித்துப் போட்டி
அரியானா மாநில சட்டசபை தேர்தலில் சிரோமணி அகாலி தளம் தனித்துப் போட்டியிடும் என அக்கட்சி இன்று அறிவித்துள்ளது.
சண்டிகர்:
மகாராஷ்டிராவில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலும், அரியானாவில் முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் தலைமையிலும் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது.
இவ்விரு மாநிலங்களிலும் அடுத்த மாதம் 21-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் வெளியிட்டது. இந்த தேர்தல் அறிவிப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது.
இந்நிலையில், அரியானா சட்டசபை தேர்தலில் சிரோமணி அகாலி தளம் தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் மாநில தலைவர் தல்ஜித் சிங் சீமா அறிவித்துள்ளார்.