உள்ளூர் செய்திகள்

சேலம் அருகே விபத்து: லாரி, டிராக்டர், கார் அடுத்தடுத்து மோதி டிரைவர் பலி

Published On 2024-05-08 10:04 GMT   |   Update On 2024-05-08 10:04 GMT
  • விபத்தால் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாயைில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
  • விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்திய போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.

சேலம்:

சேலத்தில் இருந்து கோவை நோக்கி ஒரு கண்டெய்னர் லாரி இன்று காலை சென்று கொண்டிருந்தது.

இந்த லாரி சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் உத்தமசோழபுரம் பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் முன்னால் சென்ற டிராக்டர் மற்றும் கார் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் டிராக்டரை ஓட்டி வந்த நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதியை சேர்ந்த ராஜா (வயது 52) என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரின் உள்ளே இருந்த 3 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

அவர்களை கொண்டலாம்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்டனர். தொடர்ந்து அவர்கள் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தால் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாயைில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்திய போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்தை ஏற்படுத்திய கண்டெய்னர் லாரி டிரைவரை கொண்டலாம்பட்டி போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News