தமிழ்நாடு செய்திகள்
மீண்டும் செயல்பாட்டுக்கு வந்த சென்னை ஒன் செயலி- MTC
- சென்னை மாநகரப் பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு வழங்குவதில் தடை ஏற்பட்டது.
- யுபிஐ, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமான பணப்பரிமாற்றங்களை ஏற்க இயலாது என்றும் காலியில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை:
மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை மாநகரப் பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு வழங்குவதில் தடை ஏற்பட்டுள்ளதாக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் இன்று காலை தெரிவித்தது.
தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்படும் வரை நடத்துனர்கள், காகிதத்திலான பயணச்சீட்டுகள் மட்டுமே வழங்குவார்கள் என்றும் யுபிஐ, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமான பணப்பரிமாற்றங்களை ஏற்க இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை ஒன் செயலி வழக்கம்போல் செயல்படுவதாக MTC விளக்கம் அளித்துள்ளது. தங்கள் பயணங்களுக்கான டிக்கெட்டை தடையின்றி பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.