தமிழ்நாடு செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

Published On 2026-02-15 20:33 IST   |   Update On 2026-02-15 20:33:00 IST
  • இலங்கை தமிழர்களில் 40 சதவீதம் பேர் இந்திய மண்ணிலேயே பிறந்தவர்கள்.
  • இலங்கைத் தமிழர்களை சட்டவிரோதமாக குடியேறியவர்களாகக் கருதக்கூடாது.

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் சுமார் 89 ஆயிரம் இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர்.

40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்.

நீண்ட கால விசா வழங்குதல் உள்ளிட்ட நிலையான, மனிதாபிமான அடிப்படையிலான நிரந்தர தீர்வு காண வேண்டும்.

தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களில் 40 சதவீதம் பேர் இந்திய மண்ணிலேயே பிறந்தவர்கள்.

குடியுரிமை (அ) நீண்டகால விசா போன்ற நிலையான சட்டப்பூர்வமான தீர்வுகள் இலங்கை தமிழர்களுக்கு கிடைக்கவில்லை.

இலங்கைத் தமிழர்களை சட்டவிரோதமாக குடியேறியவர்களாகக் கருதக்கூடாது என்று அறிவித்திட வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News