search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shiromani Akali Dal"

    • பகவத் மான்-க்கு சீக்கியர்களின் வரலாறு தெரியவில்லை.
    • அவரை பார்க்கும்போது, அவரது அறிக்கையை கேட்கும்போது நாங்கள் கவலையாக உணர்கிறோம்.

    சிரோமணி அகாலி தளம் தலைவர் பஞ்சாப் முதல்வர் பகவத் மான்-ஐ கடுமையாக விமர்சனம் செய்தார். பகவத் மான் குறித்து சுக்பீர் சிங் பாதல் கூறியதாவது:-

    பகவத் மான்-ஐ நான் சீக்கியராக கருதவில்லை. அவர் அணிந்துள்ள தலைப்பாகை அவரை சீக்கியராக காட்டுகிறது. அவருக்கு சீக்கியர்களின் வரலாறு தெரியவில்லை. அவரை பார்க்கும்போது, அவரது அறிக்கையை கேட்கும்போது எங்கங்கு கவலையாக உள்ளது.

    இந்தியாவில் 18 சதவீதம் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஒற்றுமையாக இல்லாததால் அவர்களுக்கு என தலைவர் இல்லை. நாம் இரண்டு சதவீதம்தான் உள்ளோம். என்றபோதிலும் நாம் ஸ்ரீ அகால் தக்த் சாகிப் கீழ் ஒன்றிணைந்துள்ளோம்.

    அவர்கள் (ஆம் ஆத்மி) பஞ்சாபை சுரண்டி கொண்டிருக்கிறார்கள். பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பகவத் மான் கிடையாது.

     சீக்கியர்களை கொண்ட அனைத்து மாநிலங்களிலும் சிரோமணி அகாலி தளம் அமைப்புகளை தொடங்கும்.

    இவ்வாறு சுக்பீர் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.

    கடந்த ஆணடு பஞ்சாப் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் கட்சிகள் படுதோல்வியடைந்தன. 117 இடங்களை கொண்டு பஞ்சாபில் 92 இடங்களை பிடித்து ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

    • சுக்பீர் சிங் பாதலின் அதிகாரத்தை கேள்வி கேட்க வேண்டாம் என்று கட்சி தலைமை கேட்டுக்கொண்டது.
    • கர்னாலில் நடந்த கூட்டத்தில், புதிய கட்சியை வழிநடத்த ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது

    குருஷேத்ரா:

    பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் சக்பீர் சிங் பாதல் தலைமையிலான சிரோமணி அகாலி தளம் படுதோல்வியைத் தழுவியது. இதனைத் தொடர்ந்து கட்சித் தலைமையில் மாற்றம் செய்யப்படவேண்டும் என்ற கருத்து கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், சுக்பீர் சிங் பாதலின் அதிகாரத்தை கேள்வி கேட்க வேண்டாம் என்று கட்சி தலைமை கேட்டுக்கொண்டது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், சிரோமணி அகாலி தளம் கட்சியின் அரியானா மாநில தலைவர்கள் சிலர் கட்சியில் இருந்து விலகினர். மேலும், அவர்கள் ஒன்றிணைந்து அரியானாவில் புதிய கட்சியை தொடங்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர். இது சிரோமணி அகாலி தளம் கட்சிக்கு மேலும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    கட்சியில் இருந்து வெளியேறியவர்களில் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் அசந்த், எஸ்ஜிபிசியின் சிர்சா உறுப்பினர் குர்மீத் சிங் திலோகேவால் மற்றும் கட்சியின் மாநில மகளிர் அணித் தலைவி ஆகியோர் முக்கியமானவர்கள்.

    கர்னாலில் நடந்த கூட்டத்தில், புதிய கட்சியை வழிநடத்த ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டதாக ஒரு தலைவர் கூறினார். இந்தக் குழு அடுத்த இரண்டு மாதங்களில் அரியானாவின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று சீக்கியர்களை கட்சியில் இணைக்கும் பணிகளை மேற்கொள்ளும். அதன்பின்னர், கர்னாலில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு, அதில் மாநில செயற்குழு அறிவிக்கப்படும் என்றும் அந்த தலைவர் தெரிவித்தார்.

    பாஜக கூட்டணி வடமாநிலங்களில் ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் 8 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது.
    மக்களை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் இருந்தே பாஜக கூட்டணி அமோக முன்னிலைப் பெற்றது. 542 இடங்களில் 347 இடங்களை பெற்று அபார நிலையில் உள்ளது.

    டெல்லி (7), ஹரியானா (10) ஆகிய மாநிலங்களில் எல்லாத் தொகுதிகளிலும் பாஜக முன்னிலைப் பெற்றுள்ளது. ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமே அந்த கட்சியால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.

    13 தொகுதிகளை கொண்ட பஞ்சாபில் காங்கிரஸ் 8-ல் முன்னிலைப் பெற்றுள்ளது. பா.ஜனதா 2 இடங்களிலும், சிரோமணி அகாலி தளம் இரண்டு தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. கடந்த முறை நான்கு தொகுதிகளை வென்ற ஆம் ஆத்மி ஒரு தொகுதியில் மட்டுமே முன்னிலைப் பெற்றுள்ளது. பா.ஜனதா மற்றும் சிரோமணி அகாலி தளம் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது.
    சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கேட்டு ஷிரோமணி அகாலி தளம் சார்பில் இன்று ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட்டது. #AntiSikhRiots #ShiromaniAkaliDalProtest #HarsimratKaurBadal
    புதுடெல்லி:

    இந்தியாவில் 1984ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி அவரது பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து சீக்கியர்களுக்கு எதிராக மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான சீக்கியர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதிகாரப்பூர்வமாக 2800 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், சுமார் 8000 பேர் வரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் 34 ஆண்டு நிறைவையொட்டி, கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கேட்டு டெல்லியில் இன்று ஷிரோமணி அகாலி தளம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது.

    இதில், ஷிரோமணி அகாலி தளம் கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் என ஏராளமான சீக்கியர்கள் பங்கேற்றனர். 

    இப்போராட்டத்தில் பங்கேற்ற மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர் பாதல் கூறுகையில், ‘எங்கள் சமுதாயம் 34 ஆண்டுகளாக நீதி கேட்டு போராடி வருகிறது. ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமான பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். பலர் வீடுகளை இழந்தனர். இந்த கொடுமை இந்திய வரலாற்றில் ஒரு கரும்புள்ளி ஆகும். யாருக்கும் நீதி கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தை நீதித்துறை ஏன் தாமாக முன்வந்து விசாரிக்கவில்லை?’ என ஆதங்கம் தெரிவித்தார். #AntiSikhRiots #ShiromaniAkaliDalProtest #HarsimratKaurBadal
    2019 பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில், பா.ஜ.க தலைவர் அமித் ஷா இன்று பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலை சந்தித்து பேசினார். #amitshah #ParkashSinghBadal
    காந்திநகர்:

    2014 பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று பா.ஜ.க ஆட்சியில் அமர்ந்தது. அதன் பிறகு பா.ஜ.க மாநில அரசுகளை கைப்பற்றுவதில் வெற்றி கண்டது. இந்தியாவில் சுமார் 20 மாநிலங்களில் பா.ஜ.க நேரடியாகவும், கூட்டணியுடனும் ஆட்சி செய்து வருகிறது.

    பண பலம், மத்திய அரசின் செல்வாக்கினாலும் பா.ஜ.க. மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்ததாக அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

    இதையடுத்து, பல்வேறு கருத்து வேறுபாடுகள் காரணமாக பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து இருந்த கட்சிகள் கூட்டணியை முறித்துக் கொள்வதாக அறிவித்தன. சமீபத்தில் சிவ சேனா கட்சி இனி பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என்றும் தனித்து போட்டியிடப்போவதாகவும் அறிவித்தது. மேலும், பா.ஜ.க மீது பல்வேறு குற்றசாட்டுகளை நேரடியாகவே வைத்தது.

    அதற்கு முன்னதாக ஆந்திர முதல் மந்திரியும் பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக்கொண்டார். அதுமட்டுமன்றி மாநில எம்.பி.க்களையும் ராஜினாமா செய்ய வைத்து, பா.ஜ.க. கூட்டணிக்கு நெருக்கடி கொடுத்தார்.

    இப்படி, படிப்படியாக பா.ஜ.க.வின் செல்வாக்கு சரிந்துகொண்டு இருப்பது அக்கட்சியின் தலைமைக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பா.ஜ.க.வை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுகூட துவங்கி விட்டதால் பா.ஜ.க ஆட்டம் காண துவங்கியுள்ளது.

    எனவே, எதிர்வரும் 2019 பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் தீவிரமாக இருக்கும் பா.ஜ.க கூட்டணியை முறித்துக் கொண்ட கட்சிகளையும், இதர பிற கட்சிகளையும் சந்தித்து கூட்டணி குறித்து ஆலோசனை செய்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக நேற்று சிவ சேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்ரேவை அவரது இல்லத்தில் அமித் ஷா சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    அதைத்தொடர்ந்து இன்று சண்டிகரில் பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரும், சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவருமான பிரகாஷ் சிங் பாதலை நேரில் சந்தித்து அமித் ஷா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பாராளுமன்ற தேர்தலை மையப்படுத்தி, அதற்கான கூட்டணி அமைக்கவே இதுபோன்ற சந்திப்புகள் நிகழ்வதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். #amitshah #ParkashSinghBadal
    ×