search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Golden Temple"

    • 8-ந் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு அழைத்து செல்லப்படும்.
    • அடுத்த மாதம் 12-ந் தேதி மாலை கும்பகோணம் மற்றும் தஞ்சாவூருக்கு மீண்டும் வந்தடைகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்ராவில் உள்ள மாதா வைஷ்ணவ தேவி கோயிலுக்கு நேரடியாக சுற்றுலா ரெயிலை வரும் ஜூலை 1-ம் தேதி முதல் இயக்க இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் ( ஐ.ஆர்.சி.டி.சி ) முடிவு செய்துள்ளது.

    பாரத் கவ்ரவ் சுற்றுலா ரெயில் வரிசையில் இயக்கப்படும் இந்த ரெயில் வரும் ஜூலை 1-ம் தேதி திருவனந்தபுரம், கொச்சுவேலியில் காலை புறப்பட்டு திருச்சி, தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்திற்கு அன்று மாலை வந்து சேரும்.

    பின்னர் அங்கிருந்து ஆன்மிக சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னை வழியாக ஜூலை 3-ம் தேதி ஹைதராபாத் நகரில் டெக்கான் சார்மினார், கோல்கொண்டா, ஜூலை 5-ம் தேதி ஆக்ராவில் தாஜ்மகால், மதுராவில் கிருஷ்ணர் பிறப்பிடம், ஜூலை 6-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்ராவில் மாதா வைஷ்ணவ் தேவி கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டு ள்ளது.

    பின்னர், அங்கிருந்து 8-ம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பொற்கோயில் மற்றும் இந்திய, பாகிஸ்தான் எல்லையான இட்டாரி (வாஹா) பார்த்த பின்னர் புதுடெல்லியில் குதுப்மினார், இந்தியா கேட், இந்திராகாந்தி அருங்காட்சியகம், அஷர்தம் கோயில், லோட்டஸ் கோயில் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படும்.

    அதன் பின்னர் இந்தச் சிறப்பு சுற்றுலா ரெயில் அடுத்த மாதம் 12-ம் தேதி மாலை கும்பகோணம் மற்றும் தஞ்சாவூருக்கு மீண்டும் வந்தடைகிறது. இந்த ரெயிலில் சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமே அனுமதி. ஒரு நபருக்குச் சாதாரண படுக்கை வசதி ரூ. 22,350-ம், குளிர்சாதன படுக்கை வசதியுடன் ரூ.40,380-ம் எனக் கட்டணம் நிர்ணயி க்கப்பட்டுள்ளது.

    கூடுதல் விபரங்கள் மற்றும் முன்பதி விற்கு 82879 31965 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தஞ்சை மாவட்ட ரெயில்வே உபயோகி ப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

    • இந்தப் பதக்கத்துக்கு சக்தி அம்மா சிறப்பு பூஜைகள் செய்து சக்தி கணபதிக்கு சமர்ப்பித்தார்.
    • இந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வேலூர் அடுத்த அரியூரில் கடந்த 2007- ம் ஆண்டில் 1500 கிலோ கிராம் சுத்த தங்கத்தை பயன்படுத்தி செய்த தங்க தகடுகளால் ஸ்ரீபுரம் தங்க கோவில் கட்டப்பட்டது.

    அமிர்தசரத்தில் இருக்கும் பொற்கோவிலின் உட்புற விமானத்தில் உள்ள 750 கிலோ கிராம் தங்க அளவைவிட 2 மடங்கு அதிக தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

    தங்க கோவிலில் 1700 கிலோ வெள்ளியிலான சக்தி கணபதி சன்னதி உள்ளது. இந்த விநாயகருக்கு உலகிலேயே மிகப்பெரிய அளவிலான சுமார் 840 கேரட் எடை கொண்ட ஒரே கல்லாலான கேது கிரகத்திற்குரிய வைடூரிய கல்லால் ஆன பதக்கம் செய்யப்பட்டுள்ளது.

    இந்தப் பதக்கத்துக்கு சக்தி அம்மா சிறப்பு பூஜைகள் செய்து சக்தி கணபதிக்கு சமர்ப்பித்தார். இந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பஞ்சாப்பில் பொற்கோவில் அருகே மீண்டும் மர்ம பொருள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • ஏற்கனவே கடந்த சனிக்கிழமை மர்ம பொருள் வெடித்ததில் ஒருவர் காயமடைந்தார்.

    அமிர்தசரஸ்:

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவில் அருகே நேற்று நள்ளிரவு 12 மணியவில் மீண்டும் மர்ம பொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

    தகவலறிந்து போலீஸ் கமிஷனர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு நடத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சனிக்கிழமை இரவு மர்ம பொருள் வெடித்ததில் சில கட்டிடங்களின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. இதில் ஒருவர் காயமடைந்தது நினைவிருக்கலாம்.

    பொற்கோவிலுக்கு அருகே அடுத்தடுத்து மர்ம பொருட்கள் வெடித்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

    ஆன்-லைன் விற்பனை நிறுவனத்தில் தரை விரிப்பில் பொற்கோவில் படம் இடம் பெற்றதை கண்டித்து அமெரிக்காவை சேர்ந்த சீக்கியர்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. #Amazon #Doormat #Toilet #GoldenTemple
    நியூயார்க்:

    பிரபல ஆன்-லைன் விற்பனை நிறுவனம் அமேசான். இந்த நிறுவனம் மூலம், விற்பனை செய்யப்பட்ட தரை விரிப்புகளில் சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவிலின் புகைப்படம் இடம் பெற்றிருந்ததாக தெரிகிறது.

    இது சீக்கியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை கண்டித்து அமெரிக்காவை சேர்ந்த சீக்கியர்கள் கூட்டமைப்பு அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பியது.



    அதில், இதுபோன்று ஆட்சேபனைக்குரிய பொருட்களை விற்பனை செய்ய நிரந்தர தடைவிதிக்க வேண்டும் எனவும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாது என உறுதி அளிக்க வேண்டும் என்றும் அமேசான் நிறுவனத்துக்கு சீக்கியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

    சீக்கியர்கள் ஆட்சேபனை தெரிவித்த சில மணி நேரத்தில் சர்ச்சைக்குரிய அந்த பொருட்கள் அமேசான் விற்பனை தளத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது.  #Amazon #Doormat #Toilet #GoldenTemple 
    ×