செய்திகள்
ராணுவ தளபதி பிபின் ராவத்

ராணுவ தளபதி பிபின் ராவத் நாளை ஸ்ரீநகர் செல்கிறார்

Published On 2019-08-29 14:42 GMT   |   Update On 2019-08-29 14:42 GMT
சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில், ராணுவ தளபதி பிபின் ராவத் முதல் முறையாக ஸ்ரீநகருக்கு நாளை செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அதிகாரத்தை மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன் அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க அப்பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ராணுவ தளபதி பிபின் ராவத் முதல் முறையாக ஸ்ரீநகருக்கு நாளை செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்த பயணத்தின் போது, காஷ்மீர் பள்ளத்தாக்கில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பிபின் ராவத் ஆய்வு செய்ய உள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News