search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராணுவ தளபதி பிபின் ராவத்"

    சர்ஜிக்கல் தாக்குதல் என்பது ரகசியமாக இருந்தால்தான் அது ஆச்சர்யமாக இருக்கும். எனவே அது ரகசியமாகவே இருக்கட்டும் என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். #BipinRawat #SurgicalStrike
    புதுடெல்லி:

    ஜம்மு-காஷ்மீரில் மூன்று போலீசார் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கத்தால் கடத்திக் கொல்லப்பட்டனர். மேலும், சர்வதேச எல்லையில் பாதுகாப்பு படை வீரர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த கொலை பாகிஸ்தான் ராணுவத்தால் நிகழ்த்தப்பட்டதாக குற்றம் சாட்டிய இந்தியா அமைதி பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அறிவித்தது.

    இதுகுறித்து பேசிய ராணுவ தளபதி பிபின் ராவத், பாகிஸ்தான் ராணுவத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பாகிஸ்தான் ராணுவம் போருக்கு தயாராக உள்ளது என அந்நாட்டு ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் ஆசிப் கபூர் தெரிவித்தார். 

    இந்நிலையில், சர்ஜிக்கல் தாக்குதல் என்பது ரகசியமாக இருந்தால்தான் அது ஆச்சர்யமாக இருக்கும். எனவே அது ரகசியமாகவே இருக்கட்டும் என ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பயங்கரவாத செயலும், பேச்சுவார்த்தையும் ஒருசேர நடக்க முடியாது. இந்த ஒரு காரணத்தாலேயே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு நடக்கவில்லை.

    நாம் பாகிஸ்தான் அரசுக்கு தெளிவான தகவலை அனுப்பியுள்ளோம். பயங்கரவாதிகளை ஊக்குவிக்கவில்லை என தனது நடவடிக்கைகள் மூலம் பாகிஸ்தான் நிரூபிக்க வேண்டும். பேச்சுவார்த்தை குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும். இந்த சூழ்நிலையில் அரசு எடுத்தது சரியான முடிவு தான். 

    மற்ற நாடுகளுக்கு எதிராக தனது மண்ணை பயங்கரவாதிகள் பயன்படுத்த அனுமதிக்கவில்லை என அந்நாடு கூடுகிறது. ஆனால், பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் அங்கு உள்ளன. பயங்கரவாதிகள் எல்லை தாண்டி வருகின்றனர். பி.எஸ்.எப்., வீரரை கழுத்தறுத்து கொன்றது போன்ற கொடூர செயல்களை பாகிஸ்தான் செய்து வருகிறது. இது முதல் முறையல்ல.

    சர்ஜிக்கல் தாக்குதல் என்பது ரகசியமாக இருந்தால்தான் அது ஆச்சர்யமாக இருக்கும். எனவே அது ரகசியமாகவே இருக்கட்டும் என தெரிவித்துள்ளார். #BipinRawat #SurgicalStrike
    ஜம்மு-காஷ்மீரில் அமல்படுத்தப்பட்டுள்ள கவர்னர் ஆட்சியால் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் பாதிப்பு ஏற்படாது என ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
    ஜம்மு:

    இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கடத்திச் சென்று கொல்லப்பட்ட ராணுவ வீரர் அவுரங்கசிப் குடும்பத்தாரை சமீபத்தில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    ரம்ஜான் நோன்பு காலத்தை கருத்தில் கொண்டு காஷ்மீரில் ராணுவத்தின் சார்பில் அமல்படுத்தப்பட்டிருந்த தற்காலிக போர் நிறுத்தம் ரம்ஜான் பண்டிகைக்கு பின்னர் நீட்டிக்கப்படமாட்டாது என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக அறிவித்தார்.

    இதை தொடர்ந்து அங்கு பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கைகளில் ராணுவத்தினர் வழக்கம்போல் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை பா.ஜ.க. நேற்று விலக்கி கொண்டதை தொடர்ந்து அங்கு கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கவர்னர் ஆட்சியால் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் பாதிப்பு ஏற்படாது என ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, டெல்லியில் இன்று பேட்டியளித்த பிபின் ராவத், ‘காஷ்மீரில் ரம்ஜானுக்காக நாங்கள் போர் நிறுத்தம் அறிவித்தோம். அதனால் என்ன ஆனது? என்பதை நாம் பார்த்தோம்.

    அங்கு கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதால் எங்கள் நடவடிக்கைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. வழக்கம்போல் பயங்கரவாதிகளுக்கு எதிரான எங்களது பணிகள் தொடரும். எவ்வித அரசியல் தலையீடும் எங்களுக்கு இருக்காது’ என குறிப்பிட்டார். #JKGovernorRule #BipinRawat 
    ×